Jump to content

செயின்ட் மார்க் பேராலயத்தை சூழ்ந்த வெள்ள நீர்


ampanai

Recommended Posts

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.


வெனிஸ் நகரில் அண்மையில் பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அதிகபட்சமாக, 187 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதற்கு முன்பு 1966ம் ஆண்டு 194 சென்டிமீட்டர் அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தநிலையில், செயின்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பேராலயத்தில், ஒரு மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால், அங்குள்ள பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மழை-வெள்ளம் காரணமாக, வெனிஸ் நகரம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/88648/செயின்ட்-மார்க்-பேராலயத்தைசூழ்ந்த-வெள்ள-நீர்

 

main_1200.jpg?1420513144

 

இத்தாலியில் மீண்டும் வரலாறு காணாத மழை பொழிவு

எழில் மிகுந்த இத்தாலியின் வெனிஸ் நகரை இரண்டாவது முறையாக அடை மழை தாக்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் லாகூன் நகரில் கனமழை பெய்து வருகிறது.

நேற்றிரவு வரை 187 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளன.

மேலும் கனமழை பொழிவால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பேரழிவு கால அவசர நிலையை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நகர மேயர் Luigi Brugnaro, அரசிடம் இருந்து நிதி உதவி கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/88574/இத்தாலியில்-மீண்டும்வரலாறு-காணாத-மழை-பொழிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்

இத்­தா­லியின் வெனிஸ் நகரை கடந்த 50 வருட காலத்தில் இல்­லா­த­வாறு மிகவும் உய­ர­மான  கடல் அலை நேற்று முன்­தினம்  செவ்­வாய்க்­கி­ழமை இரவு தாக்­கி­யுள்­ளது.

8d1c65a6aee14c658058b2416d6baa2b_18.jpg

இதனால் அந்­ந­கரின் பல பகு­திகள் கடல் நீரில் மூழ்­கி­யதால் இயல்பு வாழ்க்கை பாதி க்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. இதன்­போது  நகரில் சில பிராந்­தி­யங்­களில் சுமார் 6 அடி (1.87 மீற்றர்) உய­ரத்­துக்கு கடல் அலை பிர­வே­சித்­துள்­ளது.

54d18cfa028340998158a2e3c924d0a6_18.jpg

இந்த வெள்ள அனர்த்­தத்­திற்கு கால­நிலை மாற்­றமே காரணம் எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. மேற்­படி வெள்ள அனர்த்­தத்­தை­ய­டுத்து வெனிஸ் நகர மேயர் லுயிகி புறுக்­னரோ அவ­ச­ர­கால நிலை­மை­யொன்றைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். 78 வயது நப­ரொ ­ருவர் தனது வீட்­டுக்குள் பிர­வே­சித்த கடல் நீரால் மின்­சா­ரத்தால் தாக்­குண்டு உயி­ரி­ழந்­துள்ளார். 1966 ஆம் ஆண்டில் தாக்­கிய  1.94 மீற்றர் உயர கடல் அலையே இதற்கு முன் னர் வெனிஸ் நகரை தாக்­கிய உய­ர­மான கடல் அலை­யா­க­வுள்­ளது.

 

https://www.virakesari.lk/article/68934

Link to comment
Share on other sites

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரை பார்வையிட்ட இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே

வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரை பார்வையிட்ட இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே, விரைந்து வெள்ளத் தடுப்பு திட்ட பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது வெனிஸ் நகரம். இதனை சுற்றிலும் கால்வாய்கள் உள்ளன. அண்மையில் வரலாறு காணாத வெள்ளம் வெனிஸ் நகரை சூழ்ந்தது. இதனால் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தன.

தற்போது வெனிஸ் நகரின் நீர் மட்டம் 1.87 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில், திடீர் வெள்ளம் பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவு என அந்நகர மேயர் லூய்கி புருக்னேரோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் நகரை பார்வையிட்ட இத்தாலி பிரதமர் கியூசெப் காண்டே வெள்ளத்தடுப்பு திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

https://www.polimernews.com/dnews/88780/வெள்ளத்தில்-மிதக்கும்வெனிஸ்-நகரை-பார்வையிட்டஇத்தாலி-பிரதமர்-கியூசெப்கான்டே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.