Jump to content

2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள்.

முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.  
இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழின அழிவிற்கு......இனக்கலவரம் ஊடாக சகல அழிவிற்கும் எம் அரசியல் தலைவர்களே முக்கிய காரணம்.
தமது அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறக்கணித்திருக்கா விட்டாலும் மகிந்த வென்றிருப்பார். 

அன்று இருந்த சூழலில்.. 2004 ம் ஆண்டு முரளிதரன் பிளவு..  சுனாமி.. ரணில் - பிரபா உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படாமை.. சுனாமி நிதி முடக்கம்.. தாய்லாந்து..  ஜப்பான் பேச்சுத் தோல்வி என்பது மட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் மீது சர்வதேசப் பயணத் தடைகள் என்று  வெளிநாட்டு அழுத்தங்கள் பல வழிகளில் சூழப்பட்டு இருந்தன. 

அதுமட்டுமன்றி.. விடுதலைப்புலிகளின் சர்வதேச விநியோகக் கப்பல்கள் பல சர்வதேசக் கடலில் வைத்து அழிக்கப்பட்டும் இருந்தன.

இந்தச் சூழலில்.. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில்.. ஹிந்தியாவின் தலையீடு மீண்டும் ஈழப் போராட்டத்துக்குள் வருவதை விரும்பி இருக்கவில்லை.

இதனை 2002 தீச் சுவாலை முறியடிப்போடு.. யாழ் நகர் நோக்கிய விடுதலைப்புலிகளின் முன்னெடுப்புக்கள் முடக்கப்பட்ட நிலையில்.. ஹிந்தியப் படைகளின் உதவியை அம்மையார் சந்திரிக்கா.. சொறீலங்காப் படைகளை மீட்க கோரி இருந்த நிலையில்..  புலிகள் எடுத்தனர். 

அந்தச் சூழலில் அது தவறே அல்ல. 

மேலும்.. விடுதலைப்புலிகள் விட்ட தவறு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தோல்வி குறித்து சிங்களத்துக்கு ஹிந்தியா உட்பட்ட சர்வதேசம்.. செய்து வந்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்கால இராணுவத் திட்டங்களை முறியடிக்க தம்மை தயார் செய்யாமையே.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னடைவின் போதே.. வன்னியை கைப்பற்றும் மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில்.. வன்னியின் இரு பக்க கரையோரங்களையும் குறிவைத்து படை நகர்த்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஹிந்தியப் படை அதிகாரிகள் பகிரங்கமாகவே ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் நடந்ததும் அதே.

விடுதலைப்புலிகள் தமது ஆளணி.. ஆயுத பலத்தைக் கூட்ட எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்காததும்.. அவர்கள் போர்க்களத்தில் தோல்வி அடைய இன்னொரு காரணம். அதற்கு வன்னி மக்கள் நீண்ட போர் காலத்தை சந்தித்து போர் குறித்த சலிப்படைந்ததும் ஒரு காரணம். இப்படிப் பல பின்னணிகள்.. மத்தியில் அமைந்த ஒரு வெற்றியை வெறும் மகிந்த வெற்றியாகக் காட்ட முடியாது. 

அதனால்... தான் மகிந்த கும்பல் செய்த இனப்படுகொலையை கூட உலகம் மூடி மறைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஏனெனில்.. இந்தக் கும்பலை பின்னணியில் இருந்து இயக்கியோர் பலர். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வரும் என்ற அச்சம் அவர்களுக்கு. அவர்களின் மனித உரிமை அக்கறையின் போலித்தன்மை வெளிப்பட்டு விடும் என்ற பயம்.. மட்டுமன்றி.. ஆளாளுக்கு இதனை சாக்கு வைச்சு ஆதாயம் தேடும் களமாக இலங்கையை சூதாட்டக் களமாக்குவதே அவர்களின் நோக்கம்.

அதை இன்று வெளிப்படையாகவே காண்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.

உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது.

கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. 

https://yarl.com/forum2/thread-2744.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது.

 

Quote

எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...ரணில் குள்ளநரி..! 

https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528

 

நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது.

Quote

மகிந்தவுக்கு வாக்களிக்க வேணும்,ஏனெண்டால் அப்பத் தான் சர்வதேச ஆதரவு எமது பக்கம் திரும்பும்.ரணில் வந்தால் மீண்டும் சர்வதேசம் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டி , சர்வதேச வலைப் பின்னல் இறுகும்.

ஆனா யாரு வந்தாலும் நடக்கப் போறது ஒண்டு தான் ,
அது தமிழ் ஈழம் மலருவது.அது சண்டை பிடிச்சுத் தான் நடக்கும் எண்டா சண்டை தான்.ரணில் வந்தால் காலம் தாழ்த்தி சண்டை நடக்கும், மகிந்த வந்தால் சர்வதேச ஆதரவு எம் பக்கம்.சண்டை கெதியாக எமக்கு சாதகமாக சர்வதேச ஆதரவோட நடக்கும்.

https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530

Link to comment
Share on other sites

சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.  

நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.

 

இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? 

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.

உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.

தத்துவ அளவில் இவை உண்மையானாலும் இந்த பதிவுகளின் தாக்கம் ஒப்பீட்டளவில் நிராகரிக்க கூடிய மிகவும் சிறிய அளவிலானது. இங்கு நாம் ஒப்பிடுவது, ஜனாதிபதியாக வரக்கூடிய இருவருக்கிடையிலான கொள்கை, கடும்போக்கு, இனவாதம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளும், இவர்களின் தெரிவில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உள்ள பல்லாயிரம் தமிழரது வாக்குகளும் ஆகும். இவற்றின் பெறுமதி மேற்படி பதிவுகளிலும் பார்க்க மிகவும் அதிகமானது.

8 hours ago, கிருபன் said:

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது.

கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. 

https://yarl.com/forum2/thread-2744.html

விடுதலைப்புலிகள் போன்ற வெற்றிகரமான அமைப்புகள் தோல்வியடைவது பல தவறான முடிவுகள் அடுத்தடுத்து எடுக்கப்படுவதாலும் அந்த முடிவுகளின் தாக்கங்கள் மீள முடியாதவகையில் அழுத்தி மூழ்கடிக்க செய்வதாலுமே இடம் பெறுகிறது. மேலே காட்டப்பட்ட முடிவும் இவற்றுள் ஒன்று.

1 hour ago, Maharajah said:

சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.  

நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.

 

இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? 

இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ போல, சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு.

இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு. 

புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள். 

வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை.

விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

"இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ , சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.  "

நன்றி  Jude

நன்றி உணர்வும் ஒற்றுமையும் இல்லாத எந்த இனமும் உருப்படுமா  ?  அல்லது  அழியுமா  ? 

எங்களினம்  அழிவதற்கான சகல குணாம்சமும் தாராளமாக எம்மிடம் உண்டு.  அவற்றை பட்டியலிட ஏராளம் உதாரணங்களை கூறமுடியும்.  ஆனால் நாங்கள் விடுதலைக்கு தகுதியான இனம் எனக்கூற ஒர் உதாரணம் உங்களால் கூற முடியுமா ??? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு.

இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு. 

புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள். 

வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை.

விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.

மிக மின  தவறான கணிப்பும் தப்புதலும்

தோல்வி  என்ற  ஒரு வலையை  எம்மை  நோக்கி  நாமே வீசியபடி

எந்த  நகர்வையும் செய்துவிடமுடியாது

2009க்குப்பின்னரான  இந்த  நிலைக்கு உங்கள்  போன்றோரே  காரணம்

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

மிக மின  தவறான கணிப்பும் தப்புதலும்

தோல்வி  என்ற  ஒரு வலையை  எம்மை  நோக்கி  நாமே வீசியபடி

எந்த  நகர்வையும் செய்துவிடமுடியாது

2009க்குப்பின்னரான  இந்த  நிலைக்கு உங்கள்  போன்றோரே  காரணம்

 

மன்னிக்கவும் விசுகு, 

தவறுகளை சுட்டிக்காட்டுதலுக்கும் ஒருவர் மீது பழி போடுதலுக்கும் வேறுபாடு உண்டு.  

தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை சரிசெய்துகொள்ளலாம்.  ஆனால் பழிபோடும்போது முதலில் ஒருவர் தன்னை காத்துக்கொள்வதற்காக தவறினை நியாயப்படுத்த முனைவர்.  எங்களுடைய தவறுகள் திருத்தப்பட வேண்டுமானால் முதலில் நேரடியாக ஒருவரை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maharajah said:

மன்னிக்கவும் விசுகு, 

தவறுகளை சுட்டிக்காட்டுதலுக்கும் ஒருவர் மீது பழி போடுதலுக்கும் வேறுபாடு உண்டு.  

தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை சரிசெய்துகொள்ளலாம்.  ஆனால் பழிபோடும்போது முதலில் ஒருவர் தன்னை காத்துக்கொள்வதற்காக தவறினை நியாயப்படுத்த முனைவர்.  எங்களுடைய தவறுகள் திருத்தப்பட வேண்டுமானால் முதலில் நேரடியாக ஒருவரை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நன்று. 

இதைத்தான் நானும் சொல்கிறேன்  சகோ

தவறுகளை  சுட்டிக்காட்டுதல்  நன்று

ஆனால் அதற்குள்  நானும்  இருந்தேன்

தோற்றதனால் அவர்கள் செய்தது  தவறு  என்பதை  இப்பொழுது உணர்கின்றேன்  என்பது  தான் தவறு

இது  அந்த தோல்வியிலிருந்து  தன்னை  மட்டும்  தப்ப வைத்துக்கொள்ளும் மிக  மிக  சுயநலம்  மட்டுமே இதுவன்றி  ஒரு  போதும்  எம்மை  சீர்தூக்கிப்பார்க்கவோ எமது பலத்தை அதிகரிக்கவோ  இவை உதவப்போவதில்லை

மாறாக  எம்மை  மேலும்  மேலும்  பிரித்து  தனிமைப்படுத்தி

பலவீனப்படுத்திவிடும்.  அதற்காக  எதையும்  நாம் பேசவேண்டியதில்லை  நேரத்தை  வீணாக்கவேண்டியதில்லையே

 

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன.

2005 இல் மகிந்த எடுத்தது 50.29 வீதம் மாத்திரமே (ரணில் 48.43%, ஏனையவர்கள் 1.28%). அதாவது 0.29 வீதம் மாத்திரமே அதிகமாக ஏனையவர்களை விட எடுத்து இருக்கின்றார். தமிழர்கள் வாக்களித்து இருந்தால் இது மாறியிருக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

 

இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள்.

முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.  
இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?

எமது அறிவுக்கு தெரிந்ததை மட்டும் வைத்துக்கொண்டு நாம் கருத்துக்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம் 
அது பொதுவானதும் சாதாரணமானதும்தான். 

2005இல் போர் யுத்தம் என்பதோ புலிகள் இருப்பு என்பதோ 
சிங்களம் எடுக்கும் முடிவில் இருக்கவில்லை. மாறாக இது சர்வதேச அரசுகளின் தலையீடாக இருந்தது.
இலங்கை வந்த நோர்வே மத்தியஸ்த்தர் ஆன சொல்கெய்ம் அவர்களின் பயணம் ஒவ்வரு முறையும் 
ஒஸ்லோ - கொழும்பு - டில்லி - ஒஸ்லோ என்றுதான் இருந்தது. இது நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதான ஒப்பந்தம் என்பது சிங்களம்- புலிகள் மட்டுமாக இருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள எதுவாக இருக்கும்.
இதில் இன்னொரு விடயத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமர் ஆனது 2004இல் தான். ஒப்பந்தம் உடன்பாடை எட்டியது 2002இல். அப்போதில் இருந்தே இந்தியாவின் தலையீடு இருகாது என்பதே உண்மை.

மஹிந்த வெற்றிபெற்ற போது சமாதான ஒப்பந்தம் அமுலில் இருக்கிறது ... வெற்றி விழாவில் பேசிய அமெரிக்க அம்பேசடர் அமெரிக்கா பயங்கரவாத்தை அழிக்க முழு உதவியும் செய்யும் என்றும் தங்களுடைய ரணில் அரசுடன் இருந்த உறவு  மகிந்த அரசுடனும் தொடரும் என்றும் பேசினார். இவர் முழுதாக  யுத்தம் பற்றியே  பேசினார் ... கிட்ட தட்ட  யுத்தம் நடந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில் நடந்த பேச்சுபோல் இருந்தது. 

சுனாமி உதவிக்கு ஒதுக்கிய பணத்தை ஒரு பகுதியை தமிழர் புனர்வாழ்வு கழகத்த்தின் ஊடாக தருவத்துக்கு 
அக்கூஸி ஒத்துக்கொண்டு இருந்தார். அவரது இரண்டவு கொழும்பு வருகையின்போது .. அதைக்கூட மறுத்தார்  
அவர் இரண்டு காரணங்களை கூறினார் ஒன்று இலங்கை அரசு மற்றது அது புலிகள் கைக்கு போகும் என்பதையும். அப்போது புனர்வாழ்வு கழகம் உதவிகளை மக்களுக்கு அவர்களையே நேரடியாகவே  வழங்க கேட்டிருந்தது அதுக்கு எந்த பதிலும் இல்லாமலே அந்த சந்துப்பு முடிந்தது. இதில் இருந்து ஒன்றை புரிய முடிகிறது  ...புலிகளின் கட்டுப்பாடு பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஒரு அவசர அவல நிலையில் கூட ஐ எம் எவ்  உதவ முன்வரவில்லை என்பதுதான். 

எனக்கு தெரிந்து தேர்தல் புறக்கணிப்பு முடிவு என்பது வன்னியில் எடுக்கப்படவில்லை 
இது வெளியில் இருந்தவர்களால்தான் எடுக்கபட்டது. தி மு கவின்  காங்கிரஸ்  ஆதரவு என்பது கூட அன்று 
ஈழ தமிழர்களுக்கு சாதகமானது என்றும் காங்கிரஸ் வெற்றிபெற்றது பெருத்த வெற்றி என்றும்தான்  அப்போதைய  புலிகளின் சர்வதேச அறிவியல் மட்டத்தில் நம்ப பட்டு இருக்கிறது. இவர்கள் கனிமொழியுடன் நெருங்கிய உறவை தொடர்ந்து இருக்கிறார்கள். யுத்தம் ஒன்று இல்லாமல்  சமாதானத்தை  தொடர அவர்கள் தங்களால் முடிந்ததை செய்துகொண்டு இருந்து இருக்கிறார்கள். அதுக்கு முக்கிய காரணம் தற்போதைய இராணுவ தொழில்நுட்பம் என்றுதான் சொல்கிறார்கள் .....  இனிவரும் போரை  முன்புபோல எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து இருக்கிறார்கள். 

நாம் அறிந்துகொள்ள விவாத பொருளாக்க நிறைய இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் .
எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட  வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரகு,

மெடியூலா ஓப்லங்கேட்டாவில ஏதேனும் கொஞ்ச பக்கங்கள் காணாமல் போட்டுதா ப்ரோ? 😂.

இந்த கேள்வி இங்கே பல தடவைகள் ஆராயப்பட்டு, மேலே சொல்லப்பட்டதை போல அவரவர் தம் நிலையில் இருந்து தத்தம் கருத்தை வைத்தாகி விட்டதே.

மறுபடியும் முதல்ல இருந்தா...ஆளை வுடுங்க சாமி.

ஆனால் ஒன்று those who refuse to learn from history are bound to repeat it.

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

 

அப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி

 

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் .
எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட  வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

 

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

என்ன ரகு,

மெடியூலா ஓப்லங்கேட்டாவில ஏதேனும் கொஞ்ச பக்கங்கள் காணாமல் போட்டுதா ப்ரோ? 😂.

இந்த கேள்வி இங்கே பல தடவைகள் ஆராயப்பட்டு, மேலே சொல்லப்பட்டதை போல அவரவர் தம் நிலையில் இருந்து தத்தம் கருத்தை வைத்தாகி விட்டதே.

மறுபடியும் முதல்ல இருந்தா...ஆளை வுடுங்க சாமி.

ஆனால் ஒன்று those who refuse to learn from history are bound to repeat it.

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

 

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

கோஷான் சொல்லாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் இன்னும் 5 வருடங்களில் 2019 இல் விட்ட தவறு என்னவென்று ஒரு திரி திறக்க யாழ் களம் இருக்கும்😁

அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி, இங்கிலாந்தில் பொறிஸ் ஜோன்ஸன் போன்றோர் ஆட்சியில் இருக்கும்போது இலங்கையில் கோத்தா இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை (சிங்களவர்களுக்கு)

Link to comment
Share on other sites

24 minutes ago, ரதி said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉


 

நானும் கொமடியாக தான் இதை  இணைத்தேன். இரு வேட்பாளர்களும் இதைத் தான் செய்வார்கள் எமக்கு. சரி தானே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி

 

பிந்திய பிழை, முந்திய பிழையை சரியாக்காது.

1 hour ago, ரதி said:

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

கிருபன் சொன்னதுபோல் 2029 இல் ரகு திறக்க போகும் திரியில் சொல்கிறேன்.

1 hour ago, ரதி said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉


 

சஜித் - சோறில்லை எனச் சொல்வார்.

கோட்ட - சோறில்லை “போடா” எனச் சொல்லி ரெண்டு அடியும் போடுவார்.

இருவரிடமும் சோறு கிடையாது ஆனால் ஒருவரிடம் அடி கிடைக்கும்.

இதுதான் நான் சொல்ல வந்த கிழக்கு மக்கள் விடப்போகும் பிழை. 2005 இல் அப்போ சொன்னது விளங்காதது போல, 2019 இல் இப்போ சொல்வதும் விளங்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.