Jump to content

அமைதிப்படையில் இணைய மாலிக்கு புறப்பட்டது இலங்கை இராணுவ அணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

malli.jpg

அமைதிப்படையில் இணைய மாலிக்கு புறப்பட்டது இலங்கை இராணுவ அணி

மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியில் இணைந்து கொள்ள, 243 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவ அணி இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டு சென்றது.

விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவின் 20 அதிகாரிகளும், 203 மருத்துவ, பொறியியல் மற்றும் சிப்பாய்கள், அதிகாரிகள் அடங்கிய 223 பேரைக் கொண்ட குழுவே பயணமானது.

இவர்களிற்காக எத்தியோப்பியன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767- 300 விமானத்தை ஐக்கிய நாடுகள் சபை ஒதுக்கியிருந்தது.

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கை இராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.20 மணிக்கு விமானம் புறப்பட்டது.

அமைதிப்படையில் இணையும் இராணுவ அணியை வழியனுப்பும் நிகழ்வில் இராணுவத்தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

http://athavannews.com/அமைதிப்படையில்-இணைய-மாலி/

Link to comment
Share on other sites

இவர்களை ஐ.நா. அமைதிப்படையில் இருந்து விலக்குவார்கள் என எண்ணினேன்...

சவேந்திர சில்வா, போர்க்குற்றம் மற்றும் மைத்திரியின் நியமனம் என்றது ஐ.நா. ம்ம்ம் கடைசியில் இது.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.