Jump to content

குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது தவறான முன்னுதாரணம் : மங்கள


Recommended Posts

Published by R. Kalaichelvan on 2019-11-13 17:55:35

 

(நா.தனுஜா)

கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல. ஏனெனில் அவ்வாறு நிச்சயமாகத் தேர்தலில் தோல்வியடைவார்.

mangala_samaraweera.jpg

 ஆனால் எமது நாட்டின் குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய தவறான முன்னுதாரணத்தை நாம் வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ எவரேனும் வந்து தேர்தலில் போட்டியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு அறிக்கைகளின் பிரகாரம் கோத்தாபாய ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை விடவும் 8 சதவீதம் பின்னணியிலேயே இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் எப்படியும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைய மாட்டார். ஒருவேளை வெற்றி பெற்றால் கூட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் நேரும்.

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டு இலங்கையின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினாலும் கூட, அதற்காக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது நிரூபனமாகியிருக்கின்றது.

கோத்தாபயவின் அமெரிக்க கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாகியுள்ளது என்று நாமல் ராஜபக்ஷ அதனை வெளியிட்டார். 

ஆனால் உலகின் எந்தவொரு நாட்டிலும் கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாக மாற்றப்படும் போது அதன்மீது 'கன்செல்ட்' என்றே குறிப்பிடப்படும். ஆனால் நாமல் ராஜபக்ஷ காண்பித்த கடவுச்சீட்டில் 'கன்செல்' என்று எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து இது பொய்யான ஆவணம் என்பது தெளிவாகின்றது.

அதேபோன்று கோத்தாபயவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொண்டமை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஆனால் அவ்வாறான ஆவணங்கள் எவையும் கையளிக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே இது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல. 

ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷ என்ன செய்தாலும் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என  அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/68908

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

 ஆனால் எமது நாட்டின் குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய தவறான முன்னுதாரணத்தை நாம் வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ எவரேனும் வந்து தேர்தலில் போட்டியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

உங்கட இலங்கை அரசே உலகுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் தானே.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.