Jump to content

ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர் - எக்கனமிக்ஸ்டைம்ஸ்-இந்தியாடைம்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீபன்

 

இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது.

நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்-  18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல்  இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது.

ராஜபக்சாக்கள் பிரிவினைவாத தமிழ் கிளர்ச்சிக்காரர்களை ஈவிரக்கமற்ற விதத்தில் தோற்கடித்தமைக்காகவும்,மேற்குலகும் இந்தியாவும் அவர்களைபுறக்கணித்த வேளை இலங்கையை சீனாவை நோக்கி கொண்டு சென்றமைக்காகவும் நன்கு அறியப்படுகின்றவர்கள்,அவர்கள் மீண்டும் நாட்டின் மிகவும் ஆழமாக பிளவுபட்ட அரசியலில் முக்கியமானவர்களாக மாறியுள்ளதுடன் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

 

குடும்ப விவகாரம்

ஒரு சகோதரர் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படுகின்றார்,மற்றையவர்  பிரதமர் பதவியை குறிவைக்கின்றார், அதற்கான தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது.

மற்றைய இருசகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களாக காணப்படுகின்றனர்.அவர்களில் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக வருவது குறித்து விருப்பம் கொண்டுள்ளார்.

அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்த மூவர் அரசியலில் உள்ளனர்.

மகிந்த பிரதமரிற்காக வெளிப்படையான தெரிவு,சமல் சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

 

ராஜபக்ச பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டமை

gotaposters.jpg

மகிந்த ராஜபக்ச தனக்கு எதிராக மாறிய தனது அமைச்சரவை சகாவான மைத்திரிபால சிறிசேனவிடம் 2015 இல் தோல்வியடைந்தார்.அந்த தோல்வியின் பின்னர் அந்த குடும்பத்தின் அதிஸ்டங்கள் வீழ்ச்சிகாணத்தொடங்கின.

மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலுள்ளார்.அவர் கோத்தபாயவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்கின்றார், இராணுவசுபாவத்தை கொண்டுள்ள முரட்டுத்தனமான தனது சகோதரரிற்கு பதில் பிரச்சாரத்திற்கு ஒரு வித மென்மையை வழங்குகின்றார்.

 

ஜனாதிபதி பதவியை குறிவைத்தல்

rajapa_1.jpg

ஒரு தசாப்தகாலத்திற்கும் மேல் இலங்கை தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய ஏழு சகோதரர்களில் கோத்;தாபயவும் ஒருவர். 2015 ஜனாதிபதி தேர்தல் வரை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தார். கோத்தபாய ராஜபக்சபாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

சனிக்கிழமை தேர்தல்களில் அவரே வெற்றிபெறுவார் என்றஎதிர்பார்ப்பு அதிகளவிற்குகாணப்படுகின்றது.

தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகயிருந்தவேளை கோத்தாபய ராஜபக்ச விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.தமிழ் பிரிவினைவாதிகள் , விமர்சகர்கள் பத்திரிகையாளர்களை கொலை செய்தமை குறித்து அமெரிக்காவிலும் இலங்கையிலும்  வழக்குகளை எதிர்கொண்டார்.

 

அச்சத்தை  பயன்படுத்துதல்

gota_1.jpg

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் தலைதூக்கியுள்ள பாதுகாப்பு அச்சத்தினை  மையமாக கொண்டு  கோத்தாபயவின் பிரச்சாரம் அமைந்துள்ளது.

அவர் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய வலுவான மனிதராக தன்னை முன்னிறுத்தியுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் இரு தோல்விகளாக பாதுகாப்பும் ஸ்திரமின்மையும் காணப்படுவதால் , கோத்தாபய ராஜபக்சவின் இந்தநிலைப்பாட்டிற்கு சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில்  ஆதரவு காணப்படுகின்றது.

அதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது காணப்பட்ட அடக்குமுறையும் மனித உரிமை துஸ்பிரயோகங்களும்  கோத்தாபய ஜனாதிபதியானால் மீண்டும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/68907

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.