Jump to content

மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்பட்டார்

மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காஸா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து வருகிறது. காஸாவில்தான் இந்த போர் நடந்து வருகிறது.

காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மாகாணங்களில் ஒன்றாகும். இங்குதான் பாலஸ்தீன போராளி குழுக்கள் இருக்கிறார்கள்.

நேற்று இந்த போர் பெரிதானனது. இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட்டிற்கு வந்த உளவுத்தகவல் ஒன்றுதான் நேற்று பிரச்சனை பெரிதாக காரணம் என்கிறார்கள். அதன்படி இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளி குழுக்கள் தாக்குதல் நடத்த உள்ளது. ஹமாஸ் போராளி குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் தாக்குதல் நடத்த உள்ளது.

குகைகள் வருகிறது

இஸ்ரேலின் முக்கிய நகரத்திற்கு செல்லும் வகையில் அவர்கள் காஸாவிலிருந்து குகை அமைத்து உள்ளனர். இந்த குகை வழியாக ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளனர் என்று மொசாட் எச்சரித்துள்ளது. இதனால் உஷாரான இஸ்ரேல் பாதுகாப்பு படை காஸா மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது.

மாலை

நேற்று மாலையில் இருந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மற்றும் சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவி காஸா மீதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் பல 100 பேர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் தரைப்படையும் மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

யார் மீது குறி

காஸாவில் இருக்கும் பாலஸ்தீன போர் படைகளில் ஒன்றான பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிஹாத் (பிஐஏ) அமைப்பைதான் இஸ்ரேல் அதிகமாக குறி வைத்தது. இந்த தாக்குதலில் காஸா பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார். இதனால் காஸா தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது.

மோசம்

பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொல்லப்பட்டதால் தற்போது காஸா போராளி குழுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது நேற்று இரவு மட்டும் 180 ராக்கெட்டுகளை காஸா போராளி குழுக்கள் வீசி இருக்கிறது. இதில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள்.

தடுத்து நிறுத்தியது

காஸா போராளி குழுக்கள் வீசிய ராக்கெட்டுகளை இஸ்ரேலின் ராக்கெட் எதிர்ப்பு மிசைல்கள் தடுத்து நிறுத்தி அழித்தது. இதனால் இஸ்ரேலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அங்கு தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/palestinians-attack-israel-after-the-pij-chief-bahaa-abu-al-ata-killed-368332.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இஸ்ரேலின் ராக்கெட் எதிர்ப்பு மிசைல்கள் தடுத்து நிறுத்தி அழித்தது.

ஹமாஸ் 5௦௦ டொலர் பெறுமதியான ராக்கட்டுக்கு 5௦௦௦௦ டொலர் பெறுமதியான எதிர்ப்பு ராக்கெட்  விலை சும்மா அதிரும்😎 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.