Jump to content

கருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள்? நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள்? நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம்

லாரன் டர்னர்பிபிசி நியூஸ், வாஷிங்டன்
இதயங்களின் வரைப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நீங்கள் கருணையுடன் நடந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் முகம் பிரகாசமாக தோன்றலாம் அல்லது நீங்கள் திருப்தியாக உணரலாம்…ஆனால் நீங்கள் கருணையாக இருப்பது இதைக் காட்டிலும் உங்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் அராய்ச்சியாளர்கள்.

ஆம், புதிய ஆய்வு ஒன்று அது உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கலாம் என்கிறது.

கருணை குறித்த ஒரு கருத்து சமீபத்தில் தலைப்புச் செய்தியானது.

அமெரிக்க அரசியல்வாதியான லிசா க்யூமிங்க்ஸ் கடந்த மாதம் உயிரிழந்த சமயத்தில் அவர் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பேசியது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

"நீங்கள் வலிமையான மனிதர் என்றால் அதில் கருணையும் அடங்கும். நீங்கள் கருணையானவராகவும், இரக்கமானவராகவும் இருப்பதால் நீங்கள் வலிமையற்றவர் என கருத முடியாது." என அவர் தெரிவித்தார்.

எனவே உலக கருணை தினமான இன்று, கருணையாக இருப்பது என்றால் என்ன? அது ஏன் முக்கியம் என்று பார்ப்போம்?

கருணை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியான டேனியல் ஃபெஸ்லர், மக்களை கருணையாக நடந்துகொள்ள வைப்பது எவ்வாறு என்று ஆராய்ந்தார். பெரும்பாலும் அடுத்தவர்கள் கருணையுடன் நடந்து கொள்வதை பார்த்தால் நாமும் கருணையுடன் நடந்துகொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

"தற்போது நாம் ஒரு கருணையற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது துரதிஷ்டவசமானது. அமெரிக்காவிலும் சரி, உலகளவிலும் சரி. பல தரப்பட்ட அரசியல் கருத்துக்கள் உள்ளவர்கள், வேறு வேறு மதங்களை சார்ந்தவர்கள் மத்தியில் மோதல்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கலாம்," என்கிறார் அவர்.

கருணை என்பது என்ன?

கருணை என்பது, ஒரு எண்ணம், உணர்வு, நம்பிக்கை. அதனால் பிறருக்கும் நமக்கும் நன்மை கிடைக்கிறது.

கருணையில்லாமல் நடந்துகொள்வது என்பது, பிறரின் நலன் குறித்து யோசிக்காமல் இருப்பது. ஒரு நம்பிக்கையற்ற தன்மை அது.

சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளானவர்களுக்கு அதன் அனுபவம் அதிகம் இருக்கும்.

"கருணை என்பது இந்த நவீன உலகத்தில் மிகவும் பற்றாக்குறையான ஒன்றாக உள்ளது," என கருணை குறித்து ஆராய கல்வி நிறுவனம் தொடங்க உதவிபுரிந்த மாத்யூ ஹாரிஸ் தெரிவிக்கிறார்.

கருணைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"பொதுவாக நன்மை தரக்கூடிய மன அழுத்ததைக் காட்டிலும், எதுவே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் நம்மை தள்ளக்கூடிய கெட்ட மன அழுத்தம் நாம் அனைவருக்கும் ஆபத்தானது."

நல்ல மன அழுத்தம் என்பது நமக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் என்கிறார் டேனியல் ஃபெஸ்லெர்.

"உங்கள் மீது அக்கறையில்லாமலும், விரோதமனப்பான்மையுடனும் இருப்பவருடன் நீங்கள் வாழ்ந்தால் உங்கள் ஆயுள் குறையலாம். ஆனால் அதுவே உங்கள் மீது ஒருவர் கருணையாக உள்ளார். நீங்கள் பிறரிடம் கருணையாக உள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு நன்மை அளிக்கும்." என்கிறார் ஃபெஸ்லெர்.

Barack Obama at Elijah Cummings' funeralபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

புன்கையுடன் ஒருவரைப் பார்த்து நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அக்கறையுடன் கேட்டால் அதுகூட ஒருவரின் மனநிலையை நேர்மறையானதாக மாற்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

`உலகிற்கான அவசர செய்தி`

`தி ராபிட் எஃபக்ட்`, என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெலி ஹார்டிங், "கருணையாக இருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு நல்லது. அது ஒருவரின் ஆயுளைக் கூட்டும், இதை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டாம். இது எளிமையான ஒன்று," என்று கூறுகிறார்.

அந்த புத்தகத்தின் தலைப்பு குறித்து பேசிய அவர், முயல்கள் குறித்த இந்த ஆய்வை நான் 1970களில் கேள்வி பட்டிருக்கிறேன். மிகவும் இரக்க குணமுடைய ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் இருந்த முயல்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

"ஒரு மருத்துவராக இந்த உலகத்திற்கு நான் ஒரு அவசர செய்தியை சொல்ல விரும்புகிறேன். அது, கருணையாகவும், இரக்கமுடனும் நடந்து கொள்ளுங்கள் என்பதுதான்." என்கிறார் அவர்.

ஆனால் சில சமயங்களில் பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வதைக் காட்டிலும் நமக்கு நாமே கருணையுடன் நடந்து கொள்வதுதான் கடினம் என்கிறார் அவர்.

நீங்கள் கருணையுடன் நடந்த கொள்ள என்ன செய்ய வேண்டும்? கருணை குறித்த வல்லுநர் கேப்பியல்லா வான் ரிஜ்சொல்கிறார்:

  • ஒருவர் சொல்வதை உண்மையாக காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னரே உங்கள் மூளையில் பதில்களை யோசித்து வைக்காதீர்கள்.
  • உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறிவிடும்.
  • பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள்.
  • நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான விஷயம் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டு சில நிமிடங்கள் பொறுமையாக யோசியுங்கள்.

https://www.bbc.com/tamil/global-50395518

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.