Jump to content

தந்தை செய்த நன்றியை மதித்து மலாயர் சஜித்துக்கே வாக்களிப்பர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2.jpg

(எம்.எம்.எஸ். ஸாகிர்)
இலங்கையிலுள்ள மலாய இனத்தை மதித்து மலாய இனத்தவர் ஒருவரை காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி
ஆர். பிரேமதாஸ தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமித்து மலாயர் சமூகத்துக்கு கௌரவம் அளித்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கே எந்தவித பக்கச் சார்பும் இல்லாதிருந்த இலங்கை வாழ் மலாய இனத்தவர், முதன்முறையாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக துனிய மலாய் துனிய இஸ்லாம் (DMDI) அமைப்பின் இலங்கைத் தலைவர் டாக்டர் அன்வர் உலுமுத்தீன் தெரிவித்தார்.

மலாய இனத்தவர்கள் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சம்பந்தமாக கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் மலாய இனத்தவர் 80 ஆயிரம் பேர் தங்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனாலும் தற்போது மலாயர் இனத்தவர்கள் 90 ஆயிரத்துக்கும் ஓர் இலட்சத்துக்கும் இடையில் இலங்கை நாட்டில் வாழ்கின்றார்கள் எனக் கணிக்கலாம்.

அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி உடையவர்களாகக் காணப்படுகின்றனர். அந்த வாக்குகளை நாங்கள் இந்தமுறை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அளிப்பதற்கு இருக்கின்றோம். 70 வருடத்துக்குப் பிறகு இந்த முயற்சியை நாங்கள் செய்கின்றோம்.

நாங்கள் சஜித்தை ஆதரிப்பதற்கு ஒரே ஒரு காரணம், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸ எங்களுக்கென்று ஓர் இடத்தைக் கொடுத்து, ஒரு எம்.பி.யைக் கொடுத்து, மலாயர் இனத்தவர்களைக் கௌரவப்படுத்தினார். அதே நேரத்தில் கொழும்பில் மலாயர் இனத்தவர்களோடு மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்த ஒருவர். எனவே மலாய இனத்தவர்களுடைய உணர்வுகள், தேவைகள் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் மலாய இனத்தவர்கள் இதுவரைக்கும் ஒன்றுமே கேட்டதில்லை. தங்களுக்கென்று ஒன்றும் கேட்காமலே சிங்கள மக்களோடு பின்னிப் பிணைந்து வாழ்பவர்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

இன்றுள்ள நிலைமை ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் மலாய இனத்தவர்களாக இருந்து கொண்டு எங்களுக்கும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அதே தாக்கத்தைத்தான் உண்டாக்குகிறார்கள். அதனாலே நாங்களும் முஸ்லிம்கள் என்பதால் நாங்களும் முஸ்லிம்களோடு ஒன்று சேர்ந்து மற்ற இனத்தவர்களோடு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவைக் கொண்டு வந்தால் தான் எங்களுக்கும் பாதுகாப்பும், உத்தரவாதமும், அமைதியும் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எங்களுக்கு பாதுகாப்பும் அமைதியும்தான் முக்கியம்.

நாங்கள் முக்கியமான ஒரு கோரிக்கையை மட்டும் சஜித் பிரேமதாஸவிடம் விடுக்க இருக்கின்றோம். 

இலங்கையின் முதல் ஆமி ரெஜிமன்டாக மலாயர் ஒருவர்தான்தான் இருந்தார். அவருக்குப் பிறகு நிறைய மலாய ரெஜிமன்ட்கள் சாதித்தார்கள். இலங்கைக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள். இன்றைக்கும் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லத்தீப் வரையில் இலங்கை நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கி, முன்னணியில் திகழ்பவர்கள் மலாயர்கள்தான்.

அந்த அடிப்படையில் பழைய டீ.ஐ.ஜீமார் தற்போது இருக்கின்ற புதிய டீ.ஐ.ஜீ மார், பழைய எஸ்.எஸ்.பிமார், பிரிகேடியர்மார் என்று மலாயர்களை ஒரு குழுவாக ஒன்று சேர்த்து நாட்டுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக, பாதுகாப்பு விவகாரத்தில் ஓர் இடத்தை தருமாறு நாங்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்க இருக்கின்றோம். பாதுகாப்பு விடயத்தில் அப்படி ஓர் இடம் தந்தால் அதில் தொண்டராக வேலை செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வருவதற்கு மலாயர் இனத்தவர் என்ற ரீதியில் எங்களால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து எங்களுக்குள் இருக்கின்ற 60ஆயிரம் வாக்குகளில் 50 ஆயிரம் வாக்குகளை நிச்சயமாக அவருக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை எங்கள் கணீப்பீட்டில் அம்பாந்தோட்டை, கொழும்பு ஆகிய இடங்களில் மலாயர் அடர்த்தியாகவும் மற்றும் ஊவா மாகாணம், பண்டாரவளை ஆகிய இடங்களிலும் நாட்டின் ஆங்காங்கு பல்வேறு இடங்களிலும் மலாயர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களது பாதுகாப்பைக் கருதி, பிரிந்திருந்த மலாயர் இனத்தவர்கள் கூட ஒற்றுமைப்பட்டு,  இம்முறை சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க, ஒட்டுமொத்த மலாயர் சமூகமும் முன்வந்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

https://www.madawalaenews.com/2019/11/DMDI.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.