Jump to content

நிகாப், புர்கா அணியலாம்; ஆளடையாளத்தை நிரூபிக்க வேண்டும்


Recommended Posts

a4.jpg?itok=5G65tEtH

ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார்.  

அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.  

அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட, வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுபெற்ற அடையாள அட்டை, முதியோர்ர் (சிரேஷ்ட பிரஜை) அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் வாக்களிக்க முடியும்.  ஆனால், முகத்தை மூடிக்கொண்டுவருவோர், தாம் அணிந்திருக்கும் நிகாப், புர்கா போன்ற முகத்தை மூடியுள்ள அங்கியை அகற்றி அதிகாரியால் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவவேண்டும்.  பதுகாப்புக் கடமைகளிலிருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தமது அடையாளத்தை விரைவாக உத்தரவாதப்படுத்துவதன் மூலம் வாக்களிப்பை விரைவாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.    

 

http://www.thinakaran.lk/2019/11/13/உள்நாடு/43809/நிகாப்-புர்கா-அணியலாம்-ஆளடையாளத்தை-நிரூபிக்க-வேண்டும்

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார்.  

அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.  

முஸ்லிம்களின் மதவெறியை சிங்கள அரச இயந்திரம் எக்காலத்திலும் அனுமதிக்காது!
ஹக்கீம்கள், பதியுதீன்கள் வாய் திறக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

அந்த நாட்களில் முஸ்லீம் பெண்கள் சாரி உடுத்தி முக்காடு போடுவார்கள். இப்போ இவர்கள் ஏதோ அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள்போல எல்லாம் மூடி உடுத்துகிறார்கள். தீவிரவாதிகள் பணத்தை அனுப்பி இங்குள்ளவர்களையும் பயங்கரவாதிகளாக மாத்துகிறார்கள். அந்த பணத்தில்தான் மதரஸாக்கள் ஷரியா பல்கலைக்கழகம் முஸ்லீம் குடியேற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. வன்னியில் றிஷாத்தும் கிழக்கில் ஹிபுள்ளவும் இதை தலைமை தங்கி நடத்துகிறார்கள். இலங்கை அரசாங்கம் இதட்கு ஒரு முடிவு கடட வேண்டும். 

Link to comment
Share on other sites

சகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நேரகாலத்துடன் வாக்களித்துவிட்டு  தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் தேர்தல் சட்ட திட்டங்களை மதிக்கும் வகையில் முகத்திரை அணியும்  பெண்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது முகத்திரையை நீக்கி  ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும்வகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபை சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.

இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதித்தலைவர் அஷ்ஷேக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச்சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

JAMIYYATHULULAMA.jpg

அத்துடன்  வாக்களிக்கும்போது தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும் வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகத்திரையை நீக்கி  ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

பொதுவாக பெண்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்தளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக்கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். இதுதொடர்பாக  உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள் ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள்  மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.