Jump to content

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் அளவுக்கு தன் மகள் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.மதரீதியான பாரபட்சத்தை ஒரு பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் ஒவ்வொரு தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றாலும், தான் மோசமாக நடத்தப்படுவதாக முன்னர் சொல்லியிருக்கிறார் என்றார். தன்னை தரக்குறைவாக நடத்திய பேராசிரியர் ஒருவரின் பெயரை அலைபேசியில் பாத்திமா எழுதிவைத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளதாக தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.

மானுடவியல் துறை தலைவர் உமாகாந்த்தாஸ் இடம் பாத்திமா குறித்துக் கேட்டபோது தனது துறையில் உள்ள பலரும் பாத்திமாவின் தற்கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை எனத் தெரிவித்தார்.

ஐஐடி

''பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர். வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை. மனஉளச்சல் ஏற்படும் அளவுக்கு ஏதாவது பிரச்சனை நடந்திருந்தால், முதலில் எங்கள் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். அதற்கான வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்களிடம் ஏன் எதையும் சொல்லவில்லை என அதிர்ச்சியாக உள்ளது,'' என்றார் உமாகாந்த்தாஸ்.

கோட்டூர்புரம் துணை ஆணையர் சுதர்ஷனிடம் பாத்திமாவின் தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து கேட்டபோது, ''தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என பதிவு செய்துள்ளோம். உடற்கூறு பரிசோதனை செய்து பெற்றோரிடம் மாணவியின் உடலை ஒப்படைத்துள்ளோம். பாத்திமாவின் உடன் பயிலும் சகமாணவர்கள் மட்டுமின்றி அந்த துறையில் உள்ள பேராசிரியர்களும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். மாணவியின் அலைபேசி எங்களிடம் உள்ளது. அவரது இறப்புக்கு முன்னர் பேசிய விவரங்கள், தகவல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்,''என்றார்.

பாத்திமாவின் தந்தை தனது மகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது பற்றிக் கேட்டபோது, ''விசாரணையை முழுவதுமாக முடித்தால்தான் எங்களால் பதில் சொல்லமுடியும். பேராசிரியர்கள் பலர் பல அலுவல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் நேரத்தை பொறுத்து அவர்களிடம் விசாரணை நடைபெறும்,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் #justiceforfathimalatheef என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.

பலர் அவர் அலைப்பேசியிலிருந்தாக ஒரு செய்தியையும் பகிர்கின்றனர்.

அதில் அவர் தனது பெயர்தான் பிரச்சனைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-50408178

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம்

ஃபாதிமாபடத்தின் காப்புரிமைTWITTER

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, சந்தேக மரணமாக அவரது இறப்பை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .

கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு மாற்றி, விசாரணையை தொடங்கியுள்ளதாக ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐ-யில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார் விஸ்வநாதன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் கூடுதல் துணை ஆணையர் மேகாலினா இந்த வழக்கின் புலன்விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புலன் விசாரணை நடைபெற்று வருவதால் வழக்கு தொடர்பான பிற விவரங்களை தற்போது தெரிவிக்கமுடியாது என்றார்.

மாணவி பாத்திமா லத்தீப் இறப்புக்கு நீதிவேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கம், தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஐஐடி வளாகத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

ஐஐடி

பாத்திமாவின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

பாத்திமா லத்தீப்பின் பெற்றோரிடம் பேசியதாக கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மாணவி பாரபட்சமாக நடத்தப்பட்டதாக பெற்றோரிடம் ஏற்கனவே கூறியுள்ளதாக தெரிவித்தார். ''பாத்திமாவுக்கு மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அவர் சிறப்பாக படிக்கும் மாணவியாக எல்லா பாடங்களிலும் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் திடிரென தற்கொலை செய்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவரது மரணத்திற்கு நீதிவேண்டும்,'' என அவர் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவர் உமாகாந்த் தாஸ் மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் பாத்திமா வகுப்பில் எல்லோரிடமும் நன்றாக பழகக்கூடியவராக இருந்தார் என்கிறார்.

மாணவியின் மரணத்தால் அவரது வகுப்பைச் சேர்ந்த சகமாணவர்களும் கவலையில் இருப்பதாக தெரிவித்தார் உமாகாந்த் தாஸ் வழக்கு மீதான விசாரணை நடந்து வருவதால், வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-50418548

Link to comment
Share on other sites

ஐஐடி சென்னையின் ஆசிரியர் ?

எதற்கும் விசாரணை முடியட்டும்.

Link to comment
Share on other sites

ஐஐடி மாணவி தற்கொலைக்கு முன் பதிவுசெய்த செல்போன் குறுந்தகவல்கள், டைரி, ஆடியோ போலீசில் ஒப்படைப்பு : பேராசிரியர்கள் வெளியூர் செல்ல தடை

ஐஐடியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் தகவல்களை பதிவு செய்து வைத்திருந்த செல்போன் ஆதாரம், டைரி, தற்கொலையை பார்த்து முதலில் கூறிய நபரின் ஆடியோவை அவரது தந்தை போலீசில் நேற்று ஒப்படைத்தார். மேலும் விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் வெளியூர் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கிளிகொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர், சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த வாரம் மாணவி திடீரென்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவி வைத்திருந்த செல்போனும் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற பிறகு, பாத்திமா லத்தீப்பின் செல்போனை பெற்றோர் சார்ச் போட்ட பிறகு பார்த்தனர். அப்போது, அதில், மாணவிக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2 பேராசிரியர்களும் தொல்லை கொடுத்துள்ளதையும் எழுதி வைத்திருந்தார். இதை பார்த்ததும், எனது மகள் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி, அவரது தந்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் செய்தார். அவர், தமிழக முதல்வர் எடப்பாடியிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிரமாக விசாரணை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஐஐடி வளாகத்துக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு கோட்டூர்புரம் போலீசில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் மெஹலானி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் காலையில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் 2 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி திரிபாதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, தனது மகள் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, ஆயிரம்விளக்கு பகுதியில் தங்கியுள்ள அப்துல் லத்தீப்பிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் மெஹலானி ஆகியோர் நேற்று காலையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி, செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த குறுந்தகவல்களையும், செல்போனையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். மேலும், தற்கொலைக்கு முதல்நாள், மாணவி உணவு அருந்தும் அறையில் அழுது கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி அணிந்த ஒரு மாணவி, அவரை தேற்றியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என்றும் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இந்த விசாரணை முடிந்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் 3 பேரும் வெளியூர் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது ஐஐடி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை முடியும் வரை சென்னையில் இருப்போம்

விசாரணைக்கு பிறகு அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர், டிஜிபி உள்பட இதுவரை நான் சந்தித்த அனைவருமே என்னுடைய கைகளை பற்றிக்கொண்டு உங்களுக்கான நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். என் மகள் நன்கு படிக்கக்கூடியவள். அவளுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்ட தகவல்களை கொடுத்துள்ளேன். கணினி உள்ளிட்ட பொருட்களை விசாரணைக்கு எடுத்து வர சொன்னார்கள், விசாரணை முடியும் வரை இங்கு தான் இருக்க உள்ளோம். தற்கொலை செய்து கொள்ளும் முன் 28 நாட்களுக்கான டைரி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்கொலையை முதலில் பார்த்த நபர் எங்களிடம்  பேசிய ஆடியோவையும் கொடுத்துள்ளோம் என்றார்.

இதை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை சந்தித்த பிறகு கூறுகையில், ‘‘போலீஸ் கமிஷனரை சந்தித்தோம், முக்கிய வழக்காக விசாரிப்பதாகவும், கேரள டிஜிபி அவரிடம் பேசியதாகவும் கூறினார். என்னுடைய சொந்த மகளுக்கு ஏற்பட்டால் எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அதேபோல் விசாரணை செய்து குற்றவாளிகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541437

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் செல்போனில் இருந்த தகவல் உண்மை - தடயவியல் ஆய்வறிக்கை

ஃபாத்திமாபடத்தின் காப்புரிமைTWITTER

சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா லத்தீஃபின் மொபைல் போனில் செய்யப்பட்ட தடயவியல் ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பிறகு அந்த மாணவியின் செல்போனில், தன்னுடைய தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து எழுதப்பட்டது போன்ற குறிப்புகள் ஊடகங்களில் வெளியாகின.

ஃபாத்திமாவின் செல்போனில் இரண்டு குறிப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஐஐடி பேராசிரியர்கள் சிலரும் காரணம் எனச் சுட்டிக்காட்டும் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் ஊடகங்களுக்குக் கிடைத்தன.

ஃபாத்திமா லத்தீஃப் இறந்த பிறகு அந்த வழக்கை விசாரித்துவந்த கோட்டூர்புரம் காவல் நிலையத்தில்தான் இந்த செல்போன் இருந்தது. செல்போன் கைப்பற்றப்பட்டபோது, அந்த போன் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. ஃபாத்திமாவின் உடலைப் பெறுவதற்காக வந்த உறவினர்களிடம் இருந்து சார்ஜர் பெறப்பட்டு, அந்த ஃபோன் சார்ஜ் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காவல் நிலையத்திலிருந்து அந்த செல்போனை உறவினர்கள் எடுத்துச் சென்றுவிட்டனார். ஃபாத்திமா மரண வழக்கில் இந்த செல்போன் முக்கிய ஆதாரம் என்பதால், அந்த செல்போனை திருப்பி அளிக்கும்படி காவல்துறை பெற்றோரிடம் கூறியது.

இதற்கிடையில், அந்த செல்போனில் இருந்த குறிப்புகளை குடும்பத்தினர் வெளியிட்டனர். செல்போன் குடும்பத்தினரிடம் சென்ற பிறகுதான் இதுபோல வெளியானது என்பதால், இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டா அல்லது உண்மையான தகவலா என ஆராய வேண்டியிருந்தது.

ஐஐடி

கடந்த வாரம் சென்னை வந்த ஃபாத்திமாவின் பெற்றோர் அந்த போனை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அந்த ஃபோன் சென்னை மையலாப்பூரில் இருந்த தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

அந்த ஆய்வறிக்கை தற்போது நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்பான வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2006ஆம் ஆண்டில் இருந்து சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மரணங்கள் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

கேரளாவின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரான சலீம் மடவூர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதுதான் ஃபாத்திமாவின் செல்போன் ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.

ஃபாத்திமாவின் வழக்கை தற்போது சென்னை குற்றப் பிரிவு (சிசிபி) விசாரித்துவருகிறது. இந்நிலையில், "இந்த வழக்கை ஏன் மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடக்கூடாது?" என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பின் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-50642720

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.