Jump to content

கோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்


Recommended Posts

எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்

sambanthan.jpg

திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் 

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது 

பலர் எதை தெரிவித்தாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகிறோம் எதிர் காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் 

தற்போது போட்டியிடுபவர்களில் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டிற்குள் உச்சபச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசியல் அமைப்பு மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார் 

ஆனால் கோத்தாபய முற்றிலும் சிங்கள மக்களின் வாக்கிலே வெல்வேன் என கூறி வருகிறார் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு தீர்வை தராது மட்டும் அல்லாது இந்தநாட்டிற்கும் பொருந்தாதாது

கோத்தாபய கடந்த காலங்களில் ஒரு சர்வாதிகாரி யாக செயற்பட்டு எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படத்திய சர்வாதிகாரி. நாம் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவது எமது உரிமைக்காக அதனை விடுத்து அவரிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது 

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார் 

ஆதலினால் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு எமது பிரச்சினை களை சுதந்திரமாக பேசவல்ல சஜித்திற்கு 95வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் 

நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும் எனவும் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/68829

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்

உங்களுக்கென்ன????
ஒவ்வொரு லெக்சனுக்கும் வந்து வீரவசனம் பேசுவியள். எல்லாம் முடிஞ்சாப்பிறகு கொழும்பு விட்டிலை குறட்டை விட்டுக்கொண்டு பிரண்டு பிரண்டு படுக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார் 

நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ???????

"அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்."

 

Link to comment
Share on other sites

நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாத்தப்போகிறீர்கள். இனவாதிகள் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ஷே பக்கம்தான் மோசமான இனவாதிகள் இருக்கிறார்கள். ரணில் எதாவது தீர்வு திடடத்தை கொண்டு வந்தால் இவர்கள் தடுத்து விடுவார்கள்.

ராஜபக்ஷே தீர்வை கொண்டுவர தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை எண்டு கூறுகிறார்கள். ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்ததுபோல இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? யுத்தம் முடிந்தபின்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? இதட்கு முன்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இது எனது தனிப்படட அபிப்பிராயம். இல்லாவிட்ட்தால் இதட்கு ஒரு முடிவு varum எண்டு நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:

நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ???????

அவரை ஏன் கேட்கிறீர்கள்? 

Sampanthan refused to answer calls as LTTE political heads faced final moments

https://www.tamilguardian.com/content/sampanthan-refused-answer-calls-ltte-political-heads-faced-final-moments

இதை வாசித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

17 hours ago, ampanai said:

நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும்

இது உண்மை. இதை கருத்தில் கொண்டு மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

17 hours ago, ampanai said:

இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வாக்கு கேட்கின்றார் 

நாமல் சின்னப்பெடியனாக இருந்தாலும் வடக்கு கிழக்கில் ஆதரவை திரட்டி வருகிறார்.

யாழ்ப்பாணத்திலேயே இப்படி நிலை.

EIhcpHdU0AEKVYA?format=jpg&name=medium

EIhcpHgU4AAbBbq?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

முதல் முறையாக தமிழில் உரையாற்றிய கோத்தபாய ..!

 

 

சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தில் பேச வேண்டும்  🙂 

Link to comment
Share on other sites

16 minutes ago, ampanai said:

 

 

வாக்குகளுக்காக அவர்கள் தமிழ் கதைப்பார்கள். “நாளை நமதே இந்த நாளும் நமதே” என்ற பாடலை மாற்றி “நாளை நமதே இந்த நாடும் நமதே” என கூறி வாக்கு கேட்கும் மகிந்த. 😀

Link to comment
Share on other sites

பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68903

Link to comment
Share on other sites

49 minutes ago, ampanai said:

பிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68903

நீங்கள் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்புவதால் கோத்தா ஆதரவாளர்களின் செய்திகளை இணைத்து வருகிறீர்கள்.

வெள்ளை வான் முன்பே இருந்தது, கறுப்பு, பச்சை வான்களும் இருந்தன, 86,87 இல் ஆட்களை கடத்திய Morris Minor காரும் இருந்தது என முன்பு கோத்தாவே கூறியிருந்தார்.

ஆனால் மகிந்த & கோ காலத்தில் வெள்ளை வான் பயன்பாடு எவ்வாறு இருந்தது, அதனால் தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்தது.

இத்தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா போட்டியிடவில்லை. சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.

கீழேயுள்ள வீடியோவை இன்னொரு திரியில் நுணாவிலானும் இணைத்திருந்தார். இப்படியானவரை தான் வெல்ல வைக்க முயல்கிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.