Jump to content

2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள்.

முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.  
இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழின அழிவிற்கு......இனக்கலவரம் ஊடாக சகல அழிவிற்கும் எம் அரசியல் தலைவர்களே முக்கிய காரணம்.
தமது அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறக்கணித்திருக்கா விட்டாலும் மகிந்த வென்றிருப்பார். 

அன்று இருந்த சூழலில்.. 2004 ம் ஆண்டு முரளிதரன் பிளவு..  சுனாமி.. ரணில் - பிரபா உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படாமை.. சுனாமி நிதி முடக்கம்.. தாய்லாந்து..  ஜப்பான் பேச்சுத் தோல்வி என்பது மட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் மீது சர்வதேசப் பயணத் தடைகள் என்று  வெளிநாட்டு அழுத்தங்கள் பல வழிகளில் சூழப்பட்டு இருந்தன. 

அதுமட்டுமன்றி.. விடுதலைப்புலிகளின் சர்வதேச விநியோகக் கப்பல்கள் பல சர்வதேசக் கடலில் வைத்து அழிக்கப்பட்டும் இருந்தன.

இந்தச் சூழலில்.. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில்.. ஹிந்தியாவின் தலையீடு மீண்டும் ஈழப் போராட்டத்துக்குள் வருவதை விரும்பி இருக்கவில்லை.

இதனை 2002 தீச் சுவாலை முறியடிப்போடு.. யாழ் நகர் நோக்கிய விடுதலைப்புலிகளின் முன்னெடுப்புக்கள் முடக்கப்பட்ட நிலையில்.. ஹிந்தியப் படைகளின் உதவியை அம்மையார் சந்திரிக்கா.. சொறீலங்காப் படைகளை மீட்க கோரி இருந்த நிலையில்..  புலிகள் எடுத்தனர். 

அந்தச் சூழலில் அது தவறே அல்ல. 

மேலும்.. விடுதலைப்புலிகள் விட்ட தவறு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தோல்வி குறித்து சிங்களத்துக்கு ஹிந்தியா உட்பட்ட சர்வதேசம்.. செய்து வந்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்கால இராணுவத் திட்டங்களை முறியடிக்க தம்மை தயார் செய்யாமையே.

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னடைவின் போதே.. வன்னியை கைப்பற்றும் மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில்.. வன்னியின் இரு பக்க கரையோரங்களையும் குறிவைத்து படை நகர்த்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஹிந்தியப் படை அதிகாரிகள் பகிரங்கமாகவே ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் நடந்ததும் அதே.

விடுதலைப்புலிகள் தமது ஆளணி.. ஆயுத பலத்தைக் கூட்ட எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்காததும்.. அவர்கள் போர்க்களத்தில் தோல்வி அடைய இன்னொரு காரணம். அதற்கு வன்னி மக்கள் நீண்ட போர் காலத்தை சந்தித்து போர் குறித்த சலிப்படைந்ததும் ஒரு காரணம். இப்படிப் பல பின்னணிகள்.. மத்தியில் அமைந்த ஒரு வெற்றியை வெறும் மகிந்த வெற்றியாகக் காட்ட முடியாது. 

அதனால்... தான் மகிந்த கும்பல் செய்த இனப்படுகொலையை கூட உலகம் மூடி மறைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஏனெனில்.. இந்தக் கும்பலை பின்னணியில் இருந்து இயக்கியோர் பலர். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வரும் என்ற அச்சம் அவர்களுக்கு. அவர்களின் மனித உரிமை அக்கறையின் போலித்தன்மை வெளிப்பட்டு விடும் என்ற பயம்.. மட்டுமன்றி.. ஆளாளுக்கு இதனை சாக்கு வைச்சு ஆதாயம் தேடும் களமாக இலங்கையை சூதாட்டக் களமாக்குவதே அவர்களின் நோக்கம்.

அதை இன்று வெளிப்படையாகவே காண்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

பேசலாம்  சகோ...

ஆனால் அதை  ஒரு பொது  நோக்கோடு

தமிழரின் அடுத்த  கட்ட திட்டங்கள்  சார்ந்து  பேசுவதே  சரியாக  இருக்கும்

இன்றும் இரண்டு  பேய்களில் ஒன்றை  தெரிவு  செய்தே ஆகவேண்டும்  என்ற  அதேநிலைமை  தானே??

அப்போ  தமிழர் வாக்குகளால்  என்ன  வந்துவிடப்போகிறது?????

நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.

உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது.

கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. 

https://yarl.com/forum2/thread-2744.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது.

 

Quote

எங்கள் வோட்டு மகிந்தவுக்கு..! அப்பதான் தமிழீழம் விரைவாக் கிடைக்கும்...ரணில் குள்ளநரி..! 

https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528

 

நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது.

Quote

மகிந்தவுக்கு வாக்களிக்க வேணும்,ஏனெண்டால் அப்பத் தான் சர்வதேச ஆதரவு எமது பக்கம் திரும்பும்.ரணில் வந்தால் மீண்டும் சர்வதேசம் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டி , சர்வதேச வலைப் பின்னல் இறுகும்.

ஆனா யாரு வந்தாலும் நடக்கப் போறது ஒண்டு தான் ,
அது தமிழ் ஈழம் மலருவது.அது சண்டை பிடிச்சுத் தான் நடக்கும் எண்டா சண்டை தான்.ரணில் வந்தால் காலம் தாழ்த்தி சண்டை நடக்கும், மகிந்த வந்தால் சர்வதேச ஆதரவு எம் பக்கம்.சண்டை கெதியாக எமக்கு சாதகமாக சர்வதேச ஆதரவோட நடக்கும்.

https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530

Link to comment
Share on other sites

சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.  

நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.

 

இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? 

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் சொல்வது உண்மைதான் குகன். மாற்றங்கள் எதுவுமேயில்லையென்றாலும்கூட, இத்தேர்தலில் எவரை ஆதரித்தாலும், சர்வதேசத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும். அதாவது தமிழர்கள் இன்னோரென்ன காரணங்களுக்காக கோத்தாவையோ அல்லது சஜித்தையோ ஆதரித்தார்கள் என்று பதியப்படும். நீண்ட கால அடிப்படையில் இவ்வாறு சர்வதேசத்தில் பதியப்படும் செய்தி எமக்குச் சாதகமாகவும், சிலவேளை பாதகமாகவும் அமையலாம்.

உதாரணத்திற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கெதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேக்கா எனும் மகிந்தவுக்கு நிகரான போர்க்குற்றவாளியை ஆதரிக்கவென்று தமிழர் எடுத்த முடிவு இன்றுவரை மேற்கோள்காட்டப்பட்டே வருகிறது.

தத்துவ அளவில் இவை உண்மையானாலும் இந்த பதிவுகளின் தாக்கம் ஒப்பீட்டளவில் நிராகரிக்க கூடிய மிகவும் சிறிய அளவிலானது. இங்கு நாம் ஒப்பிடுவது, ஜனாதிபதியாக வரக்கூடிய இருவருக்கிடையிலான கொள்கை, கடும்போக்கு, இனவாதம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளும், இவர்களின் தெரிவில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உள்ள பல்லாயிரம் தமிழரது வாக்குகளும் ஆகும். இவற்றின் பெறுமதி மேற்படி பதிவுகளிலும் பார்க்க மிகவும் அதிகமானது.

8 hours ago, கிருபன் said:

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது.

கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. 

https://yarl.com/forum2/thread-2744.html

விடுதலைப்புலிகள் போன்ற வெற்றிகரமான அமைப்புகள் தோல்வியடைவது பல தவறான முடிவுகள் அடுத்தடுத்து எடுக்கப்படுவதாலும் அந்த முடிவுகளின் தாக்கங்கள் மீள முடியாதவகையில் அழுத்தி மூழ்கடிக்க செய்வதாலுமே இடம் பெறுகிறது. மேலே காட்டப்பட்ட முடிவும் இவற்றுள் ஒன்று.

1 hour ago, Maharajah said:

சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.  

நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.

 

இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ? 

இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ போல, சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு.

இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு. 

புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள். 

வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை.

விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

"இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ , சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.  "

நன்றி  Jude

நன்றி உணர்வும் ஒற்றுமையும் இல்லாத எந்த இனமும் உருப்படுமா  ?  அல்லது  அழியுமா  ? 

எங்களினம்  அழிவதற்கான சகல குணாம்சமும் தாராளமாக எம்மிடம் உண்டு.  அவற்றை பட்டியலிட ஏராளம் உதாரணங்களை கூறமுடியும்.  ஆனால் நாங்கள் விடுதலைக்கு தகுதியான இனம் எனக்கூற ஒர் உதாரணம் உங்களால் கூற முடியுமா ??? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு.

இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு. 

புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள். 

வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை.

விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.

மிக மின  தவறான கணிப்பும் தப்புதலும்

தோல்வி  என்ற  ஒரு வலையை  எம்மை  நோக்கி  நாமே வீசியபடி

எந்த  நகர்வையும் செய்துவிடமுடியாது

2009க்குப்பின்னரான  இந்த  நிலைக்கு உங்கள்  போன்றோரே  காரணம்

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

மிக மின  தவறான கணிப்பும் தப்புதலும்

தோல்வி  என்ற  ஒரு வலையை  எம்மை  நோக்கி  நாமே வீசியபடி

எந்த  நகர்வையும் செய்துவிடமுடியாது

2009க்குப்பின்னரான  இந்த  நிலைக்கு உங்கள்  போன்றோரே  காரணம்

 

மன்னிக்கவும் விசுகு, 

தவறுகளை சுட்டிக்காட்டுதலுக்கும் ஒருவர் மீது பழி போடுதலுக்கும் வேறுபாடு உண்டு.  

தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை சரிசெய்துகொள்ளலாம்.  ஆனால் பழிபோடும்போது முதலில் ஒருவர் தன்னை காத்துக்கொள்வதற்காக தவறினை நியாயப்படுத்த முனைவர்.  எங்களுடைய தவறுகள் திருத்தப்பட வேண்டுமானால் முதலில் நேரடியாக ஒருவரை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maharajah said:

மன்னிக்கவும் விசுகு, 

தவறுகளை சுட்டிக்காட்டுதலுக்கும் ஒருவர் மீது பழி போடுதலுக்கும் வேறுபாடு உண்டு.  

தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை சரிசெய்துகொள்ளலாம்.  ஆனால் பழிபோடும்போது முதலில் ஒருவர் தன்னை காத்துக்கொள்வதற்காக தவறினை நியாயப்படுத்த முனைவர்.  எங்களுடைய தவறுகள் திருத்தப்பட வேண்டுமானால் முதலில் நேரடியாக ஒருவரை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நன்று. 

இதைத்தான் நானும் சொல்கிறேன்  சகோ

தவறுகளை  சுட்டிக்காட்டுதல்  நன்று

ஆனால் அதற்குள்  நானும்  இருந்தேன்

தோற்றதனால் அவர்கள் செய்தது  தவறு  என்பதை  இப்பொழுது உணர்கின்றேன்  என்பது  தான் தவறு

இது  அந்த தோல்வியிலிருந்து  தன்னை  மட்டும்  தப்ப வைத்துக்கொள்ளும் மிக  மிக  சுயநலம்  மட்டுமே இதுவன்றி  ஒரு  போதும்  எம்மை  சீர்தூக்கிப்பார்க்கவோ எமது பலத்தை அதிகரிக்கவோ  இவை உதவப்போவதில்லை

மாறாக  எம்மை  மேலும்  மேலும்  பிரித்து  தனிமைப்படுத்தி

பலவீனப்படுத்திவிடும்.  அதற்காக  எதையும்  நாம் பேசவேண்டியதில்லை  நேரத்தை  வீணாக்கவேண்டியதில்லையே

 

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

அன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன.

2005 இல் மகிந்த எடுத்தது 50.29 வீதம் மாத்திரமே (ரணில் 48.43%, ஏனையவர்கள் 1.28%). அதாவது 0.29 வீதம் மாத்திரமே அதிகமாக ஏனையவர்களை விட எடுத்து இருக்கின்றார். தமிழர்கள் வாக்களித்து இருந்தால் இது மாறியிருக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

 

இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள்.

முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.  
இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?

எமது அறிவுக்கு தெரிந்ததை மட்டும் வைத்துக்கொண்டு நாம் கருத்துக்களை கொட்டிக்கொண்டு இருக்கிறோம் 
அது பொதுவானதும் சாதாரணமானதும்தான். 

2005இல் போர் யுத்தம் என்பதோ புலிகள் இருப்பு என்பதோ 
சிங்களம் எடுக்கும் முடிவில் இருக்கவில்லை. மாறாக இது சர்வதேச அரசுகளின் தலையீடாக இருந்தது.
இலங்கை வந்த நோர்வே மத்தியஸ்த்தர் ஆன சொல்கெய்ம் அவர்களின் பயணம் ஒவ்வரு முறையும் 
ஒஸ்லோ - கொழும்பு - டில்லி - ஒஸ்லோ என்றுதான் இருந்தது. இது நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதான ஒப்பந்தம் என்பது சிங்களம்- புலிகள் மட்டுமாக இருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள எதுவாக இருக்கும்.
இதில் இன்னொரு விடயத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமர் ஆனது 2004இல் தான். ஒப்பந்தம் உடன்பாடை எட்டியது 2002இல். அப்போதில் இருந்தே இந்தியாவின் தலையீடு இருகாது என்பதே உண்மை.

மஹிந்த வெற்றிபெற்ற போது சமாதான ஒப்பந்தம் அமுலில் இருக்கிறது ... வெற்றி விழாவில் பேசிய அமெரிக்க அம்பேசடர் அமெரிக்கா பயங்கரவாத்தை அழிக்க முழு உதவியும் செய்யும் என்றும் தங்களுடைய ரணில் அரசுடன் இருந்த உறவு  மகிந்த அரசுடனும் தொடரும் என்றும் பேசினார். இவர் முழுதாக  யுத்தம் பற்றியே  பேசினார் ... கிட்ட தட்ட  யுத்தம் நடந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில் நடந்த பேச்சுபோல் இருந்தது. 

சுனாமி உதவிக்கு ஒதுக்கிய பணத்தை ஒரு பகுதியை தமிழர் புனர்வாழ்வு கழகத்த்தின் ஊடாக தருவத்துக்கு 
அக்கூஸி ஒத்துக்கொண்டு இருந்தார். அவரது இரண்டவு கொழும்பு வருகையின்போது .. அதைக்கூட மறுத்தார்  
அவர் இரண்டு காரணங்களை கூறினார் ஒன்று இலங்கை அரசு மற்றது அது புலிகள் கைக்கு போகும் என்பதையும். அப்போது புனர்வாழ்வு கழகம் உதவிகளை மக்களுக்கு அவர்களையே நேரடியாகவே  வழங்க கேட்டிருந்தது அதுக்கு எந்த பதிலும் இல்லாமலே அந்த சந்துப்பு முடிந்தது. இதில் இருந்து ஒன்றை புரிய முடிகிறது  ...புலிகளின் கட்டுப்பாடு பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஒரு அவசர அவல நிலையில் கூட ஐ எம் எவ்  உதவ முன்வரவில்லை என்பதுதான். 

எனக்கு தெரிந்து தேர்தல் புறக்கணிப்பு முடிவு என்பது வன்னியில் எடுக்கப்படவில்லை 
இது வெளியில் இருந்தவர்களால்தான் எடுக்கபட்டது. தி மு கவின்  காங்கிரஸ்  ஆதரவு என்பது கூட அன்று 
ஈழ தமிழர்களுக்கு சாதகமானது என்றும் காங்கிரஸ் வெற்றிபெற்றது பெருத்த வெற்றி என்றும்தான்  அப்போதைய  புலிகளின் சர்வதேச அறிவியல் மட்டத்தில் நம்ப பட்டு இருக்கிறது. இவர்கள் கனிமொழியுடன் நெருங்கிய உறவை தொடர்ந்து இருக்கிறார்கள். யுத்தம் ஒன்று இல்லாமல்  சமாதானத்தை  தொடர அவர்கள் தங்களால் முடிந்ததை செய்துகொண்டு இருந்து இருக்கிறார்கள். அதுக்கு முக்கிய காரணம் தற்போதைய இராணுவ தொழில்நுட்பம் என்றுதான் சொல்கிறார்கள் .....  இனிவரும் போரை  முன்புபோல எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து இருக்கிறார்கள். 

நாம் அறிந்துகொள்ள விவாத பொருளாக்க நிறைய இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் .
எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட  வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரகு,

மெடியூலா ஓப்லங்கேட்டாவில ஏதேனும் கொஞ்ச பக்கங்கள் காணாமல் போட்டுதா ப்ரோ? 😂.

இந்த கேள்வி இங்கே பல தடவைகள் ஆராயப்பட்டு, மேலே சொல்லப்பட்டதை போல அவரவர் தம் நிலையில் இருந்து தத்தம் கருத்தை வைத்தாகி விட்டதே.

மறுபடியும் முதல்ல இருந்தா...ஆளை வுடுங்க சாமி.

ஆனால் ஒன்று those who refuse to learn from history are bound to repeat it.

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

 

அப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி

 

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

2005யில் மகிந்தா வந்ததால் தான் ஒரு முடிவு வந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதகமாய் இருந்தால் கூட ...ரணில் வந்திருந்தால் போர் பெரிதாய் நடந்திருக்காது...சும்மா இழுத்து ,இழுத்து காலத்தை கடத்தி இருப்பார்....ஒரு தீர்வும் இல்லாமல் ,முடிவும், இல்லாமல் இரண்டு கெட்டான் நிலையில் இருந்ததை விட ஒரு முடிவு வந்தது அங்குள்ள மக்களுக்கு நிம்மதி...மக்களின் நிலை அறிந்து தான் தலைவர் அந்த முடிவை அந்த நேரத்தில் எடுத்தார் .
எதிர்காலத்தில் சஜீத்தும், ரணிலை மாதிரித் தான் இருப்பார்....இந்த தாறன்/இப்ப தாறன் என்று சொல்லி ஏமாத்திறதை விட  வெட்டு ஒன்று துண்டு ரென்று என்று பேசுகின்ற கோத்தா எவ்வளவோ மேல்


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

 

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

என்ன ரகு,

மெடியூலா ஓப்லங்கேட்டாவில ஏதேனும் கொஞ்ச பக்கங்கள் காணாமல் போட்டுதா ப்ரோ? 😂.

இந்த கேள்வி இங்கே பல தடவைகள் ஆராயப்பட்டு, மேலே சொல்லப்பட்டதை போல அவரவர் தம் நிலையில் இருந்து தத்தம் கருத்தை வைத்தாகி விட்டதே.

மறுபடியும் முதல்ல இருந்தா...ஆளை வுடுங்க சாமி.

ஆனால் ஒன்று those who refuse to learn from history are bound to repeat it.

2005இல் விட்ட அதே பிழையை இந்த தேர்தலில் கோட்டாவுக்கு போடுவதன் மூலம் கிழக்கு தமிழ் மக்கள் செய்யப் போகிறார்கள்.

 

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

கோஷான் சொல்லாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் இன்னும் 5 வருடங்களில் 2019 இல் விட்ட தவறு என்னவென்று ஒரு திரி திறக்க யாழ் களம் இருக்கும்😁

அமெரிக்காவில் ட்ரம்ப், இந்தியாவில் மோடி, இங்கிலாந்தில் பொறிஸ் ஜோன்ஸன் போன்றோர் ஆட்சியில் இருக்கும்போது இலங்கையில் கோத்தா இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை (சிங்களவர்களுக்கு)

Link to comment
Share on other sites

24 minutes ago, ரதி said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉


 

நானும் கொமடியாக தான் இதை  இணைத்தேன். இரு வேட்பாளர்களும் இதைத் தான் செய்வார்கள் எமக்கு. சரி தானே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படி என்றால் புலிகளின் அன்றைய முடிவு சரி

 

பிந்திய பிழை, முந்திய பிழையை சரியாக்காது.

1 hour ago, ரதி said:

கோசான் ,கிழக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதன் மூலம் அப்படி என்ன பிழை செய்யப் போகிறார்கள் என்பதை சொள்வீர்களா ?

கிருபன் சொன்னதுபோல் 2029 இல் ரகு திறக்க போகும் திரியில் சொல்கிறேன்.

1 hour ago, ரதி said:

கொமடி நல்லாய் இருக்குது ...ஏற்கனவே பார்த்து இருக்கன்..இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது என்னவோ 😉


 

சஜித் - சோறில்லை எனச் சொல்வார்.

கோட்ட - சோறில்லை “போடா” எனச் சொல்லி ரெண்டு அடியும் போடுவார்.

இருவரிடமும் சோறு கிடையாது ஆனால் ஒருவரிடம் அடி கிடைக்கும்.

இதுதான் நான் சொல்ல வந்த கிழக்கு மக்கள் விடப்போகும் பிழை. 2005 இல் அப்போ சொன்னது விளங்காதது போல, 2019 இல் இப்போ சொல்வதும் விளங்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.