Jump to content

கோத்தாவை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்கவில்லை என்ற செய்தி தேர்தலின் பின்னரும் வரும்: அரி­ய­நேத்­திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான  கோத்­தாபய சிறு­பான்மை மக்­களின் அர­சியல் அதி­கார பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் பட்­டி­ருப்புத் தொகுதி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாக்­கி­யச்­செல்வம் அரி­ய­நேத்­திரன், வீரகேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார்

ariyanenthiran.jpg

அவ­ரு­ட­னான முழு நேர்­கா­ணலும் வரு­மாறு,

கேள்வி :- தமிழ்க் ­கட்­சி­களின் வெளிப்­ப­டை­யான ஆத­ரவைப் பெறும் வேட்­பாளர் தோற்­க­டிக்­கப்­ப­டுவார் என்ற சூழல் தெற்கில் கட்­ட­மைக்­கப்­பட்ட நிலையில், தமிழ் மக்­களின் செல்­வாக்­குள்ள ஒரு வர் தோல்­வியை தழு­வு­வ­தென்­பது யதார்த்­தம்­தானே, இது தொடர்­பாக தங்கள் கருத்து?

பதில்:- தமிழ் மக்­க­ளி­னதும் கூட்­ட­மைப்­பி­னதும் இலங்கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யி­னதும் ஆத­ரவு ஒரு ஜனா­தி­ப­தி வேட்பாளருக்கு வழங்­கும்­போது, எதிர்­த்த­ரப்பு இன­வாத பிர­சா­ரங்­களை சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­கொள்­வது, நாட்டை பிரிக்­கப்­போ­கி­றார்கள் என தவ­றான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­பது எல்லாம் உண்­மைதான். ஆனால் இது இப்­போது சிங்­கள மக்கள் மத்­தியில் எடு­ப­டாது, காரணம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் தென்­ப­கு­தி­களில் உள்ள சிங்­கள மக்கள் விரும்­பு­கின்­றனர். தமிழ்த் தலை­மைகள் தங்­களின் உரி­மை­களை மட்­டுமே கேட்­கி­றார்கள். நாட்டைப் பிரித்துத் தரு­மாறு கேட்­க­வில்லை என்ற உண்­மையைப் பலர் விளங்­கி­யி­ருக்­கின்­ற                                                                           னர்.

இருந்த போதும் வெளிப்­ப­டை­யாக ஒரு வேட்­பா­ளரை ஆத­ரிக்­கும்­போது இன­வாத பிர­சா­ரங்கள் தென்­ப­கு­தியில் தலை­தூக்கும் என்­பது யதார்த்­தம்­தானே. அதற்­காக எமது இனப்­பி­ரச்­சினை, அன்­றாட பிரச்­சினை, அபி­வி­ருத்தி, காணாமல் ஆக்கப்­ பட்­டோர்கள் விடயம், போரினால் பாதிக்­கப்­பட்ட தலைமை தாங்கும் பெண்கள் தொடர்­பான வாழ்­வா­தாரம், முன்னாள் போரா­ளிகள் தொடர்­பான வாழ்­வா­தாரம், வேலை வாய்ப்­புகள் என்­பன போன்ற விட­யங்­களை முன்­நி­றுத்­தி­ய­தா­க எந்த வேட்­பாளர் கூடிய அக்­கறை காட்­டு­வ­தற் காக பதில் தரு­கி­றாரோ அவரை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை எடுப்­பதில் தவ­றில்லை. அதற்­காக எல்லா விட­யங்­க­ளையும் குறிப்­பிட்ட வேட்­பாளர் தருவார் என்றும் இல்லை.

கேள்வி :- ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்த செயல்­முறை முன்­னெ­டுக்­க­ப்ப­டு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­குமா?

பதில்:- சஜித் வெற்றி பெறு­வது, வெற்றி பெறா மல் விடு­வது வேறு விடயம். ஆனால் சஜித் பிரே­ம­தாச முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அர­சியல் தீர்வுகாண சபை­க­ளுக்­கான அதிகாரப்­ ப­கிர்வு கடந்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரே­ம­தாச, சந்­தி­ரிகா, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் எமது தமிழ்த் தலை­மைகள் அவர்கள் ஊடாக முன்­வைத்து அவர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அல்­லது அவர்­களும் கலந்துகொண்டு எட்­டப்­படும் தறு­வாயில் இருந்த தீர்வு யோச­னைகள் அடிப்­ப­டையில் பேச்­சு­வார்­த்தைகள் இடம்பெறும் என்ற விடயம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதற்­காக தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடும் வாக்­கு­று­திகள் அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் இல்லை. இருந்­த­போதும் அது எழுத்து மூல­மான ஆவ­ண­மாக இருக்கும்போது எதிர்­கால பேச்­சு­வார்த்­தைகள் சில­வேளை சர்­வ­தேச மத்­தி­யஸ்தம் ஒன்­றுக்கு வாய்ப்பு ஏற்­பட்டால் இந்த தேர்தல் விஞ்­ஞா­பனம் அடிப்­படை ஆவ­ண­மாக அமைய வாய்ப்­புள்­ளது. யார் ஜனா­தி­ப­தி­யா­னாலும் அர­சி­ய­ல­மைப்பு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் அதற்­கான அழுத்­தங்கள் சர்­வ­தேசம் ஊடாக வெற்­றி­பெறும் ஜனா­தி­பதிக்கு வழங்­கப்­படும்.

கேள்வி :- ஜனா­தி­பதி மைத்­திரி பால­சி­றி­சே­ன வின் ஆட்­சிக்­கா­லத்தில் பெய­ர­ள­வி­லேயே அவர் ­ செயற்­பட்ட நிலையில், இடம்­பெ­ற­வுள்ள தேர்­த லில் ஒருவேளை சஜித் வெற்­றி­யீட்­டினால் தமிழ் ­மக்­க­ளுக்­கான சமூக பொரு­ளா­தார வேலை வாய்ப்பு அபி­வி­ருத்தி முன்னெடுக்கப்படுமா?

பதில்:- ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை சிங்­கள வேட்­பாளர் ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாவார். எந்த சிறு­பான்மை வேட்­பா­ளரும் ஜனா­தி­ப­தி­யாக இலங்­கையில் கனவில் கூட வர­மு­டி­யாது. அப்­படி வரு­வ­தானால் 50 சத­வீத வாக்­கு­களை பெற வேண்டும் என்ற விதி மாற்­றப்­பட வேண்டும். சஜித் வெற்­றி­யீட்­டினால் சமூக  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வீட்­டுத்­திட்டம் என்­பன முன்­னேறும்.

கேள்வி :- ஐக்­கிய தேசியக் கட்சி 2010, 2015 களில் நிறுத்­திய பொது­வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்த ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்­தி­யாக களம் இறங்­கி­யுள்­ள­தனால் தமிழ்க் ­கட்­சி­க­ளி­னதும் சஜித்­தி­னதும் நிலை சவால்­க­ளுக்கு உள்­ளாகும் தானே?

பதில் :- இலங்கை ஜனா­தி­பதி தேர்­தல்கள் எல்லாம் ஒரே கட்சி ஒரு­வேட்­பா­ளரை ஆத­ரித்த வர­லா­றுகள் இல்லை, ஜே.வி.பி.யை பொறுத்­த­மட்டில் கடந்­த­கால ஜனா­தி­பதி தேர்­தல்­களில் பொது­வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரித்­தாலும் இம்­முறை தனி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை இறக்­கி­யுள்­ளது. இதனால் பிர­தான ஏனைய இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஜே.வி.பி. ஆத­ர­வா­ளர்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் 5 வீதம் குறை­வான வாக்­கு­களை மட்­டுமே ஜே.வி.பி. பெறு­வ­தற்­காக சந்­தர்ப்பம் உள்­ளது. இதனால் தமிழ் கட்­சி­க­ளுக்கோ தமிழ் மக்­க­ளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, தமிழ் மக்­களின் வாக்­குகள் பிர­தான இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் கிடைக்­கலாம். ஆனால் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு, தமி­ழ­ரசு கட்சி ஆத­ரவு வழங்கும் வேட்­பா­ளரே வடக்கு, கிழக்கில் கூடிய வாக்­கு­களை பெற­மு­டியும்.

இதற்கு நல்ல உதா­ரணம் கடந்த கால அனு­பவம். வடக்கு, கிழக்கு மக்கள் மாவட்ட ரீதி­யாக கடந்த 2010, 2015, ஆம் ஆண்டு தேர்­தல்­களில் எவ்­வாறு வாக்­க­ளித்­தனர் என்ற புள்­ளி­வி­ப­ரத்தை பார்த்தால் தெளி­வாகப் புரியும். மிக முக்­கி­ய­மாக கடந்த 2010, 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தல்­களை நோக்­கும்­போது ­மே­ல­தி­க­மாக வாக்கு வித்­தி­யா­சத்தில் தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்த வேட்­பா­ள­ருக்கு கிடைத்­துள்­ளது என்ற உண்­மையை மறு­த­லிக்க முடி­யாது அல்­லவா? வடக்கு, கிழக்கு மக்­களின் வாக்­க­ளிப்பு ஏறக்­கு­றைய இரண்டு தேர்­தல்­க­ளிலும் ஒரே அள­வான முடி­வா­கவே அமைந்­தி­ருந்­தது.

இம்­முறைத் தேர்­தலில் தமிழ் தேசி­ய­ கூட்­ட­மைப்பு (இலங்கை தமி­ழ­ரசு கட்சி) “அன்னம்” சின்­னத்தில் போட்­டி­யிடும் சஜித் பிரே­ம­தா­சவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. கடந்த 2010, 2015, இரண்டு தேர்­தல்­களில் வடக்கு, கிழக்கு மக்கள் எப்­ப­டி­யாக தமிழ்­ தே­சிய கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தார்­களோ அதேநிலை தான் இம்­மு­றையும் வரலாம், வித்­தி­யா­சங்கள் பெரி­ய­ளவில் இருக்­காது என்­பதே எனது கருத்து.

கேள்வி :- கடந்த 2018 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் மஹிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன, நாடுபூரா­க­வு­முள்ள 340 சபை­களில் 234 சபை­களை கைப்­பற்றி விஸ்­வ­ரூப வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு, ஜனா­தி­பதி தேர்தல் சவா­லாக அமையும் என கரு­து­கின்­றீர்­ களா?

பதில் :- உள்­ளூ­ராட்சித் தேர்தல் கலப்பு தேர்தல் முறை அது பர­வ­லாக ஊர், உறவு, வட்­டாரம், இனம், சனம், சொந்தம் என்­ப­வற்றை பார்த்து கட்­சி­க­ளுக்கு அப்பால் தனி­நபர் நற்­பண்பு செல்­வாக்கின் அடிப்­ப­டையில் அந்த உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் இடம்­பெற்­றது.

அதன் முடி­வு­களை செல்­வாக்­கு­களை ஜனா­தி­பதி தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது. இது தென்­ப­கு­தியில் மட்­டு­மல்ல வடக்கு, கிழக்­கிலும் கடந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் நிலைமை முடி­வுகள் இப்­ப­டித்தான் அமைந்­தது, கலப்பு தேர்தல் முறை மாற்­றப்­பட்டு விகி­தா­சார தேர்­தல்­முறை உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கடைப்­பி­டித்­தி­ருந்தால் வடக்கு கிழக்கில் சகல தமிழ் உள்­ளூ­ராட்சி சபை ண­களும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பே கைப்­பற்­றி­யி­ருக்கும், இதுவே எல்லா இடங்­க­ளிலும் யதார்த்தம். அந்த தேர்­தலை இந்த தேர்­த­லுடன் ஒப்­பிட முடி­யாது.

கேள்வி :- சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களை சீற்­றத்­துக்­குள்­ளாக்­காமல் தமிழ்க்­கட்­சி­களின் "வர்ண சாய ஆத­ரவை" பெற்­றுக்­கொள்­ளத்­தக்க சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தை நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில் :- சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் அறிக்­கையில் சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக சில விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஏனைய வேட்­பா­ள­ரான கோத்­த­பாய சிறு­பான்மை மக்கள் தமிழ்­மக்­களின் அர­சியல் அதி­காரப் பகிர்வு விட­யங்கள் பற்றி எது­வுமே குறிப்­பி­ட­வில்லை. இதிலே பார்க்க வேண்­டிய விடயம் யாதெனில் இந்த இரண்டு வேட்­பா­ளர்­க­ளிலும் கூடிய கொடூ ரம் செய்­தவர் யார்? குறைந்த கொடூரம் செய்­த வர் யார்? கூடிய கொடூரம் செய்­தவர் இந்த தேர்­தலில் வெற்றி பெறாமல் இருக்க வேண்­டு­மானால் குறைந்த கொடூரம் செய்­த­வரை ஆத­ரிக்க வேண்டும்.

இந்த தேர்தல் “சூத்­தி­ரம்தான்” கடந்த 2010, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு கடைப்­பி­டித்த கொள்கை. அதைத்தான் இந்த தேர்­த­லிலும் கடைப்­பி­டிக்க வேண்­டுமே அன்றி வேறு உபா­யங்கள் இல்லை. கொடூர கொடுமை செய்­த­வரை வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்­க­வில்லை என்ற செய்தி இத் தேர்­தலின் பின்­னரும் வரும். இதுதான் கடந்த 2010, 2015 தேர்தல் முடி­வாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வாக்குச்சீட்டு மூலம் நிரூ­பித்­தனர் அதை இம்­மு­றையும் செய்­வார்கள் என்ற நம்­பிக்கை உண்டு. ஆத­ரிப்­ப­வர்கள் வெற்றி பெறு­வதும் இல்லை, வெற்றி பெற்­ற­வ­ரெல்லாம் நாம் ஆத­ரித்­த­வரும் இல்லை.

கேள்வி :- வவு­னி­யாவில் தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் முடி­வ­டைந்து, வாக­னத்தில் சென்ற இரா.சம்­பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்­தி­ரனின் வாக­னத்­தொ­ட­ரணி மீது, காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சேர்ந்த தாயொ­ருவர் செருப்பை கழற்றி எறிய முற்­பட்ட சம்­ப­வத்­தி­லி­ருந்து, தமி­ழ­ர­சுக்­கட்சி ஆதிக்கம் செலுத்­து­கின்ற கூட்­ட­மைப்­பினர் எதிர்­வரும் காலங்­களில் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என கரு­து­கின்­றீர்கள்?

பதில் :- வவு­னி­யாவில் காணாமல் ஆக்­கப்­பட்ட உறவைச் சேர்ந்த ஒரு தாயார் சம்­பந்தன், சுமந்­திரன் வாக­னத்­திற்கு செருப்பைக் காட்ட தூண்­டி­ய­வர்கள், அந்த தாயின் உண்­மை­யான கோரிக்கைக்கு செருப்பு காட்­டி­ய­தா­கத்தான் இதை பார்க்க வேண்டும். உண்­மையில் காணாமல் போனவர்கள் யார் வெள்ளை வானில் கடத்­தி­னார்­களோ, யார் அர­சினால் காணாமல் ஆக்­கப்­பட்­டார்­களோ, யார் அதற்கு கார­ண­கர்த்­தா­வாக இருந்­தாரோ அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு பன்னீர் தெளிப்­பதும், மாலை இடு­வதும் பொட்டு வைப்­பதும், கட்டி முத்தம் கொடுப்­பதும் இடம்­பெறும் நிலையில் ஒரு­வ­கையில் குற்­ற­வா­ளி­களை தமிழ் மக்­களே காப்­பாற்றும் செய­லாக உள்­ளது. சம்­பந்தன் அல்­லது சுமந்­திரன் ஜனா­தி­ப­தி­யாக அல்­லது பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு செருப்பு காட்­டு­வது பொம்மை எரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளலாம். இது ஒரு சாராரின் தூண்­டு­தலால் அந்த அப்­பா­விப்பெண் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார் அவ்­வ­ள­வுதான். உண்­மைகள் ஒருநாள் வெளி­வரும்.

கேள்வி:- நல்­லாட்­சியில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­குதல் சம்­பவம், புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பா­ள­ருக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ?

பதில் :- உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தேர்­தலில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என நான் கரு­த­மாட்டேன். இந்த தாக்­கு­த­லுக்கு அப்பால் பல இடங்­க­ளிலும் இஸ்­லா­மிய மக்கள், வர்த்­த­கர்கள் கூடிய பாது­காப்பு சோத­னைக்கு முகம் கொடுத்­தனர் இதனால் தமிழ் பிர­தே­சங்­க­ளிலும் இஸ்­லா­மிய வியா­பார வேலை­க­ளுக்கு தடை ஏற்­பட்­டது என்­ப­தெல்லாம் உண்மை, தற்­போது இஸ்­லா­மிய அர­சியல் தலை­வர்கள் இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கு­வ­தனால் யார் வெற்றி பெற்­றாலும் லாபமே அன்றி நஷ்டம் இல்லை. அதனால் தேர்­தலில் எந்த பாதிப்பும் ஏற்­ப­டாது.

கேள்வி :- தமிழ்க்­கட்­சிகள் எதிர்­பார்த்துக் கோரி க்கை விடுத்­தவை சஜித்தின் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தென ஒரு சிலரும் சிலர் புறம்­பா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். அவ்­வ­கையில் விஞ்­ஞா­­பனத்­தி­லுள்­ளவை நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில் :- ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றித்து முன்­வைத்த 13 அம்சக் கோரிக்­கை­களில் ஒரு சிலவற் றையாவது சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஏனைய வேட்பாளரான கோத்தபாய முழுமையாக நிராகரித்துவிட்டார். அந்தவகை யில் சஜித் எல்லாவற்றையும் ஏற்காத போதும் சிலவை ஏற்றுள்ளதை காணமுடிகிறது.

கேள்வி :- முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் உட்பட சிறிய சிறிய விவகாரங்க ளுக்கு, தீர்வு பெற்றுத் தராதவர்களுக்கு, வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா, வெற்றியீட்ட வழிகோலுவார்களா?

பதில் :- கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை, தமிழ் தேசிய கூட்ட மைப்பு ஏற்கனவே எடுத்த முயற்சிகள் நிலுவை யில் உள்ளன. அது தொடரப்படும். எப்படியும் கல் முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதன் செயற்பாடுகள் தொடரும்.

இருந்தபோதும் இந்த விவகாரம் ஒரு இனம் இரண்டு ஊர் அல்லது பல ஊர் பிரதேசம் சார்ந்த விடயமில்லை, இரு இனம் இரண்டு இனங் கள் வாழும் ஊர்கள் பிரதேசங்கள் என்பது உண்மை. அதனால் ஒரு இனம் வேண்டுகோளை முன்வைக்கும் போது இன்னோர் இனம் எதிர்க் கிறது. இரண்டு இனங்களும் சில விட்டுக்கொடு ப்புகள் புரிந்துணர்வுகள் அடிப்படையில் பேசி இணக்கப்பாட்டு அடிப்படையில் இதற்கான தீர்வை பெறவேண்டுமே அன்றி ஒரு இனம் சார்ந்த அரசியல் தலைவர்கள் மற்றைய இனம் சார்ந்த அரசியல் தலைவர்களும் முட்டி மோது வதாலோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேட்பா ளரை ஆதரிப்பதாலோ பரிகாரம் கிடையாது.

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றாலும், கோத் தபாய வெற்றி பெற்றாலும் கல்முனை தமிழ் பிர தேச செயலக விடயம் பேச்சுவார்தைகள் மூலமா கவே தீர்வை பெறலாம் என்பது கசப்பான உண்மை.


நேர்காணல் - பாக்கியராஜா மோகனதாஸ்

https://www.virakesari.lk/article/68887

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.