Jump to content

மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு!

(  வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்  போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச்  சந்தித்தாலும்  மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை.   இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில்  யாழ்.  ஈழநாடு பிரைவேட்  லிமிட்டட்  நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன்,  இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை  யாழ்ப்பாணத்தில்  வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி,  அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. )
"  கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம்  ஆகிய  இரு சகோதரர்களின்  உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில்  வெளிவரத்  தொடங்கி,  நாளும் பொழுதும்  உரம்பெற்று வளர்ந்து,  ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக  சிலிர்த்து  நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில்  தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம்  ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன்  பின்னிப் பிணைந்ததாகவே  நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும்  தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில்  தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில்  தொண்ணூறுகளின்  ஆரம்பத்தில்  தன்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டது." இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில்  வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா " ஈழநாடு என்றதோர் ஆலமரம்" என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும்  அறிவார்ந்த  தளத்திலும்  பதிவுசெய்துள்ளார்.

ஈழநாடு  ஸ்தாபகர்  கே.சி. தங்கராசா  கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தின்  தலைவராகவும் சிறந்த பணியாற்றி நாடாளுமன்றில் முன்னாள்  நிதியமைச்சர்  கலாநிதி என்.எம்.பெரேராவால்  பாராட்டப்பட்டவர். இவருடைய  கொழும்பு  இல்லமே ஈழநாடு பத்திரிகையின் தென்னிலங்கை  அலுவலகமாக  இயங்கியது.  இலங்கை  நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ,  1981  இல்  யாழ்ப்பாணம் பொது நூலகம் தங்கள் பதவிக்காலத்தில்  எரியூட்டப்பட்டதற்கு  வருத்தம்  தெரிவித்து மன்னிப்புக்கோரியிருந்தார். ஆனால், அக்காலத்தில் அதே அரசின் கூலிகளினால் ஈழநாடு என்ற ஆலமரமும் எரிக்கப்பட்டது என்பதை ஏனோ சொல்வதற்கு மறந்துவிட்டார். அதனை நினைவுபடுத்துவதற்கும் அங்கிருந்த தமிழ்த்தலைவர்கள்  ஏனோ  மறந்துவிட்டனர். ஈழத்தமிழர்களின் குரலாக ஒலித்த ஈழநாடு முதல் இதழ் 1958 இல் வெளியானதும் நேரே கொழும்புத்துறையிலிருந்த யோகர்சாமிகளிடம்தான் ஆசிபெறுவதற்கு சென்றார்களாம். அவர் அந்த இதழைப்பார்த்துவிட்டு, "ஏசுவார்கள் எரிப்பார்கள். துணிவுடன் தொடர்ந்து நடத்துங்கள் " என்றுதான் ஆசி கூறினாராம்.

அவரது தீர்க்கதரிசனம் பலித்தது. பாரதி இந்தியாவில் ஆசிரியராக இருந்த அனைத்துப்பத்திரிகைகளும் சுதந்திரவேட்கையையே வலியுறுத்தி வந்திருக்கின்றன. அவர் நடத்திய பத்திரிகைகளுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைவந்திருக்கிறது. அவரும் நண்பர்களும் புதுவைக்கு தலைமறைவாக தப்பியோடியிருக்கிறார்கள்.

வெள்ளிவிழாக்கண்ட  யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையும் சோதனைகள்  - தடைகள் பலவற்றையும்  கடந்துதான் பயணித்து ஓய்வுற்றது. ஈழகேசரி 1958 இல் நிறுத்தப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர் இராஜ அரியரத்தினம் ஈழநாடு வில் இணைந்தார். கே.பி. ஹரன் ஆசிரியரானார். 
அ.செ.முருகானந்தன், எஸ்.எம்.கோபாலரத்தினம், பெருமாள், சசிபாரதி, எஸ். எஸ். குகநாதன், காசிலிங்கம், சபாரத்தினம், மகாதேவா,  அனந்த பாலகிட்ணர், ஈ.கே. ராஜகோபால்,  கே.வி.ஜே. திருலோகமூர்த்தி,  ஐயா சச்சிதானந்தம், கே.கே. ஐயாத்துரை, எஸ்.திருச்செல்வம், ஏ.பி. சூரியகாந்தன், கா.யோகநாதன், எஸ். ஜெகதீசன், ஏ.என்.எஸ் திருச்செல்வம், பார்வதி நாதசிவம்,  கந்தசாமி , துரைசிங்கம் ,  மகாலிங்க சிவம் …. .இப்படிப்பலர்  பணியாற்றிய  பத்திரிகை ஈழநாடு.
இவர்களில் சிலர் மறைந்து நினைவுகளாகிவிட்டனர். சிலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சென்றவிடத்திலும்  விட்ட குறை தொட்ட  குறையாக பத்திரிகைகளை நடத்தினர். சிலர் ஈழநாடு பத்திரிகை வாழ்க்கை குறித்த நினைவுகளை நூல்களாக வெளியிட்டனர்.

சிலர் ஈழநாடு பத்திரிகையில் பெற்ற அனுபவத்திலிருந்து கொழும்பில் வெளியான --  வெளிவரும் பத்திரிகைகளில்  இணைந்தனர். சிலர் தாம் பெற்ற ஈழநாடு அனுபவத்திலிருந்து ஊடகத்துறையின் வேறு துறைகளான வானொலி, தொலைக்காட்சி சேவைகளுக்கும்  சென்றனர்.

நூலகர் செல்வராஜா குறிப்பிடுவதுபோன்று ஈழநாடு ஆலமரம்தான். இந்த விருட்சத்தின் நிழலில் வாழ்ந்தவர்கள் அன்றைய வாசகர்கள். அதில் கூடுகட்டி வாழ்ந்தவர்கள் மேற்சொன்ன பத்திரிகையாளர்கள். 1981 இல்  தீக்குளிக்கப்பட்ட  சீதையாக  ஈழநாடு  மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவரத்தொடங்கிய காலத்தில் இதன் ஆசிரியராக பணியாற்றிய ந. சபாரத்தினம் அவர்களின் ஆசிரியத்தலையங்கங்கள் எளிமையும் கருத்துச்செறிவும் மிக்கதாக விளங்கின. பத்திரிகையாளரான  பாரதியும்  எழுத்திலே  எளிமையை கையாண்டவர்.

" எளிய  பதங்களைக் கொண்டு  எளிய  நடையில்  காவியம் செய்து தருவோன்  தாய்மொழிக்குப் புதிய உயிர்  தருவோனாகின்றான். தமிழா  தெய்வத்தை  நம்பு,  பயப்படாதே.  உனக்கு  நல்ல  காலம் வருகின்றது.  உனது  ஜாதியிலே  உயர்ந்த  அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.   தெய்வங்கண்ட  கவிகள்,  அற்புதமான ஸங்கீத  வித்வான்கள்,  கைதேர்ந்த  சிற்பர்,  பல  நூல்  வல்லார், பல  தொழில்  வல்லார்,  பல  மணிகள்  தோன்றுகிறார்கள். அச்சமில்லாத   தர்மிஷ்டர்  பெருகுகின்றனர்.  உனது  ஜாதியிலே தேவர்கள்   மனிதர்களாக  அவதரிக்கிறார்கள்.  கண்ணை நன்றாகத்துடைத்துவிட்டு  நான்கு  பக்கங்களிலும்  பார்"  என எழுதியிருக்கிறார்.

யாழ்ப்பாணம் ஈழநாடு  அன்றைய  தமிழ்சமுதாயத்திற்கு பாரதியின் இக்கருத்துக்கு  இசைவாகவே செய்திகளை வழங்கியது. வாழ்ந்தது.  கொழும்பு பத்திரிகைகள் அங்கிருந்து முதல்நாள் இரவு தபால் ரயிலில் புறப்பட்டு  வடபுலத்திற்கு மறுநாள் காலையில் வந்து சேர்வதற்கு முன்னர், ஈழநாடு சுடச்சுட செய்திகளுடன் மக்களிடம் சென்றுவிடும்.

மக்களின்  நாடித்துடிப்பறிந்து  பத்திரிகை  வெளியிட்டவர்  பாரதியார். பத்திரிகையில்  உரைநடை  எவ்வாறு  அமையவேண்டும்  என்று  தமது அனுபவத்தில்  இவ்வாறு  சொல்லியிருக்கிறார்:" தமிழ்  வசன  நடை  இப்போதுதான்  பிறந்து,  பலவருஷமாகவில்லை. தொட்டிற்பழக்கம்  சுடுகாடு  மட்டும்.  ஆதலால்,  இப்போதே  நமது வசனம்   உலகத்தில்  எந்த  பாஷையைக்காட்டிலும்,  தெளிவாக இருக்கும்படி   முயற்சிகள்  செய்யவேண்டும்.  கூடியவரை  பேசுவது போலவே  எழுதுவதுதான்  உத்தமம்  என்பது  எனது  கட்சி.  எந்த விஷயம்   எழுதினாலும்  சரி,  ஒரு  கதை  அல்லது  தர்க்கம்,  ஒரு சாஸ்திரம்,   ஒரு  பத்திரிகை  விஷயம்,   எதை  எழுதினாலும்  வார்த்தை சொல்லுகிற   மாதிரியாகவே   அமைந்துவிட்டால்   நல்லது.

சொல்ல  வந்த  விஷயத்தை  மனதிலே  சரியாக கட்டிவைத்துக்கொள்ளவேண்டும்.   பிறகு  கோணல்,  திருகல் ஒன்றுமில்லாமல்  நடை  நேராகச்செல்ல  வேண்டும்.  உள்ளத்திலே நேர்மையும்  தைர்யமும்  இருந்தால்,  கை  பிறகு  தானாகவே  நேரான எழுத்து  எழுதும்.  தைர்யம்  இல்லாவிட்டால்  வசனம்  தள்ளாடும். சண்டிமாடு   போல  ஓரிடத்தில்  வந்து  படுத்துக்கொள்ளும்.  வசன நடை   கம்பர்  கவிதைக்குச்சொல்லியது  போலவே  தெளிவு,  ஒளி, தண்மை,  ஒழுக்கம்  இவை  நான்குமுடையதாக  இருக்கவேண்டும்." 

ஈழநாடு பத்திரிகை யாழ் மண்ணில் தோன்றியது முதல் அஸ்தமிக்கும் வரையில் பாரதியின் இச்சிந்தனையின் தாக்கத்துடன் வெளிவந்தமைக்கு  அங்கிருந்த  சமூக,  அரசியல், பொருளாதாரக்காரணிகளும்  முக்கியமானது.  இலங்கை  அரசியலில்  தமிழ்த்தலைவர்களினால் யாழ்ப்பாணத்தில்  1961 ஆம்  ஆண்டில் நடத்தப்பட்ட  சத்தியாக்கிரகப்போராட்டம்  வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்தது.  சமூகத்திற்காக  பேசுவதும்  சமூகத்தை  பேசவைப்பதுமே  ஒரு பத்திரிகையாளனதும்  படைப்பாளியினதும்  கடமை.  அக்கடமையை யாழ்ப்பாணம் ஈழநாடும் அதில் பணியாற்றியவர்களும் வெளியிலிருந்து அதில் எழுதிய எழுத்தாளர்களும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட சத்தியாக்கிரகம் தொடர்பான செய்திகளை மக்களிடத்தில் உடனுக்குடன் எடுத்துச்சென்றதனாலும் ஈழநாடு விற்பனை அதிகரித்ததாக அக்கால வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  அத்துடன்  ஈழநாடு விற்பனை அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான கொலைவழக்கும்  காரணம்  எனவும் சொல்லப்படுகிறது.

அதுதான்  கோகிலாம்பாள்  வழக்கு. 1963  இல்  இலங்கையில் தமிழர்கள்  மத்தியில்  பரபரப்பாக  பேசப்பட்ட  கிளிநொச்சி உருத்திரபுரம்  பிள்ளையார்  கோயில்  அய்யர்  கொலைவழக்கு.  அந்த அய்யரின்  மனைவி  குற்றஞ்சாட்டப்பட்ட  வழக்கு  விசாரணை  யாழ்ப்பாணம்  நகரமண்டபத்தில்  அமைந்திருந்த  அசைஸ்  நீதிமன்றத்தில்  சுமார்  மூன்று  மாதங்கள் நடைபெற்றபொழுது, ஈழநாடு பத்திரிகையில் பக்கம்  பக்கமாக செய்தி வெளியானது. தினமும்  20  ஆயிரம் பிரதிகளுக்கு  மேல்  விற்பனையாகியிருக்கிறது. என்னும்  தகவலை  குறிப்பிட்ட  வழக்குச்செய்திகளை  தொடர்ந்து ஈழநாடுவில்  எழுதிய  நிருபர் கா. யோகநாதன்  தமது கட்டுரை ஒன்றில்  பதிவுசெய்துள்ளார்.  ( பத்திரிகையாளன் - ஈழநாடு வெள்ளிவிழா சிறப்பிதழ் - 1984)

ஈழநாடு இலங்கைத்தமிழ்ப்பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தமைக்கு பாரதியின் அஞ்சாமை தாரக மந்திரமாக திகழ்ந்தது எனலாம். ஈழநாடுவில் ஆசிரியர் ந. சபாரத்தினம் எழுதிய ஆசிரியத்தலையங்கங்கள்  சிலவற்றின் தொகுப்பு நூல் ஊரடங்கு வாழ்வு 1985 இல் தமிழியல் பதிப்பகத்தினால் வெளியானது.   இதனை வெளியிட ஆக்கபூர்வமாக உழைத்தவர்கள் தற்பொழுது லண்டனில் வதியும் பத்மநாப அய்யர், மற்றும் 'அலை' அ. யேசுராசா ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இலங்கையில் இவ்வாறு   பத்திரிகை ஆசிரியத்தலையங்கங்கள் தனித்தனி நூல்களாக தொகுக்கப்பட்டு  பின்னாளில் வெளிவந்தமைக்கு  ந. சபாரத்தினம் அவர்களின் ஊரடங்கு வாழ்வு முன்னுதாரணமாகும். முன்னர் யாழ். ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிய எஸ். எஸ். குகநாதன், பிரான்ஸ்  சென்ற பின்னர், பாரிஸ் ஈழநாடு வார இதழை வெளியிட்டார். இலங்கையில் புதிய ஈழநாடு இணைய இதழையும் நடத்தியவர்.  டான் தொலைக்காட்சியை ஆரம்பித்தவர். 

காசிலிங்கம் -  ராஜகோபால்  ஆகியோர் இணைந்து லண்டனிலிருந்து தமிழன் இதழையும்  பின்னர், ராஜகோபால்  லண்டன் ஈழகேசரி , புதினம் ஆகியனவற்றையும்  வெளியிட்டார். எஸ்.திருச்செல்வம் கனடா சென்று தமிழர் தகவல் என்னும் இதழை வெளியிடுகிறார். இவ்வாறு யாழ். ஈழநாடுவில் முன்னர் பணியாற்றியவர்கள் பாரதியின் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடும் கனவை நனவாக்கி வருகின்றனர். இந்தப்பத்தியில், பாரதியின் அச்சமில்லாத தர்மிஷ்டர்கள் பெருகுகின்றனர் என்னும் ஒரு வரி தொடக்கத்தில் வருகிறது.

இலங்கையிலும்  ஒரு  தர்மிஷ்டர்  ஜே.ஆர். ஜயவர்தனாவின் உருவத்தில் வந்தார். அவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் ஈழநாடு எரிந்தது. சுமார் மூன்று தசாப்தங்கள்  கடந்து அவருடைய மருமகன் முறையானவர் நாடாளுமன்றத்தில் அதற்காக மன்னிப்புக்கோருகின்றார். 

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் ஓர் நாள் வெல்லும்." என்றார் பாரதியார். வடபுலத்தில்  எத்தனையோ எரியூட்டல்கள், எறிகணை வீச்சுக்கள், குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்தாலும், ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் இளம் தலைமுறையினரும்  அழிக்கப்பட்டாலும்  வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்போன்று,  மீண்டும் மீண்டும் தமிழ்ப்பத்திரிகைகள் வெளிவந்தவண்ணமே  இருக்கின்றன. கணினியின் தீவிர பாய்ச்சலையடுத்து,  இணைய இதழ்களும் பெருகிவிட்டன. 

 

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5492:2019-11-13-06-55-27&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழநாடு தமிழ் மக்களின் ஒரு ஆத்மார்த்தமான பத்திரிகையாக இருந்தது.......அப்படியே இனிமேலும் இருக்க வேண்டும்.....நன்றி கிருபன்......!    💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு!

மித்திரன் எப்ப சார் வரும்?

இங்கே அனேகமானவர்களுக்கு அந்த பத்திரிகையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

3 hours ago, suvy said:

ஈழநாடு தமிழ் மக்களின் ஒரு ஆத்மார்த்தமான பத்திரிகையாக இருந்தது.......அப்படியே இனிமேலும் இருக்க வேண்டும்.....நன்றி கிருபன்......!    💐

ஈழநாட்டுக்கு பதிலாகத் தானே ஈழமுரசு வந்தது?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

மித்திரன் எப்ப சார் வரும்?

 

மித்திரன் இப்பவும், 40 வருடங்களை கடந்தும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றது. வீரகேசரி குடும்பத்தை சார்ந்தது மித்திரன் (Express newspaper Ceylon Ltd)

அதன் இணைய முகவரி:
http://mithiran.lk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ஈழநாடு தமிழ் மக்களின் ஒரு ஆத்மார்த்தமான பத்திரிகையாக இருந்தது.......அப்படியே இனிமேலும் இருக்க வேண்டும்.....நன்றி கிருபன்......!    💐

அதே ஈழ நாடு வெளியாக வாய்ப்பில்லை 

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

மித்திரன் எப்ப சார் வரும்?

இங்கே அனேகமானவர்களுக்கு அந்த பத்திரிகையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஈழநாட்டுக்கு பதிலாகத் தானே ஈழமுரசு வந்தது?

மித்திரன் வெளிவருகிறது ஆனால் படிக்க ஆட்களில்லை எல்லோரும் போணில் தட்டுவதால் பேப்பர் கூட கசங்குதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மித்திரன் இப்பவும், 40 வருடங்களை கடந்தும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றது. வீரகேசரி குடும்பத்தை சார்ந்தது மித்திரன் (Express newspaper Ceylon Ltd)

அதன் இணைய முகவரி:
http://mithiran.lk/

 

20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதே ஈழ நாடு வெளியாக வாய்ப்பில்லை 

 

மித்திரன் வெளிவருகிறது ஆனால் படிக்க ஆட்களில்லை எல்லோரும் போணில் தட்டுவதால் பேப்பர் கூட கசங்குதில்லை 

ஓ தகவலுக்கு நன்றி ராஜா நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாளுக்கு சொல்லேல்லையோ.. அவர் தானே கடைசில பூட்டுப்போட்டவர்.

ஈழநாடு.. இல்லாமல் போவதற்கு காரணமானவர்களே.. இப்போ அதை மீண்டும் திறக்கிறார்களாம். ஆனால் தலைகள் மட்டும் மாற்றம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழநாட்டில் தானே யாழ்ப்பாணம் இருந்தது. அதென்ன “யாழ்பபாணத்தில் ஈழநாடு “ என்று ஒரு கணம் குழம்பிப் போனேன்

Link to comment
Share on other sites

8 hours ago, ஈழப்பிரியன் said:

மித்திரன் எப்ப சார் வரும்?

இங்கே அனேகமானவர்களுக்கு அந்த பத்திரிகையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஈழநாட்டுக்கு பதிலாகத் தானே ஈழமுரசு வந்தது?

அதில் வரும் நக்கல் படங்களின் விசிறியாக இருந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சிந்தாமணி - எவருக்கேனும் நினைவுளதா?

ஞாயிற்றுக்கிழமை வாறது என்ன.....தினபதிகாரர்ரை வாரமஞ்சரி எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

மித்திரன் எப்ப சார் வரும்?

இங்கே அனேகமானவர்களுக்கு அந்த பத்திரிகையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

8 minutes ago, விவசாயி விக் said:

அதில் வரும் நக்கல் படங்களின் விசிறியாக இருந்தேன். 

விவசாயி தப்பாய் நினைக்காதையுங்கோ.....அவர் மித்திரனிலை வாற அந்த.....அதுதான்...பலானான நியூஸ் வாசிக்கிறதுக்கு மித்திரன் பேப்பரை தேடுறார் 😂
உதாரணத்துக்கு....
கனகசபையும்  ஈழத்து சிலுக்கும் கோவில் பின் வீதியில் உல்லாசம்.பொதுமக்கள் அமுக்கி பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.🤣🤣

 

Link to comment
Share on other sites

53 minutes ago, குமாரசாமி said:

விவசாயி தப்பாய் நினைக்காதையுங்கோ.....அவர் மித்திரனிலை வாற அந்த.....அதுதான்...பலானான நியூஸ் வாசிக்கிறதுக்கு மித்திரன் பேப்பரை தேடுறார் 😂
உதாரணத்துக்கு....
கனகசபையும்  ஈழத்து சிலுக்கும் கோவில் பின் வீதியில் உல்லாசம்.பொதுமக்கள் அமுக்கி பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.🤣🤣

 

நான் விசித்திரனை வைத்து குழம்பிட்டேன் போல!  என்ன செய்தியெல்லாம் தேடுகிறார்கள் 😚

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விவசாயி விக் said:

நான் விசித்திரனை வைத்து குழம்பிட்டேன் போல!  என்ன செய்தியெல்லாம் தேடுகிறார்கள் 😚

நீங்கள் சிரித்திரனை சொல்லுறியள் எண்டு நினைக்கிறன்.😂

sirithiran991.jpg

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சிரித்திரனை சொல்லுறியள் எண்டு நினைக்கிறன்.😂

sirithiran991.jpg

அஃதே அஃதே.  ஒரு கடியை இணைத்ததற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கனகசபையும்  ஈழத்து சிலுக்கும் கோவில் பின் வீதியில் உல்லாசம்.பொதுமக்கள் அமுக்கி பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.🤣🤣

அடுத்த நாள் பேப்பரில் கனகசபையையும் சிலுக்கையும் பொலிசுக்கு கொண்டு போகும் போது அமசடக்கி குமாரசாமி சிலுக்குவைக் கடத்திவிட்டார்.

4 hours ago, குமாரசாமி said:

விவசாயி தப்பாய் நினைக்காதையுங்கோ.....அவர் மித்திரனிலை வாற அந்த.....அதுதான்...பலானான நியூஸ் வாசிக்கிறதுக்கு மித்திரன் பேப்பரை தேடுறார் 😂

மித்திரன் விற்கிறதுக்கு பழைய வைரமாளிகை தான் வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அடுத்த நாள் பேப்பரில் கனகசபையையும் சிலுக்கையும் பொலிசுக்கு கொண்டு போகும் போது அமசடக்கி குமாரசாமி சிலுக்குவைக் கடத்திவிட்டார்.

மித்திரன் விற்கிறதுக்கு பழைய வைரமாளிகை தான் வர வேண்டும்.

ம்ம்ம்...! அது ஒரு கனாக் காலம்...!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/14/2019 at 12:22 AM, கிருபன் said:

அத்துடன்  ஈழநாடு விற்பனை அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான கொலைவழக்கும்  காரணம்  எனவும் சொல்லப்படுகிறது.

அதுதான்  கோகிலாம்பாள்  வழக்கு. 1963  இல்  இலங்கையில் தமிழர்கள்  மத்தியில்  பரபரப்பாக  பேசப்பட்ட  கிளிநொச்சி உருத்திரபுரம்  பிள்ளையார்  கோயில்  அய்யர்  கொலைவழக்கு.  அந்த அய்யரின்  மனைவி  குற்றஞ்சாட்டப்பட்ட  வழக்கு  விசாரணை  யாழ்ப்பாணம்  நகரமண்டபத்தில்  அமைந்திருந்த  அசைஸ்  நீதிமன்றத்தில்  சுமார்  மூன்று  மாதங்கள் நடைபெற்றபொழுது, ஈழநாடு பத்திரிகையில் பக்கம்  பக்கமாக செய்தி வெளியானது. 

யார் இந்த கோகிலம்பாள்? ஏன் இவர் குற்றம் சாட்டப்படார்? முடிவில் என்ன நடந்தது? இக்கலத்தில் இருந்த வாசகர்கள் யாரவது இருந்தால் இது என்ன கேஸ் என்று கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்? 

அக்காலத்தில் இப்பத்திரிக்கை ஒன்றின் விலையென்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஞாயிற்றுக்கிழமை வாறது என்ன.....தினபதிகாரர்ரை வாரமஞ்சரி எண்டு நினைக்கிறன்.

ஓமண்ண நான் அப்போ வாசிக்கும் வயதில்லை. ஆனால் இந்த பேப்பரின் சின்னமான திமில் காளை இப்போதும் மனதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குகநாதன் நிற்கிறார்

Lake house பத்திரிகையாக  எதிர்  பார்க்கலாம்😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த நாள் பேப்பரில் கனகசபையையும் சிலுக்கையும் பொலிசுக்கு கொண்டு போகும் போது அமசடக்கி குமாரசாமி சிலுக்குவைக் கடத்திவிட்டார்.

மித்திரன் விற்கிறதுக்கு பழைய வைரமாளிகை தான் வர வேண்டும்.

எங்கட காலத்தில வைரமாளிகை பஞ்சாங்கம் விக்கிற லைனுக்கு மாறீட்டார்.

”ரகுநாதையைய்யர் குதிரையில் வாறார்” எனும் குரல் இப்பவும் காதில் கேட்கிறது.

வைரமாளிகை போன்றோர் பற்றி ஒரு திரி துவங்கலாமே?

யாருக்கு முச்சந்தி முரளி நியாபகம் இருக்கு?

5 hours ago, colomban said:

 

https://teavadai.wordpress.com/2010/09/17/கிளிநொச்சி-உருத்திரபுர/ 

ஆனால் ஐயரின் சொந்த இடம் காரைநகர் என்பது பிழையான தகவல். நான் 1990 இல் நெடுந்தீவு போனபோது இந்த ஐயரின் வீட்டை ஒரு சுற்றுலா தலம் போல பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த நாள் பேப்பரில் கனகசபையையும் சிலுக்கையும் பொலிசுக்கு கொண்டு போகும் போது அமசடக்கி குமாரசாமி சிலுக்குவைக் கடத்திவிட்டார்.

மித்திரன் விற்கிறதுக்கு பழைய வைரமாளிகை தான் வர வேண்டும்.

குத்தியன் குமாரசாமி  சிலுக்குடன் மர்மமான முறையில் மாயமாகி விட்டான். நெல்லியடி பனங்கூடல் அருகே சிலுக்கின் தாவணியை  இன்ஸ்பெக்டர் நாதன் கைப்பற்றியுள்ளார். பொலிசார் இருவரையும் வலைவிரித்து தேடுகின்றனர். 😎

இப்பிடி ஒரு நியூஸ் வர உங்களைப்போலை ஆக்களுக்கு தேவாமிர்தம் மாதிரி இனிக்கும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஓமண்ண நான் அப்போ வாசிக்கும் வயதில்லை. ஆனால் இந்த பேப்பரின் சின்னமான திமில் காளை இப்போதும் மனதில்.

சிந்தாமணியே வாசிக்கிற வயசில்லை எண்டால்.....அப்ப தீப்பொறி பேப்பரை எட்டியும் பாத்திருக்க மாட்டியள்.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

சிந்தாமணி - எவருக்கேனும் நினைவுளதா?

வாழ்வில் மறக்க முடியாத பத்திரிகை! சிறு வயதிலேயே (4 அல்லது 5 வயது இருக்கும்) வாசிப்பு பழக்கத்தை ஒரு போதையாக ஆக்கிய பத்திரிகைகளில் முதன்மையன பத்திரிகை.

சிறுவர் கதைகள் எழுதிய மாஸ்ரர் சிவலிங்கத்தினை மறக்க முடியாது? மட்டக்களப்பு / கிழக்கை சார்ந்தவர் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிந்தாமணியே வாசிக்கிற வயசில்லை எண்டால்.....அப்ப தீப்பொறி பேப்பரை எட்டியும் பாத்திருக்க மாட்டியள்.

நமக்கு தெரிஞ்சதெல்லாம் கச்சான் பொரிதான்😂.

3 hours ago, நிழலி said:

வாழ்வில் மறக்க முடியாத பத்திரிகை! சிறு வயதிலேயே (4 அல்லது 5 வயது இருக்கும்) வாசிப்பு பழக்கத்தை ஒரு போதையாக ஆக்கிய பத்திரிகைகளில் முதன்மையன பத்திரிகை.

சிறுவர் கதைகள் எழுதிய மாஸ்ரர் சிவலிங்கத்தினை மறக்க முடியாது? மட்டக்களப்பு / கிழக்கை சார்ந்தவர் என நினைக்கின்றேன்.

ஓம் மட்டக்களப்புத்தான். வானொலிமாமா எனவும் அழைப்பர்.

பின்னாநாளில் புலம்பெயர் வெளியில் புலிகளை வலுவாக ஆதரித்து நின்ற சிவஞானம் இதன் ஆசிரியாராக இருந்தார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.