Jump to content

பிரதான இரண்டு வேட்பாளர்களுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் தரகர்களுமே இருக்கின்றனர் :தேசிய மக்கள் கட்சி


Recommended Posts

Published by R. Kalaichelvan on 2019-11-13 19:24:49

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிரதான இரண்டு வேட்பாளர்களுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் தரகர்களுமே இருக்கின்றனர். யார் வெற்றிபெற்றாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதனால் நாட்டை முன்னேற்றி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் மஹேஷ் சேனாநாயக்கவுடன் கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தேசிய மக்கள் கட்சியின் செயலாளருமான சிறினாத் பெரேரா தெரிவித்தார்.

sajith-premadasa-gotabaya-rajapaksa.jpg

தேசிய மக்கள் கட்சியின்  தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரதான இரண்டு வேட்பாளர்களும் பாரியளவில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. 

அவற்றில் மிக குறைந்தளவான வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த நிலையே எதிர்காலத்திலும் ஏற்படும். 

அதனால் மக்கள் வாக்குறுதி அரசியலுக்கு ஏமாந்துவிடக்கூடாது.

அத்துடன் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் சாதாரண நடுத்தர குடும்பப்பின்னணியில் இருந்து வந்தவர்களாகும்.

ஆனால் அவர்கள் இருவரும் இந்த தேர்லில் பல பில்லியன் ரூபாய்களை இதுவரை செலவழித்திருக்கின்றனர்.

இந்தளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களின் பரம்பரையில் வசதிபடைத்தவர்கள் என்று தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. அப்படியாயின் இவர்களுக்கு பின்னால் உள்நாட்டு வெளிநாட்டு தரகர்கள் இருக்கின்றனர்.

இந்த தரகர்கள் இவர்களுக்கு  செலவழிக்கப்போவதில்லை. வெற்றிபெற்றால் அவர்களின் வியாபாரங்களுக்கு இவர்கள் உதவவேண்டும். அவர்களின் நிபந்தனைக்கமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். 

அந்த அரசியலே கடந்த காலங்களில் இருந்து இடம்பெற்று வருகின்றது.

அதனால் இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கே நாங்கள் ஜென்ரல் மஹேஷ் சேனாநாயக்கவை களமிறக்கி இருக்கின்றோம்.

 இராணுவத்துக்கு தலைமை வகித்ததுபோல் நாட்டுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருகின்றன.

மஹேஷ் சேனாநாயக்கவுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் இல்லை. தரகர்களும் இல்லை.

அதனால்  மக்கள் தொடர்ந்தும் வாக்குறுதி அரசியலுக்கு ஏமாந்துவிடாமல் சிந்தித்து செயற்படுவதற்கான காலம்  வந்திருக்கின்றது.

நாட்டை பொருளாதாரம் மற்றும் ஏனைய அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையச்செய்ய பொருத்தமான தலைவராக மஹேஷ் சேனாநாயக்க திகழ்கின்றார். மக்கள் அவருடன் கைகோர்த்துக்கொள்ள முன்வரவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/68914

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.