Jump to content

நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…

November 13, 2019

00-2.jpg?resize=800%2C600

யாழ்ப்பாணம் – நாவலர் வீதி புகையிரதக் கடவையின் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான 31 வயதுடைய  நிசாந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்தார்.

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த உணவக உரிமையாளர் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

00-1.jpg?resize=800%2C600

Link to comment
Share on other sites

ரயில் கடவையை மறித்து யாழில் ஆர்ப்பாட்டம்

image_65385fc671.jpgரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைத்துள்ளன. 

இன்று (13) காலை, காங்கேசன்துறை - கொழும்பு சேவையில் ஈடுபட்ட்ட ரயில், யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில்,  ரயில் கடவையை  கடக்க முற்பட்ட நபருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.

சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன. 

சம்பவ இடத்துக்கு ரயில் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர்.

 பொலிஸாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.

-எம்.றொசாந்த்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ரயல-கடவய-மறதத-யழல-ஆரபபடடம/71-240990

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:

சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஊரவர்கள், ரயில் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் ரயில் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அரசுக்கு முண்டு கொடுக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை, சரவணபவன், போன்றவர்களை நம்பிப் பயனில்லை என்ட நிலைல மக்கள் நேரடியாகவே போராடத்  தொடங்கிவிட்டனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் வீதி புகையிரதக் கடவை.... மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் உள்ளது.
அதற்கு இன்னும், தானியங்கி பாதுகாப்பு  கதவுகளோ...
எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவிகளோ... இல்லாமை மிகவும் வேதனைக்குரியது. 

அதுகும்.... ஒரு இளம் குடும்பத் தலைவரின் இறப்பு,
ஒரு குடும்பத்தை... நிற்கதியாக்கி உள்ளது.
இதுவே... கடைசி இறப்பாக  இருக்கட்டும். 

Link to comment
Share on other sites

அடிக்கடி விபத்துக்கள் நடக்குது. ஆனால் அதட்கு பதில் சொல்ல யாருமே இல்லை. அதிகாரிகள் நிச்சயம் இதட்கு பதில் சொல்ல வேண்டும். மேலும் மேலும் அப்பாவி மக்களின் உயிர் பறிபோகாமலிருக்க அரசு எதாவது செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இருந்த பாதுகாப்புக் கடவைகளை எல்லாம் அகற்றிவிட்டு.. இப்போது பாதுகாப்புக் கடவைகளற்ற ரயில் பாதை அமைப்பும்.. மக்கள் அடர்த்தியான இடங்களில் கூட வேகக்கட்டுப்பாடற்ற கடுகதி வேகமும்..  தொடரூந்துத் துறையில் உள்ளோரினது மக்கள் குறித்த அக்கறையின்மையும்.. அரச அதிகாரிகளுக்கு மக்களின் அவலம் குறித்த அக்கறையின்மையும்..  தான் இந்த விபத்துக்கள் திட்டமிட்டு தொடரக் காரணமாகும்.

இன்னொரு அப்பாவி தமிழன் பலி.

ஆனால் தமிழரின் காசில் தான் இந்த தொடரூந்துறையே இப்போ இலாபத்தில் இயங்குவதாக சிங்கள அரசே ஒத்துக் கொண்டுள்ள நிலையில்.. தமிழர்களின் பாதுகாப்புக் குறித்து... பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறை காட்டாமை என்பது.. மிகவும் கண்டிக்கத்தக்கது. 

மீண்டும் மீண்டும் ஒரே தவறிழைக்கப்படுவது விபத்தல்ல.. திட்டமிட்ட செயல் ஆகும்.

வடக்கு ஆளுநர் சென்னைக்கு விமானத்தில் பறக்க முதல்.. இப்படியான அநியாயங்களை தடுக்க தனது புலமையை.. சிங்கள அரசுடனான தொடர்புகளை பயன்படுத்தலாமே..???! 

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

வடக்கு ஆளுநர் சென்னைக்கு விமானத்தில் பறக்க முதல்.. இப்படியான அநியாயங்களை தடுக்க தனது புலமையை.. சிங்கள அரசுடனான தொடர்புகளை பயன்படுத்தலாமே..???! 

அவர் புத்த மாநாடு நடத்தினா   சிங்கள அரசு நிதி உதவி முதல் எல்லா ஆதரவு தரும்!

வேற ஏதாவது செய்ய நெச்சா சிங்கள அரசு புலம்பெயர் தமிழர்ட்டை காசை பறிச்சு செய்யச் சொல்லும்.

அதான், அவர் கனடா சென்று தன்ரை சொந்தக்கதை சோகக்கதை சொல்லி காசு பறிக்கப் பாத்தவர்.  வடமாகாண சபை முயற்சில தொடங்கி நிறைவடையும் நிலைல இருக்கும் பல திட்டங்களை தானே செய்தமாதிரி ரீல் விட்டார்.

எல்லாம் ஏமாந்த தமிழனின் தலைல மிளகாய் அரைக்கத்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for fence to railway track"

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிக்கூடாகச் செல்லும் தொடரூந்துப் பாதைக்கு சமாந்திரமாக இப்படியான வேலிகள் அமைப்பது.. கடவைகளில் தானியங்கிப் பாதுகாப்புக் கடவைகள் அமைப்பதும் மட்டுமே இந்த விபத்துக்களை கூடிய அளவில் தடுக்கும். 

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா..??!

Image result for fence to railway track"

Image result for fence to railway track"

Image result for fence to railway track"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலர் வீதி புகையிரதப்  பாதையை... கடந்துதான்,
தினமும்,  ஆயிரக்கணக்கான.. பாடசாலை மாணவர்கள்,
யாழ். இந்துக் கல்லூரிக்கும்,  யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கும்...
துவிக் சக்கர வண்டிகளில்... கூட்டம்  கூட்டமகா கதைத்துக்  கொண்டு போவார்கள்.

மாணவப் பருவத்தில்,  அவர்களின்  கதை பிராக்கில்... 
புகையிரத கடவையையோ...  அது, வரும் சத்தத்தையோ அவதானிக்க மாட்டார்கள். 
அந்த வயதில்... அப்படித்தான் இருப்பார்கள்.  

அதனை... கருத்தில் கொண்டு, சம்பந்தப் பட்ட  இடங்களில்  வாழும் மக்கள் அனைவரும்...
இதனைப் போல, பாதுகாப்பற்ற  புகையிரத கடவைகளுக்கு,
சரியான பாதுகாப்பு கொடுக்கும் படி, 
மாநகர சபை, கிராம சபை,   அரச அதிபர் அலுவலகம் போன்ற...இடங்களுக்கும்,
உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் முன்பும்...
சாத்வீக... மறியல் போராட்டம்  செய்ய வேண்டும்.

ஆனால்... இதற்கு, எல்லோரும் ஒற்றுமையாக...
முன் அறிவித்தல் கொடுத்து, ஒரே நாளில் செய்தால்... பலன் நிச்சயம்  கிடைக்கும்.

இல்லையேல்... இன்னும்  மரணங்கள்  தொடர்வதை, தவிர்க்க முடியாது.
அது.... எமக்கு மிகவும் வேண்டிய, உறவினராகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நான் கவனமில்லாமல் வாகனம் ஓடுவேன்,  அதுவும் பாதுகாப்பற்ற,  சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட பாதையூடாக.  ஆனால் விபத்து ஏற்பட்டவுடன் அரசையும்,  பொது நிறுவனங்களையும் குறை சொல்வேன்.  நானாக ஒன்றும் செய்யமாட்டேன்.  எல்லாவற்றையும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பேன்.  

 

இந்தப்போக்கு சரியானதுதானா ? 

(புகையிரத பாதையில் விபத்தில் அகப்படும் காட்டு விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையே வேறுபாடு இல்லையா   ????? )

 

Link to comment
Share on other sites

1 hour ago, Maharajah said:

நான் கவனமில்லாமல் வாகனம் ஓடுவேன்,  அதுவும் பாதுகாப்பற்ற,  சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட பாதையூடாக.  ஆனால் விபத்து ஏற்பட்டவுடன் அரசையும்,  பொது நிறுவனங்களையும் குறை சொல்வேன்.  நானாக ஒன்றும் செய்யமாட்டேன்.  எல்லாவற்றையும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பேன்.  

இந்தப்போக்கு சரியானதுதானா ? 

(புகையிரத பாதையில் விபத்தில் அகப்படும் காட்டு விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையே வேறுபாடு இல்லையா   ????? )

 

வட மாகாணத்தில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றும்  அதனால் தான் அங்கு 95% இடங்களில் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்படவில்லை என்றும், ஏனைய பிரதேசங்களில் விலங்குகள் இருப்பதால் தான் அங்கு 80% இடங்களில் பாதுகாப்பு கடவைகள் அமைந்துள்ளதாகவும் உங்கள் கருத்து அமைகிறது.

மேலும், பாதுகாப்பான கடவைகள் இல்லை என்று தெரிந்த பின்னரும்கூட  தொடரூந்து பாதையைக் கடப்பவர்கள் பொறுப்புடன் கடக்கவேண்டிய அவசியத்தை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

37 minutes ago, போல் said:

வட மாகாணத்தில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றும்  அதனால் தான் அங்கு 95% இடங்களில் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்படவில்லை என்றும், ஏனைய பிரதேசங்களில் விலங்குகள் இருப்பதால் தான் அங்கு 80% இடங்களில் பாதுகாப்பு கடவைகள் அமைந்துள்ளதாகவும் உங்கள் கருத்து அமைகிறது.

மேலும், பாதுகாப்பான கடவைகள் இல்லை என்று தெரிந்த பின்னரும்கூட  தொடரூந்து பாதையைக் கடப்பவர்கள் பொறுப்புடன் கடக்கவேண்டிய அவசியத்தை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படியல்ல திருவாளர் போல் அவர்களே,  

நான் கூறியது,  எமக்குள்ள பொறுப்பு பற்றியது.  எல்லாவற்றையும் அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் செய்யவேண்டும் என் எதிர்பார்க்கும் மனநிலை தொடர்பானது.  இங்கே அரசாங்கத்தின் பொறுப்பை குறைத்து கூறவில்லை.  ஆனால் நாடெங்கிலும் நடைபெறும் புகையிரத கடவை அகால மரணங்களை  99.9% நாம் தவிர்க்கமுடியும் என்பது என துணிபு. 

மேலே குறிப்பிட்ட அகால மரணத்தை,  சில கணங்கள் நிதானமாக புகையிரத பாதையை அவதானித்திருந்தால் தவிர்த்திருக்கலாம்  இல்லையா ? 

எமக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு நாம் யாரையும் கைகாட்ட முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

நான் கவனமில்லாமல் வாகனம் ஓடுவேன்,  அதுவும் பாதுகாப்பற்ற,  சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட பாதையூடாக.  ஆனால் விபத்து ஏற்பட்டவுடன் அரசையும்,  பொது நிறுவனங்களையும் குறை சொல்வேன்.  நானாக ஒன்றும் செய்யமாட்டேன்.  எல்லாவற்றையும் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பேன்.  

 

இந்தப்போக்கு சரியானதுதானா ? 

(புகையிரத பாதையில் விபத்தில் அகப்படும் காட்டு விலங்குகளுக்கும் மனிதருக்கும் இடையே வேறுபாடு இல்லையா   ????? )

 

மகாராஜா அவர்களே..... மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில்,
தினமும், பல  பாடசாலை மாணவர்கள்...  அந்தக் கடவையை,
கடந்து செல்லும் பகுதியிலாவது...  ஒரு அரசாங்கம்  தான்,
தனது நாட்டு  மக்களின் உயிரில், கவனம் செலுத்த வேண்டும்.
இது, ஸ்ரீலங்காவில்... தமிழர் வாழும் பகுதியில்,  சாத்தியமில்லை.

இதனை... முன்பே, அரசின் கவனத்திற்கு.. அழுத்தமாக கொடுக்காமல் விட்டது,
அந்த ஊர் மக்களின்... கவலையீனம்.  கண்டனத்திற்குரியது.
அந்த சோம்பேறித்தனம்... நாளை,  வேறு ஒரு தமிழ் பகுதியிலும் நடக்கலாம்.

இவ்வளவிற்கும்... மரணித்தவர், தனது  கவனக் குறைவால்...
மனைவியையும், சிறிய ஒரு வயதுக் குழந்தையையும்...
சொல்ல முடியாத, துயரத்தில்... விட்டு விட்டுப்  போய் விட்டார்.
அதற்குப் பின்.. அவர்கள் வாழ்வதற்காக, போராட்டங்களை,
நினைத்துப் பார்க்க, மிகவும்  வேதனையானது. 

வாகன ஓட்டிகளே.... 
உங்கள் குடும்பத்தையும்,  நினைத்துக் கொண்டு,  வாகனம்  ஓட்டுங்கள்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Maharajah said:

அப்படியல்ல திருவாளர் போல் அவர்களே,  

நான் கூறியது,  எமக்குள்ள பொறுப்பு பற்றியது.  எல்லாவற்றையும் அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் செய்யவேண்டும் என எதிர்பார்க்கும் மனநிலை தொடர்பானது.  இங்கே அரசாங்கத்தின் பொறுப்பை குறைத்து கூறவில்லை.  ஆனால் நாடெங்கிலும் நடைபெறும் புகையிரத கடவை அகால மரணங்களை  99.9% நாம் தவிர்க்கமுடியும் என்பது என துணிபு. 

மேலே குறிப்பிட்ட அகால மரணத்தை,  சில கணங்கள் நிதானமாக புகையிரத பாதையை அவதானித்திருந்தால் தவிர்த்திருக்கலாம்  இல்லையா ? 

எமக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு நாம் யாரையும் கைகாட்ட முடியாது.  

உண்மை!

மரணப் புதைகுழிகள் இருப்பது தெரிந்தும் பொறுப்பில்லாமல் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maharajah said:

எமக்குள்ள பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு நாம் யாரையும் கைகாட்ட முடியாது.  

உலகம் பூராவும் பொதுமக்களில் குற்றம் சொல்ல முதல்.. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தான் வழி செய்வார்கள்.

நீங்கள் என்னடான்னா.. நாங்கள்.. எங்கள் இஸ்டத்துக்கு ஓடுவம்... பொது மக்களுக்கும் வன விலங்குகளும் தான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்.

இந்தக் கடவையில்.. 1990 இல்.. இந்தியப் படைகள் காலத்தில்.. கடவையும் போட்டு.. கண்காணிப்பு கண்காணிப்பாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஒரு விபத்தும் நிகழவில்லை. அதுக்கு முன்னர் பல இடங்களிலும் மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில்.. தொடரூந்தை வேகம் குறைத்துப் பயணிக்கச் செய்தனர். தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு செல்லக் கோரப்பட்டனர். ஆனால்.. இவை எதுவும் இல்லாமல்.. வேகமாக.. தொடரூந்து வருவது தெரியாமல்.. மக்கள்.. வீதிகளை கடக்கும் போது.. விபத்துக்குள்ளாவதற்கு மக்களை விட தொடரூந்து துறையின் கவயீனமே முக்கிய காரணம். 

எல்லாம் மாற்றான் தாய் மனப்பான்மையின் விளைவு.

உங்களின் கதை எப்படி என்றால்.. நீங்கள் போராடினால்.. நாங்கள் செல் அடிச்சு சாகடிப்பும்.. இல்லாட்டி.. எங்களுக்கு அடிமையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்.. சிந்திப்பது.. போல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

உலகம் பூராவும் பொதுமக்களில் குற்றம் சொல்ல முதல்.. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தான் வழி செய்வார்கள்.

நீங்கள் என்னடான்னா.. நாங்கள்.. எங்கள் இஸ்டத்துக்கு ஓடுவம்... பொது மக்களுக்கும் வன விலங்குகளும் தான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்.

இந்தக் கடவையில்.. 1990 இல்.. இந்தியப் படைகள் காலத்தில்.. கடவையும் போட்டு.. கண்காணிப்பு கண்காணிப்பாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஒரு விபத்தும் நிகழவில்லை. அதுக்கு முன்னர் பல இடங்களிலும் மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில்.. தொடரூந்தை வேகம் குறைத்துப் பயணிக்கச் செய்தனர். தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு செல்லக் கோரப்பட்டனர். ஆனால்.. இவை எதுவும் இல்லாமல்.. வேகமாக.. தொடரூந்து வருவது தெரியாமல்.. மக்கள்.. வீதிகளை கடக்கும் போது.. விபத்துக்குள்ளாவதற்கு மக்களை விட தொடரூந்து துறையின் கவயீனமே முக்கிய காரணம். 

எல்லாம் மாற்றான் தாய் மனப்பான்மையின் விளைவு.

உங்களின் கதை எப்படி என்றால்.. நீங்கள் போராடினால்.. நாங்கள் செல் அடிச்சு சாகடிப்பும்.. இல்லாட்டி.. எங்களுக்கு அடிமையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்.. சிந்திப்பது.. போல் இருக்கிறது.

ஐயா நெடுக்காலபோவான், 

ஏன் குழந்தைகள் போல குறுக்கால போறீங்கள்,  முதலில் பிறரை முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.  பிறகு நான் எழுதியதை இரண்டுதடவை திருப்பி திருப்பி வாசியுங்கள்.  அப்படியும் விளங்காவிட்டால் திரும்பவும் வாசியுங்கள்.  அப்படியும் விளங்கவில்லை என்றால் திரும்பவும் வாசியுங்கள் விளங்கும்.  அதுக்கும் சரிவரவில்லை என்றால் என்னால் உங்களுக்கு உதவமுடியாது.  ஐ ஆம் வெரி வெரி சோறி. 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.