Jump to content

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (D.N.A) பரிசோதனை செய்ய வேண்டும் : கருணா அம்மான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

 

பாறுக் ஷிஹான்
சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.
அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவினை ஆதரித்து புதன்கிழமை(13) மதியம்  கல்முனையில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


எல்லோரும் சனாதிபதி தேர்தலில் நன்றாக பேசி வருகிறார்கள்.உங்களுக்கு தெரியும் இந்த சனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தாக களமாக ஒருபோதும் இல்லாத வகையில் மாற்றமடைந்து வருகின்றது. ஏனென்றால் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.யுத்தம் நடந்தால்  கொலை தான் இடம்பெறும் என்பது யாவரும் அறிவர்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லீம் கட்சிகளை சஜீத் பிரேமதாச அரவணைத்து வருகின்றார்.இதை விட கூட்டமைப்பும் மக்களுக்கு துரோகத்தை செய்து வருகிறது.சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை(டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று கூற விரும்புகின்றேன்.

கோட்டாபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பதா , சஜித் பிரேம தாஸவிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும்.நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கம் வந்தது 100 நாளைக்குள் பல வேலைத்திட்டங்களை செய்வோம் என்றார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை.மாறாக பழிவாங்கும் படலத்தை தந்தான் கையிலெடுத்தார்கள் .என்னையும் கைது செய்தார்கள் தான் நான் சொன்னேன் என்னை உள்ளே வைத்தால் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் ஏனென்றால் அவன்தான் எனக்கு ஆயுதம் தந்தவர் அவன்தான் அப்போது என்னை பயங்கரவாதி என்றால் ஆயுதம் தந்தவரையும் கைது செய்ய வேண்டும் என்றபடியால் தான் என்னை விட்டார்கள். இப்படி பழி வாங்கும் வேலைகளை செய்தார்களே தவிர எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை.ஏற்றுக்கொள்ள முடியாத 13அம்ச கோரிக்கைகளை கொண்டு தமிழீழ பற்றாளர்களாக காட்டி கொண்டு பிழைப்பு நடார்த்துவதற்காக கொண்டுவந்த கோரிக்கை தான் அது. அவர்கள் நல்லவர்கள் என்றால் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பு கிழக்கில் மாத்திரமல்ல வடக்கில் கூட இருக்காது . இந்த தடவை கிழக்கை விட வடக்கில் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்கள் அந்தளவிற்கு அங்கு தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இங்கும் தமிழ் மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கி காட்ட வேண்டும் அப்போதுதான் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் .கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடார்த்தி வருகின்றனர் இன்னும் தீர்வு இல்லை.மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்து என்னை செய்ய வேண்டும் என்று கேட்டார் நாங்கள் சொன்னோம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தான் கேட்டோம் . அப்போது அவர் கேட்டார் அம்பாறை பிரச்சினைகளை ஏன் இங்கு கதைக்கிறீர்கள் என்றார் நான் சொன்னேன் இது அம்பாறை பிரச்சினை இல்லை இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை என்றேன் உடனே கல்லடியில்  கல்முனை வடக்கு பிரதேச தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக பேசினார்.

முஸ்லிம் தரப்பு எல்லை நிர்ணயம் செய்யாமல் தடுப்பதேன் அவர்கள் களவெடுத்து வைத்த காணியெல்லாம் பிடிபடும் என்றுதான்.இதற்கு தீர்வாக நாம் கிழக்கில் மொட்டு விற்கு வாக்களிப்போமானால் சரியான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.1983 யூலை கலவரம்  சத்துருக்கொண்டான் படுகொலை தொடக்கம் இந்த நாட்டிலே இன முறுகலை தோற்றுவித்து பாரிய யுத்தம் நடைபெற வழி வகுத்தது ஐக்கிய தேசிய கட்சி அவரகளுக்கு முட்டுக்கொடுத்து  வரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் உண்மையான தமிழின படுகொலையாழிகள்

யுத்தத்தை முடித்து வைத்தது மஹிந்த ராஜபக்ச இன்று நன்றாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் உணர்வுகளை மறக்கவில்லை  தலைவர் பிரபாகரனை ஒருநாளும் குற்றம் சாட்டவில்லை . என் அண்ணனை கூட சுட்டது விடுதலை புலிகள் தான் அது அவர்களின் இயலாமை . அதற்காக தலைவர் பிரபாகரன் சாகும்வரை என்னை குற்றம் சாட்டவில்லை  போராட்டத்தில் என்னுடைய அருமை தலைவருக்கு தெரியும்  என்னுடைய கதையை அன்று கேட்டிருந்தால் அழிவை தடுத்திருக்கலாம். மட்டக்களப்பில் ரணிலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், யோகேஸ்வரன் அவர்களும் கருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் . என்ன மொழியில் பேசினார்கள் என்று தெரியாது அவர்களுக்கு சிங்களம் தெரியாது .

இப்போது சஜித் பிரேம தாஸவிற்கு வாக்கு கேட்கும் முஸ்லிம் தலைவர்கள் பெரும் இனவாதிகளாக இருக்கின்றனர் . அவர்களுடன் தமிழர்கள் சேர்வதுதான் துயரம் . முஸ்லிம் அரசியல் வாதிகள் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்றை சொல்கிறார்கள்.தமிழ் மக்களுக்காக சர்வதேசத்தில் பேச்சுவார்த்தை நடார்த்தியவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். சம்பந்தரோ ,மாவையோ,சுமந்திரனோ பேச்சுவார்த்தை நடார்த்தவில்லை .ரணிலின் அரசாங்கம் தான் படுகொலை செய்தது என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் இன்று ரணிலுடன் சேர்ந்துள்ளார்.  இவர்களுக்கு உண்மையாக செருப்படி கொடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடக்கி வைத்தவன் நான்தான் . சிவராம் என்ற ஊடகவியலாளர்தான் நாங்கள் யுத்தம் செய்யும் போது இராணுவ  புத்தகங்களை எடுத்து தந்தவர் அவர்தான் அவர் சிறந்த ஆய்வாளர் .அவர்தான் அரசியல் சிந்தனையையும் பாராளுமன்றத்தில் எமது குரல் ஒலிக்க செய்ய வேண்டும் என  முடிவெடுத்து வன்னியில் வைத்து ஒப்பந்தங்களை செய்துதான் பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். யுத்தம் முடிய உடைத்துக்கொண்டு ஏமாற்ற தொடங்கி விட்டனர். அதற்காகத்தான் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கினேன் .இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவால் கூட்டமைப்பு உடையும்.கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் இரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கைசாத்து இட்டுள்ளேன்.  12000 போராளிகளை எனது பொறுப்பில் எடுத்து விடுவித்துள்ளேன் . இந்த தடவை  இவற்றை கணக்கிலெடுத்து கோட்டாபய ராஜபக்ச அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி உட்பட ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.

https://www.madawalaenews.com/2019/11/dna.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.