Jump to content

நல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்


Recommended Posts

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

01__2_.jpg

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன்,

01__9_.jpg

தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

01__8_.jpg

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  

https://www.virakesari.lk/article/68906

 

Link to comment
Share on other sites

'அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’
 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அதனை நிறைவேற்றுவார் என, எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோதும் அதற்கு முன்னரும் யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் அதியுட்ச அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. அதிகார பகிர்வு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முன்னெடுக்கப்படமாட்டாது.

“அரசியல் தீர்வு தொடர்பில் அவரது விஞ்ஞாபனத்தில் எதையம் கூறவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வளவு விடங்கள் இடம்பெற்றுள்ளன. அப்படி இருந்தும் கோட்டாவின் விஞ்ஞாபகத்தில் அரசியில் தீர்வு தொடர்பில் ஒரு வாரத்தை கூட இல்லை.

“நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு வேண்டும் என்றும், அதியுட்ச அதிகார பகிர்வுடனான ஒரு தீர்வு வழங்குவேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் கூறியுள்ளார். அவரது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படும். நிறைவேற்றப்படவேண்டும்.  ஒரு நியாயமான நிதானமான அரசியல் தீர்வு, ஒருமித்த நாட்டுக்குள், பிரிக்கப்படாத  நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப்பகிர்வின் மூலமான தீர்வு வேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அதகர-பகரவ-தடரபல-கடட-வய-தறககவலல/150-240996

Link to comment
Share on other sites

’தமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும்“

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதயத்தால் நாம் ஒப்பந்தம் செய்தோம் என்பதை பலர் கேலி செய்கின்றனர். நாங்கள் எதையும் செய்யவில்லை என்கிறார்கள்.

“அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்துக்குள் விடுவித்துள்ளோம். ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை.

“இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும், ஒன்றுமையான வாக்களித்து சரித்திரத்தை உருவாக்குங்கள். அன்னத்துக்கு வாக்களித்து அந்த வெற்றியை உங்கள் பிரதிநிதிகளான எங்கள் கையில் கொடுங்கள். நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கின்றோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமழரகள-ஒனற-சரநத-வககளகக-வணடம/175-240995

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

 

 

01__8_.jpg

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இவருடன் எனக்கு உள்ள தனிப்பட்ட விரோதம் 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே............

இந்த கூரை இடிந்து விழுந்திருந்தால், தமிழினம் அரசியல் தலைமை இல்லாத அனாதைகளாக்கப்பட்டு  இருப்போம்.  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இதுதான் இவருடன் எனக்கு உள்ள தனிப்பட்ட விரோதம் 

நீங்கள் இப்பவும் இவவை நினைச்சு....நினைச்சு........😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இப்பவும் இவவை நினைச்சு....நினைச்சு........😎

மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........

Link to comment
Share on other sites

54 minutes ago, Maruthankerny said:

மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........

 மருது அடுத்த முறை இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்.  

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும் என்ற நப்பாசையில் நாய்படாதபாடாக அலைகின்றனர்!

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

ஐ. நா.வுக்கு சொந்த பணத்திலா போகிறார்? அவருக்கு கொடுப்பதை எங்களுக்கும் தந்தால் நாங்களும் போய் தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, ஆண்டாண்டு ஐ.நா.வில் திருவிழா கொண்டாடலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும் என்ற நப்பாசையில் நாய்படாதபாடாக அலைகின்றனர்!

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

நல்ல கருத்துக்கள்!

திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதங்களுக்கு துணை போகின்றவர்களுக்கு இதுபோன்ற கருத்துக்கள் கசப்பாகத் தான்  இருக்கும்!

Link to comment
Share on other sites

On 11/14/2019 at 9:52 AM, Jude said:

ஐ. நா.வுக்கு சொந்த பணத்திலா போகிறார்? அவருக்கு கொடுப்பதை எங்களுக்கும் தந்தால் நாங்களும் போய் தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, ஆண்டாண்டு ஐ.நா.வில் திருவிழா கொண்டாடலாம் இல்லையா?

தாய்மண்ணில் இருந்துகொண்டு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கம் கைக்கு கிடைக்கும் ஒவ்வொரு சதமும்  தமிழர்களின் உரிமைகளுக்காகவே செலவழிக்கப்படுகிறது. சிவாஜிலிங்கம் தனது சொந்தப்பணத்தையும்,  நேரத்தையும் பல்வேறு போராட்டங்களுக்கு பயன்படுத்துவதுடன் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பல்வேறு அச்சறுத்தல்களுக்கு மத்தியிலுந்தான் செயற்பட்டு வருகிறார்.

சிவாஜிலிங்கம் தமிழினப் படுகொலைகாரர்களுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் முண்டு கொடுப்பவர் இல்லை என்பது கடந்த 10 வருடங்களில் நேரடியாக கண்ட வரலாறு. இன்றும் சிற்றூந்துகளிலும், உந்துருளிகளிலும், பேருந்துகளிலும் பயணித்தே சிவாஜிலிங்கம் மக்கள் சேவையில் உள்ளார்.

புலம் பெயர்ந்தும் பகிரங்கமாக சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கமுடியாத, தமிழினத்தின் விடுதலைக்கு பங்களிக்காத சிலர் கைகளில் காசு கிடைத்தால் ஐ.நா. போய் தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, ஆண்டாண்டு ஐ.நா.வில் திருவிழா கொண்டாடலாம் என்டு நீங்களே வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்.. அதன் மூலம் தமிழினத்துக்கு துளியும் பிரயோசனமில்லை.

அதால தான் இதுபோன்று தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, திருவிழா கொண்டாட நினைக்கிறவர்களுக்கு தமிழினத்தின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் பண உதவி செய்யப்போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.