Jump to content

தமிழரை மாற்றான் பிள்ளையாகவே இன்னும் கருதுவதை உணர்த்திய ஜனாதிபதியின் பொது மன்னிப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1573547268523.jpeg

 

போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை 

கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது. 
 
 
இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
 
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இரு குழந்தைகளையும் அநாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரிதவிக்க விட்டு விட்டு இவரது மனைவி கடந்த ஆண்டு 15.03.2018 அன்று இறந்துவிட்டார்.
 
இவர் அவரது மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது.
இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வன்னி  மாவட்டம் பூராக ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தையும் சர்வதேச நாடுகளின் அவதானத்தையும் பெற்று விடுதலையை துரிதப்படுத்த அனைத்து பொது அமைப்புக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருந்தார்கள். 
 
 
 
ஆனால் இந்த மனித நேயக் கோரிக்கையில் இருந்த நியாயத்தினை விட போதைவஸ்துக்கு அடிமையாகி அப்பாவிப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பினை வழங்கவதனூடாக அதில் அதிக நியாயம் கண்டுள்ளாரா ஜனாதிபதி அவர்கள் என மேலும் கேள்வி எழுப்பி உள்ளார் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள். மேலும் ஜனாதிபதியின் இப்படியான செயற்பாடுகள் தமிழர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்துப் பெரும்பான்மை கட்சிளும் மாற்றான் தாய்ப் பிள்ளைகளாகப் பார்ப்பதையே உணர்த்துகிறது. 
 
 
 
மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு கொடுக்க தனது அதி உச்ச அதிகாரத்தினை பயன்படுத்திய ஜனாதிபதிக்கு பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமலேயே சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஞாபகம் வராதது தமிழர்களை இவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார். 
 
ரிஸ்கான் 
(ஊடகப் பிரிவு 
ஜனநாயக மக்கள் முன்னணி
Link to comment
Share on other sites

இவருக்கு கிடைக்கக்கூடாத பதவி கிடைத்துவிட்ட்து। எனவே அவர் என்ன செய்கிறார் எண்டு அவருக்கே விளங்குவதில்லை। அந்த மனுஷனுடன் உள்ளவர்களும் சரியான ஆலோசனை சொல்வதில்। எந்த காரியம் செய்தாலும் மூக்குடைபடுவதுதான் வழக்கமாகிவிட்ட்து। இனி வேறு வழி இல்லை , மனுஷன் விடைபெறுமட்டும் பொறுமை காக்க வேண்டியதுதான்। நல்ல காலம் இந்த பதவியை ஒரு வருடத்தால் குறைத்தார்கள்। ஜனகன் கவலைப்படுவதிலும் நியாயம் உண்டு। என்ன செய்வது। Blood is thicker than water ।

Link to comment
Share on other sites

image_d953b7ae0c.jpg

 


image_599ad7f675.jpgTo assess this claim, we used data from the Grave Crimes Abstract (GCA) from the Sri Lanka Police. Since the MP specified “girls”, we considered reported cases of rape of women under 16, which is classified as statutory rape. 


GCA data records the number of statutory rape cases reported from 2015 to 2018 in a range from 1,438 to 1,686 per annum. The average reported cases of statutory rape during this period was 1,556. The MP’s claim of 1,600 aligns with the data. 


Therefore, we classify the MP’s statement as TRUE.

http://www.dailymirror.lk/fact_check/MP-Anura-Kumara-Dissanayaka-correctly-quotes-statutory-rape-statistics/328-177432

In an open letter, Shramantha Jude Jayamaha, who was convicted over the Royal Park murder and released on a presidential pardon recently, requested society to give him another chance.

“I ask for your understanding, because that is the kind of country we live in - where there is hope for even the worst criminal and mercy and forgiveness is a way of life. Please give me another chance,” he said.

In a lengthy letter, Mr. Jayamaha elaborated on his story, his family background, the murder, conviction, prison life and the pardon.

He said he has no adequate words to express his grief towards what has come upon the Johnson family and said he was so ashamed for what has happened.

http://www.dailymirror.lk/top_story/Please-give-me-another-chance-Shramantha/155-177831

Link to comment
Share on other sites

10 minutes ago, Lara said:

இது முன்னைய சஜித்தின் பதிவு.

இதேபோன்று பல 'சிறப்பான பதிவுகளை' மைத்திரியும் நல்லாட்சி ஆரம்பத்தில் தெரிவித்தவர்.

12 minutes ago, Lara said:

இது முன்னைய சஜித்தின் பதிவு.

தமிழ் அரசியல் கைதிகள், குற்றம் சாட்டப்பட்டு ஆனால் குற்றம் நிரூபிக்கப்படமால் இருக்கும் கைதிகளை பற்றி ஏதாவது பதிவு இட்டுள்ளார்? இல்லை என்றால் அதுவும் ஒரு ஏமாற்றம் தானே ?

Link to comment
Share on other sites

2 minutes ago, ampanai said:

இதேபோன்று பல 'சிறப்பான பதிவுகளை' மைத்திரியும் நல்லாட்சி ஆரம்பத்தில் தெரிவித்தவர்.

சஜித் சொல்வதற்காக அதை செய்வார் என நான் கூற வரவில்லை. ஒரு தகவலுக்காக இணைத்தேன்.

Link to comment
Share on other sites

58 minutes ago, ampanai said:

தமிழ் அரசியல் கைதிகள், குற்றம் சாட்டப்பட்டு ஆனால் குற்றம் நிரூபிக்கப்படமால் இருக்கும் கைதிகளை பற்றி ஏதாவது பதிவு இட்டுள்ளார்? இல்லை என்றால் அதுவும் ஒரு ஏமாற்றம் தானே ?

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “குற்றம் சுமத்தப்படாமல், விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என கூறப்பட்டிருக்கிறது.

விஜயகலா “சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் மிகுதி அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்­படுவர். அதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன” என கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

Sri_Lankan_Presidential_Election_2015.pn

மும்முரமாக வடக்கு கிழக்கு மக்கள் இவருக்கு வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ எதுவுமில்லை. இந்த தேர்த்தலும் அப்படியே அமையும்.

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

இன்றைய அமைச்சர்களும் தமிழருக்கு ஒரு நீதியும் சிங்களவரக்ளுக்கு இன்னொரு நீதியையும் அமுல்படுத்தி தலைவர்கள் ஆகிறார்கள். 

Link to comment
Share on other sites

44 minutes ago, nunavilan said:

Sri_Lankan_Presidential_Election_2015.pn

மும்முரமாக வடக்கு கிழக்கு மக்கள் இவருக்கு வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ எதுவுமில்லை. இந்த தேர்த்தலும் அப்படியே அமையும்.

சஜித் தமிழர்களுக்கு ஏதும் தருவார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அம்பனை கேட்ட கேள்விக்காக தான் அதை குறிப்பிட்டேன்.

மைத்திரி ஐதேக இல்லை. அவர் பொது வேட்பாளராக போட்டியிட்டவர். ஜனாதிபதியாக வந்த பின்னர் அவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடுகள் இருந்தன.

சஜித் ஐதேக. இவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடு இருந்தாலும் இருவரும் ஒரே கட்சி. அது ஒரு நன்மை.

இவர் ஜனாதிபதியானால் இவரது அதிகாரத்தை ரணில் குறைக்கிறாரோ, அல்லது ரணிலை விடுத்து வேறு யாரையும் இவர் பிரதமராக்குவாரோ, அல்லது இப்படியே தொடர்வார்களோ என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

19 minutes ago, Lara said:

சஜித் தமிழர்களுக்கு ஏதும் தருவார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. அம்பனை கேட்ட கேள்விக்காக தான் அதை குறிப்பிட்டேன்.

மைத்திரி ஐதேக இல்லை. அவர் பொது வேட்பாளராக போட்டியிட்டவர். ஜனாதிபதியாக வந்த பின்னர் அவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடுகள் இருந்தன.

சஜித் ஐதேக. இவருக்கும் ரணிலுக்கும் முரண்பாடு இருந்தாலும் இருவரும் ஒரே கட்சி. அது ஒரு நன்மை.

இவர் ஜனாதிபதியானால் இவரது அதிகாரத்தை ரணில் குறைக்கிறாரோ, அல்லது ரணிலை விடுத்து வேறு யாரையும் இவர் பிரதமராக்குவாரோ, அல்லது இப்படியே தொடர்வார்களோ என்பதெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்பது சத்தியமாக எனக்கு தெரியாது.
நான் சொல்ல வந்த செய்தியின் சாராம்சம் தமிழ் மக்கள் வாக்களித்து வென்ற மைத்திரியும் சரி இம்முறை தமிழ் மக்களால் வெல்பவரும் அப்படியே என எதிர்வு  கூறுகிறேன். 

நீங்கள் வீதியால் போகும் அப்பாவி நாய்க்கு கல் எறிகிறீர்கள்.😝😝

Link to comment
Share on other sites

2 minutes ago, nunavilan said:

உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்பது சத்தியமாக எனக்கு தெரியாது.
நான் சொல்ல வந்த செய்தியின் சாராம்சம் தமிழ் மக்கள் வாக்களித்து வென்ற மைத்திரியும் சரி இம்முறை தமிழ் மக்களால் வெல்பவரும் அப்படியே என எதிர்வு  கூறுகிறேன். 

நீங்கள் வீதியால் போகும் அப்பாவி நாய்க்கு கல் எறிகிறீர்கள்.😝😝

எனது கருத்துக்கு பதிலாக தான் அக்கருத்தை எழுதினீர்கள் என நினைத்து பதிலளித்தேன்.

சரி சரி... இம்முறை கோத்தா வெல்வாரோ சஜித் வெல்வாரோ என்பதை முதலில் பார்ப்பம். 😀

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.