Jump to content

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

76710854_2595734760512840_8216648010663198720_n.jpg?_nc_cat=105&efg=eyJpIjoidCJ9&_nc_oc=AQl79AL6271grL7zjrlGtXMUjLnaPgMDaVjDxDlxj13XrcP2jOu4hNEc6YFeWWeHjDM&_nc_ht=scontent-lga3-1.xx&oh=903a1afa239cb268f984f10278431c10&oe=5E471462

 

 

எம்.எம்.எம்.நூறுல்ஹக் 

சாய்ந்தமருது - 05

நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத்தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான எட்டாவது தேர்தல் எதிர்வரும் 2019 நவம்பர் 16இல் நடைபெறவிருப்பது நாமறிந்ததே. இத்தேர்தலில் தீவு முழுவதிலிருந்தும் கடந்த 2018 ஆம் வருடத்திற்கான தேருநர் இடப்பின் பிரகாரம் 15,992,096 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

 

இது கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340 சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் நாடு பூராகவும் 15,742,371 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று காணப்பட்டனர். (அன்று நடைபெறாது தடுபட்டுப் போன எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 11 ஒக்டோபர் 2019 இல் நடைபெற்றது தெரிந்ததே). நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 249,725 பேர் இம்முறை புதிதாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 2010 ஜனவரி 26 இல் நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 74.49 வீதமனோர் மாத்திரமே தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். அதுவும் யுத்த வெற்றியை அடுத்து நடைபெற்ற தேர்தலாக இது இருந்த நிலையில் என்பது நமது கவனங்களுக்குரியது. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் வேண்டும் குடும்ப ஆட்சியின் வலிமை அகற்றப்படல் வேண்டுமென பாரிய பரப்புரைக்கு மத்தியில் இலங்கையின் 7வது செயலாற்று அதிகாரமுடைய ஐனாதிபதித் தேர்தல் கடந்த 08 ஜனவரி 2015இல் நடைபெற்றது. அதில் கூட அன்று வாக்காளிக்கத் தகுதி பெற்றிருந்தவர்களில் 81.52 வீதமானவர்கள் தான் தமது வாக்கை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி இருப்பதையும் பார்க்கின்றோம். அதே நேரம் 2018இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்கூட 80.20 வீதமானோர்தான் வாக்களித்திருந்தனர். ஆகவே இம்முறை நடைபெறவிருக்கின்ற எட்டாவது செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் 82 வீதத்திற்குள்ளதான் மொத்த வாக்குகள் பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்து பலரும் பலவிதமான எதிர்வு கூறல்களை முன்வைத்து வருவதும் நாமறிந்ததே. எனது பார்வையின் அனுமானத்தையும் இது விடயத்தில் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் அடிப்படையாகும். மாறாக இது உறுதிப்படுத்தப்பட்ட கருத்துக்களின் ஆதாரப்படுத்தலாக எழுதப்படுகின்ற ஆக்கமல்ல. நான் அவதானித்தவற்றின் எடுகோலை முன்னிறுத்தி> கணித்து ஆற்றுப்படுத்தும் ஒரு கட்டுரையே இதுவாகும். சிலவேளை இதில் தெரிவிக்கப்படும் எதிர்வு கூறலுக்கு நேர் எதிரான முடிவுகளையோ> சரியொத்த பெறுபேறுகளையோ நாம் சந்திக்கவும் வாய்ப்பு இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

எது எவ்வாறு இருந்தாலும் நடைபெறவிருக்கின்ற எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சில பின்ணணிகளை நமது ஞாபகத்துக்கு கொண்டு வருவது இத்தேர்தலை நிறுத்துப் பார்ப்பதற்கு அணுகூலமாக அமைய முடியும். கடந்த 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த 6,015,934 (57.88%) வாக்குகளைப் பெற்று, 1,842,749 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமையப் பெற்றிருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நுவரெலியா ஆகிய மாவட்டமும் மொத்தம் 6 மாவட்டங்களில் தோல்வியுற்ற நிலையில்தான் இந்த வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டார். இது சிங்கள மக்களின் அதிகரித்த வசீகரிப்பு இவர் உட்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தவர் என்ற அடையாளம்வழங்கிய மாபெரும் பரிசாகும். அதேநேரம் யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை எதிர்த்து போட்டியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த பெற்ற மொத்த வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைத்த மொத்த வாக்குகள் 345,221 ஆகும். இதனை அவர் பெற்ற மொத்த வாக்குகளிலிருந்து கழித்தால் 5,670,713 வாக்குகள் சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலும் இருந்து பெற்றதாகும். அதேநேரம் சரத் பொன்சேகா பெற்ற 4,173,185 மொத்த வாக்குகளிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பெற்ற 684,944 வாக்குகளை கழித்தால் வரும் 3,448,241 வாக்குகளே சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டத்திலிருந்து அவரால் பெற முடிந்திருக்கிறது.

 

பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மஹிந்தவை விட அரைப்பகுதிக்கு மேல் பெற்றிருந்தும் அவரால் வெல்ல முடியவில்லை. இது எதனை நமக்குச் செய்தியாகத் தருகிறது என்றால், இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்களின் அதிகரித்த ஆதரவு என்பது சிங்கள மக்களின் அதிகரித்த ஆதரவு இல்லாதபோது பயனில்லை என்பதைத்தான்.

 

இதனை அடுத்து 2010 ஏப்ரல் 8ஆந் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,846,388 (60.33%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 127 ஆசனங்களையும் தேசியப்பட்டியலில் இருந்து 17 ஆசனங்களுமாக மொத்தம் 144 நாடாளுமன்ற உறுப்பினர்களை உரித்தாக்கி கொன்டது. இதில் ஐ.தே.முன்னணி 2,357,057 (29.34%) வாக்குகளைப் பெற்று மாவட்ட ரீதியாக 51ம் தேசிய பட்டியலில் 9மாக மொத்தம் 60 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றெடுக்க முடிந்திருக்கிறது. இது மஹிந்தவின் மக்கள் செல்வாக்குக்கு முன்னால் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

 

கடந்த 2015 ஜனவரி 8 ஆந் திகதி நடைபெற்ற நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற 7 வது தேர்தலில் மைத்திரி பெற்ற மொத்த வாக்குகள் 6,217,162 (51.28%) ஆகும். இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து கிடைத்த 978,111 வாக்குகளை கழித்தால் ஏனைய சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,239,051 வாக்குகளையே மைத்திரியால் பெற முடிந்திருக்கிறது. அதேநேரம் மஹிந்த சிங்கள மக்களை பெருவாரியாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 5,544,490 வாக்குகளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 223,600 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,768,090 (47.58%) வீதமான வாக்குகளை பெற்றிருக்கின்றார். ஆயின் ஒப்பீட்டளவில் மைத்திரியை விடவும் சிங்கள மக்களின் வசீக்கரிப்புக்கும் பற்றுக்கும் அதிக கவனத்தை பெற்றவராக மஹிந்த ஆகுகின்றார்.

 

யுத்த வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கோரிய போதிலும் அது மஹிந்தவுக்கு எழுதிக் கொடுத்த உரிமை போன்றுதான் சிங்கள மக்களின் பெரும்பாலானவர்களின் மனோபாவம் அமைந்து காணப்படுகின்றது. இதனால்தான் ஏழாவது ஜனதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் எதிர் கொண்ட பொதுத் தேர்தலில் வீழ்ந்து விடாது நிமிர்ந்து நிற்கும் நிலையை எய்துகின்றார். அதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அவரது ஆளுமையும் செல்வாக்கும் தளர்ந்து விடாது ஓர் உறுதியான தடத்தைப் பெறுகின்றார். ஐக்கிய தேசிய முன்னணி 5,098,916 (45.66%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 106 ஆசனங்களை தன்வசமாக்கிய போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4,732,664 (42.38%) வீத வாக்குகளைப் பெற்று மொத்தமாக 95 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்றது இதற்கு சார்பானவராக ஐனாதிபதி மைத்திரி இருந்தும் வெற்றி பெற்ற எம்.பிக்களில் பெரும் பகுதியினர் மஹிந்த அணியென பிரிந்தும் அவரோடு ஒட்டிக் கொண்டனர்.

 

இத்தேர்தலில்கூட சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 7 மாவட்டங்களை வென்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,534,361 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த வாக்குகள் 198,303 சேர்த்தால் 4,732,664 ஆகும். அதேநேரம் ஐ.தே.முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் பெற்ற வாக்குகள் 4,772,360 ஆகும். வடக்கு, கிழக்கில் கிடைத்த 326,548யையும் சேர்த்தால் மொத்தமாக 5,098.916 வாக்குகளாகும்.

 

இது ஐனாதிபதியாக மைத்திரி இருந்தும் அவர் பக்கம் சாய்ந்து கொள்ளாது மஹிந்த பக்கம் சார்பு நிலைப்பாட்டை எடுப்பது கூட அவரின் ஆளுமையாகவே அமைகின்றது. இந்தப் பலம் ஒரு தனிக் கட்சியை ஸ்தாபிக்கும் கட்டமைப்பை உருவாக்கும் பக்கம் திரும்புகின்றது. இதுவலிமையான காலூன்றலை மஹிந்தவிற்கு கைகோர்த்து இருப்பதையும், குறுகிய காலத்திற்குள் செல்வாக்குள்ள ஒரு கட்சியாக அதனை வளர்த்தெடுப்பதற்கு வாய்ப்பளித்து, உறுதி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் அவர் பெற்றிருக்கின்றார்.

 

கடந்த 2018 பெப்ரவரி 10ஆந் திகதி நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் 340க்கு தேர்தல் நடைபெற்றது. காலி மாவட்டத்தில் அமைந்துள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு தொடர்பிலான வழக்கின் காரணமாக இதற்கு மட்டும் அன்று தேர்தல் நடைபெறவில்லை. ஆயினும் அண்மைய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கடந்த 11 ஒக்டோபர் 2019இல் அதற்கான தேர்தலும் நடந்து முடிந்தது. இதன் பெறுபேறுகள் பின்வருமாறு காணப்படுகின்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5,030,209 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இக்கட்சிக்கு கிடைத்திருக்கும் 142,598 வாக்குகளை கழித்தால், இம்மாகாணங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 17 மாவட்டங்களிலிருந்து 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் திருமலை மாவட்டம் உள்ளடங்களாக மொத்தம் 16 மாவட்டங்களை இக்கட்சி கைப்பற்றியது.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எந்த மாவட்டங்களையும் வெற்றி பெறாது 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 1,502,507 வாக்குகளைப் பெற்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களி லிருந்து இக்கட்சிகளுக்கு கிடைத்த 167,428 வாக்குகளை கழித்தால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்தும் பெற்ற மொத்த வாக்குகள் 1,335,079 ஆகும்.

 

ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் மொத்தமாக பெற்ற 3,650,733 வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த 262,746 வாக்குகளைக் கழித்தால், ஏனைய 17 சிங்கள மக்களை அதிகரிப்பாக கொண்டிருக்கும் தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் கிடைத்த வாக்குகள் 3,387,987 ஆகும். நூவரெலியா, திகாமடுல்ல பதுளை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

 

ஜே.வி.பி 713,367 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்திருக்கும் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 18,246 பெற்ற வாக்குகளைக் கழித்தால் 695,121 வாக்குகளை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏனைய 17 மாவட்டங்களிலிருந்து பெற்றது.

 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமாக பொது ஐன பெரமுன 16 மாவட்டங்கள், ஐக்கிய தேசிய கட்சி 3 மாவட்டங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 மாவட்டங்கள் என வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டி விடயம் யாதெனில், சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள 17 மாவட்டங்களிலும் ஐ.தே.கட்சியை விட மஹிந்த தரப்பை அங்கீகரிக்கும் பாங்கினையாகும். இந்த வித்தியாசத்தை அக்கட்சிகள் பெற்ற வாக்குகளில் காணலாம்.

 

பொதுஜன பெரமுன 4,887,611 வாக்குகளை பெற்றிருக்கும் அதேவேளை ஐ.தே.கட்சி 3,387,987 வாக்குகளை அடைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கிடையில் காணப்படும் வித்தியாசம் 1,499,624 ஆகும். இதனோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் (17 மாவட்டங்களில்) 1,335,079 வாக்குகளையும் கூட்டினால் 2,834.703ஆக உயர்வு பெறுவதைப் பார்க்கலாம்.

 

நமது நாட்டில் காணப்படும் 341 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் முடிவுகளை கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, பின்வரும் பெறுபேறுகளை அவதானிக்கலாம். பொதுஐன பெரமுன 5,030,209 (40.51%) ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி 1,502,507 (12.10%) ஐக்கிய தேசிய கட்சி 3,650,733 (29.40%) இதர கட்சிகள் 1,517,503 (12.22%) ஜேவி.பி 713,367 (5.74%) பெற்றிருந்தன. இத்தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 12,625,886 (80.20%)ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 211,567 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 12,414,319 ஆகும் அளிக்கப்படாத வாக்குகள் 3,116,485 (19.79%) ஆகும்.

 

கடந்த பல தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை நோக்கும் போது இம்முறை 81 அல்லது 82 வீதமானோர் வாக்களிப்பார்கள் என எதிர் பார்க்கலாம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வைத்து ஏனைய தேர்தல்களின் முடிவு எவ்வாறு அமையும் என்ற கணிப்பீட்டை செய்யக் கூடாது என்கின்ற பொதுநியதியை மறுக்கக் கூடாது என்பதை நான் கவனத்தில் கொள்ளாமலில்லை. ஆனால் இத்தேர்தலில் இறுதியாகவும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்ததன் பின்னரும், முன்னைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின் நடைபெற்ற எல்பிட்டிய தேர்தல் முடிவும் நமது கவனத்தை ஈர்க்கின்றது.

 

ஏனெனில், சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு செய்யப்பட்டும், அவருக்கே அதிகரித்த ஆதரவுத் தளம் பெருகிக் கொண்டிருக்கிறது என்கின்ற பரப்புரைக்குமத்தியில், எல்பிட்டி பகுதி மஹிந்தவின் கோட்டை தானே எனச் சொல்லி இந்த வெற்றி நடை பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தாது என சொல்வது பொருத்தமாகப் படவில்லை. உண்மையில் கோட்டை என நம்பப்படுவதில் உடைப்பு நிகழாது எப்படி வெற்றி அலைவீசும் என்ற கேள்வியும் எழுப்பப்படாது விடலாமா?

 

இன்று மஹிந்தவின் கடந்த கால அரசாங்கத்தின் போது சாட்டப்படும் குடும்ப ஆட்சி, நாட்டை விற்றல், ஊழல், மக்கள் அழிப்பு, வெள்ளை வேன் கலாசாரம் என்ற கருத்தாடல்கள் 2015 களிலிருந்து கூறப்பட்டு வந்த தொடர்கதையாடலுக்கு மத்தியில் அவர் மீண்டெழுந்து எழுச்சி பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாக நமக்கு அறிவிப்பு செய்கின்றது. அது மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுமார் 32 மாத ஆட்சியின் பின்னர் ஐ.தே.கட்சியினர் பலத்த தோல்வியை அடைந்திருக்கின்றனர் எனில், அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அர்த்தம் அற்றதாகாது. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் இம்முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக் கூடும்.

 

அந்த அடிப்படையில் இதன் பெறுபேறுகளை பின்வருமாறு பார்க்கலாம். பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றின் இணைவு ரீதியாக முறையே 40.51, 12,10 சேர்த்து52.51% வீதத்தை குறித்துக் காட்டும். ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 29.40ம் இதர கட்சிகள் பெற்ற 12.22ம் இணைந்தால் 41.62% வீதத்தையே சுட்டுகிறது. ஜே.வி.பி.5.74% வீதம் தனிமைப்படுகிறது.

 

கடந்த 2015இல்மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் தான் மஹிந்த பெற்ற சிங்கள மக்களின் வாக்குக்கு மைத்திரியை சமம்படுத்தியது என்றால் அவரது வெற்றிக்கு ஜே.வி.பி.யினரின் வாக்கே உயர்த்தியது என்பதில் சந்தேகமில்னை ஏனெனில் அத்தேர்தலை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இக்கட்சி 543,944 (4.87%) பெற்றிருக்கும் வாக்கு உறுதி செய்கின்றது.

 

ஆகவே, இம்முறை ஜே.வி.பி.போட்டியிலிருந்து முற்றாக விலகியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி  மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்காளர்களின் பெரும்பாலானவர்கள் சஜித்தை ஆதரிக்கும் நிலை தோன்றாத வரை மஹிந்தவின் அணி வேட்பாளர் கோட்டாவை தோற்கடித்துவிடலாம் என்று நம்புவது சரியான அபிப்பிராயமாக இராது. 

 

பொறுத்திருந்து பார்ப்போம் பெற்றியாளர் யாரென்று?

https://www.madawalaenews.com/2019/11/huh_99.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.