Jump to content

நல்லூரில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டம்


Recommended Posts

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

01__2_.jpg

நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன்,

01__9_.jpg

தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

01__8_.jpg

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  

https://www.virakesari.lk/article/68906

 

Link to comment
Share on other sites

'அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’
 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அதனை நிறைவேற்றுவார் என, எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த இரா.சம்பந்தன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோதும் அதற்கு முன்னரும் யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் அதியுட்ச அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. அதிகார பகிர்வு விடயங்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முன்னெடுக்கப்படமாட்டாது.

“அரசியல் தீர்வு தொடர்பில் அவரது விஞ்ஞாபனத்தில் எதையம் கூறவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வளவு விடங்கள் இடம்பெற்றுள்ளன. அப்படி இருந்தும் கோட்டாவின் விஞ்ஞாபகத்தில் அரசியில் தீர்வு தொடர்பில் ஒரு வாரத்தை கூட இல்லை.

“நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு வேண்டும் என்றும், அதியுட்ச அதிகார பகிர்வுடனான ஒரு தீர்வு வழங்குவேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் கூறியுள்ளார். அவரது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படும். நிறைவேற்றப்படவேண்டும்.  ஒரு நியாயமான நிதானமான அரசியல் தீர்வு, ஒருமித்த நாட்டுக்குள், பிரிக்கப்படாத  நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப்பகிர்வின் மூலமான தீர்வு வேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அதகர-பகரவ-தடரபல-கடட-வய-தறககவலல/150-240996

Link to comment
Share on other sites

’தமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும்“

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதயத்தால் நாம் ஒப்பந்தம் செய்தோம் என்பதை பலர் கேலி செய்கின்றனர். நாங்கள் எதையும் செய்யவில்லை என்கிறார்கள்.

“அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்துக்குள் விடுவித்துள்ளோம். ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை.

“இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும், ஒன்றுமையான வாக்களித்து சரித்திரத்தை உருவாக்குங்கள். அன்னத்துக்கு வாக்களித்து அந்த வெற்றியை உங்கள் பிரதிநிதிகளான எங்கள் கையில் கொடுங்கள். நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கின்றோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமழரகள-ஒனற-சரநத-வககளகக-வணடம/175-240995

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

 

 

01__8_.jpg

 

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இவருடன் எனக்கு உள்ள தனிப்பட்ட விரோதம் 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே............

இந்த கூரை இடிந்து விழுந்திருந்தால், தமிழினம் அரசியல் தலைமை இல்லாத அனாதைகளாக்கப்பட்டு  இருப்போம்.  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இதுதான் இவருடன் எனக்கு உள்ள தனிப்பட்ட விரோதம் 

நீங்கள் இப்பவும் இவவை நினைச்சு....நினைச்சு........😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இப்பவும் இவவை நினைச்சு....நினைச்சு........😎

மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........

Link to comment
Share on other sites

54 minutes ago, Maruthankerny said:

மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை ........

 மருது அடுத்த முறை இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்.  

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி. வி. கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும் என்ற நப்பாசையில் நாய்படாதபாடாக அலைகின்றனர்!

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

ஐ. நா.வுக்கு சொந்த பணத்திலா போகிறார்? அவருக்கு கொடுப்பதை எங்களுக்கும் தந்தால் நாங்களும் போய் தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, ஆண்டாண்டு ஐ.நா.வில் திருவிழா கொண்டாடலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும் என்ற நப்பாசையில் நாய்படாதபாடாக அலைகின்றனர்!

தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்!

கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.

வருடா வருடம் ஐ.நா. சபை வரை சொந்த முயற்சியில சென்று தமிழர்களின் உரிமைகளுக்காகவும், இனவழிப்புகளுக்குகளுக்கு நீதி நியாயம் கோரியும் போராடிவரும் சிவாஜிலிங்கத்துக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் அவரது துணிந்த போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும். 

எனவே விவேகமாக சிந்திக்கும் தமிழர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பர்!

நல்ல கருத்துக்கள்!

திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதங்களுக்கு துணை போகின்றவர்களுக்கு இதுபோன்ற கருத்துக்கள் கசப்பாகத் தான்  இருக்கும்!

Link to comment
Share on other sites

On 11/14/2019 at 9:52 AM, Jude said:

ஐ. நா.வுக்கு சொந்த பணத்திலா போகிறார்? அவருக்கு கொடுப்பதை எங்களுக்கும் தந்தால் நாங்களும் போய் தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, ஆண்டாண்டு ஐ.நா.வில் திருவிழா கொண்டாடலாம் இல்லையா?

தாய்மண்ணில் இருந்துகொண்டு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கம் கைக்கு கிடைக்கும் ஒவ்வொரு சதமும்  தமிழர்களின் உரிமைகளுக்காகவே செலவழிக்கப்படுகிறது. சிவாஜிலிங்கம் தனது சொந்தப்பணத்தையும்,  நேரத்தையும் பல்வேறு போராட்டங்களுக்கு பயன்படுத்துவதுடன் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் பல்வேறு அச்சறுத்தல்களுக்கு மத்தியிலுந்தான் செயற்பட்டு வருகிறார்.

சிவாஜிலிங்கம் தமிழினப் படுகொலைகாரர்களுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் முண்டு கொடுப்பவர் இல்லை என்பது கடந்த 10 வருடங்களில் நேரடியாக கண்ட வரலாறு. இன்றும் சிற்றூந்துகளிலும், உந்துருளிகளிலும், பேருந்துகளிலும் பயணித்தே சிவாஜிலிங்கம் மக்கள் சேவையில் உள்ளார்.

புலம் பெயர்ந்தும் பகிரங்கமாக சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கமுடியாத, தமிழினத்தின் விடுதலைக்கு பங்களிக்காத சிலர் கைகளில் காசு கிடைத்தால் ஐ.நா. போய் தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, ஆண்டாண்டு ஐ.நா.வில் திருவிழா கொண்டாடலாம் என்டு நீங்களே வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்.. அதன் மூலம் தமிழினத்துக்கு துளியும் பிரயோசனமில்லை.

அதால தான் இதுபோன்று தலையை காட்டி, படமெடுத்து, தின்று, குடித்து, திருவிழா கொண்டாட நினைக்கிறவர்களுக்கு தமிழினத்தின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகள் பண உதவி செய்யப்போவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.