Jump to content

வாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார


Recommended Posts

மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

IMG_8535.JPG

இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.  ஆனால் நாட்டில் உள்ள  இரண்டு பிரதான  கட்சிகளும் அதற்கு மாறாக இனவாதத்தை தொடர்ந்தும் பேசி பேசி இனங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்  பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினை தெற்கில் மிக மோசமான இனவாதத்தோடு பேசி வருகின்ற மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் உண்மையை பேசி நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக இனவாத்தை பேசி அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்..

எமது மக்களும் 71 வருடங்களாக தோற்றுப் போன அரசியல் பாதையினை மாறி மாறி தெரிவு செய்து வருகின்றனர். இந்த அரசியல் பாதையில் நாட்டின் சாதாரன குடிமக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அதிகாரங்களுக்கு வருகின்றவர்களின் பிள்ளைகள் குடும்பங்கள், உறவினர்கள் வாழ்க்கை மட்டுமே வளர்ச்சி அடைந்து சென்றிருக்கிறது. இந்த நிலைமையினை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர்

இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் எதிர்வரும் 16 திகதியை பயன்படு்த்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/68827

Link to comment
Share on other sites

இவர்களுடைய  முதலீடே  இனவாதம். அப்போ எப்படி இனவாதம் பேசாமல் அரசியல்  செய்வார்கள்? உங்களுக்கு வாக்களிக்க எமக்கு விருப்பம் இருந்தாலும் உங்கள் கடந்த கால செயட்பாடுகள் எம்மை தடுக்கின்றன.

வடக்கு கிழக்கை பிரித்தது , தமிழ் மக்கள் கோதாவால் கொலை செய்யப்படும்போது  அதட்கு அனுமதியளித்தது etc etc . நீங்களும் அப்படியான ஒரு அரசியலை , இனவாத அரசியலை செய்து பாருங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்களா என்று? 

Link to comment
Share on other sites

4 hours ago, Vankalayan said:

இவர்களுடைய  முதலீடே  இனவாதம். அப்போ எப்படி இனவாதம் பேசாமல் அரசியல்  செய்வார்கள்? உங்களுக்கு வாக்களிக்க எமக்கு விருப்பம் இருந்தாலும் உங்கள் கடந்த கால செயட்பாடுகள் எம்மை தடுக்கின்றன.

வடக்கு கிழக்கை பிரித்தது , தமிழ் மக்கள் கோதாவால் கொலை செய்யப்படும்போது  அதட்கு அனுமதியளித்தது etc etc . நீங்களும் அப்படியான ஒரு அரசியலை , இனவாத அரசியலை செய்து பாருங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்களா என்று? 

ஜேவிபி இப்பொழுதும் இனவாதம் பேசுபவர்கள் தான். 

இவ் இணைப்பிலுள்ள செய்தியை சிங்களம் தெரிந்தால் சிங்களத்தில் வாசியுங்கள். அல்லது google translate மூலம் மொழிபெயர்த்து வாசியுங்கள்.

https://www.ceylonnews.lk/archives/10476

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

ஜேவிபி இப்பொழுதும் இனவாதம் பேசுபவர்கள் தான். 

இவ் இணைப்பிலுள்ள செய்தியை சிங்களம் தெரிந்தால் சிங்களத்தில் வாசியுங்கள். அல்லது google translate மூலம் மொழிபெயர்த்து வாசியுங்கள்.

https://www.ceylonnews.lk/archives/10476

கோத்தாவாவை சஜித் இனவாதம் குறைந்தவர் என்ற ஒரே அடிப்படையில் தான் சஜித்திற்கு வாக்களிக்க தமிழ் மக்களை கேட்க்கிறோம்.

அதே வாதத்தை வைத்து பார்க்கும்பொழுது, ஜே வி பி சஜித் கடைசியை விட இனவாதம் குறைந்தது என பார்க்காலம், வாக்களிக்கலாம்.    

Link to comment
Share on other sites

9 minutes ago, ampanai said:

கோத்தாவாவை சஜித் இனவாதம் குறைந்தவர் என்ற ஒரே அடிப்படையில் தான் சஜித்திற்கு வாக்களிக்க தமிழ் மக்களை கேட்க்கிறோம்.

அதே வாதத்தை வைத்து பார்க்கும்பொழுது, ஜே வி பி சஜித் கடைசியை விட இனவாதம் குறைந்தது என பார்க்காலம், வாக்களிக்கலாம்.    

நீங்கள் அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதை வாசித்தீர்களா?

கோத்தாவை விட சஜித் வந்தால் தமிழர்களுக்கு அழிவு குறைவாக இருக்கும் என்பதால் தான் நான் சஜித்துக்கு வாக்களிக்க கேட்கிறேன்.

அநுரவுக்கு வாக்களித்தால் அதன் மூலம் அநுர வெல்லப்போவதில்லை, அது கோத்தாவை ஜனாதிபதியாக்கும். எனவே மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.