Jump to content

அமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்


Recommended Posts

அமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்

 

Share
 

கிரிபண்டா டி சில்வா சுமணசேகர

 

தமிழில் ரஜீபன்

 

 

 

 

இது அவசரமான கடிதம்- நான் வழமையான மரியாதைகளை தவிர்க்க விரும்புகின்றேன்

 

 

அவ்வப்போது இராஜதந்திரிகளிற்கு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விடயம் என்பது உங்களிற்கு தெரியும்- ஆனால் அதற்கு அப்பால் நான் உங்கள் கவனத்திற்கு சில விடயங்களை கொண்டுவரவேண்டியுள்ளது.

 

நாங்கள் இந்த நாட்டில் தேர்தல்களை நேசிப்பது உங்களிற்கு தெரியும். கிரிக்கெட்டிற்கு பின்னர் எங்களின் முக்கிய பொழுதுபோக்கு தேர்தல்.

ஆனால் கடந்த சில காலங்களாக எங்கள் கிரிக்கெட் வீரர்கள் எங்களை மகிழ்ச்சிப்படுத்த மறந்துள்ளனர்.மேலும் கிரிக்கெட் சூதாட்ட சக்கரவர்த்திகளின் கரங்களில் விழுந்துள்ளது என்ற வதந்தியும் வெளியாகியுள்ளது. இவர்கள் எங்கள் நாட்டின் மிகவும் வருமானம் தரும்  தொழில்துறையான அரசியலிலும்  ஈடுபட்டுள்ளனர்.

கிரிக்கெட் குறித்து நாங்கள் காத்திருக்கலாம்.ஆனால் உங்களுடன் நான் ஆராய விரும்பும் விடயம் பிரஜாவுரிமை தொடர்பானது.

நான் அரசசார்பற்ற அமைப்பொன்றில் பிரஜாவுரிமை திட்டத்தில் பணியாற்றும் பெரும் ஊதியம் பெருபவன் இல்லை.

இந்த பிரஜாவுரிமை விவகாரம் ஜிஆர் தி கிரேட் தொடர்பானது.நாங்கள் அவர் நூறுவீதம் தேசப்பற்றுள்ளவர் என்பதை உறுதி செய்ய விரும்புகின்றோம்.அவர் எங்கள் தேசத்தை பாதுகாக்கப்போகின்றார்,அவர் ஐந்து வருடங்களிற்கு முன்னர் எங்கள் நாட்டை பாதுகாத்தார் தற்போது மீண்டும் பாதுகாக்க விரும்புகின்றார்.

கடந்த தடவை அவர் இரட்டை பிரஜையாகயிருந்தவேளை நாட்டை பாதுகாத்தார்,அந்தவேளை அவரது கைகள் உங்கள் மனிதாபிமான சட்டங்களால் பிணைக்கப்பட்டிருந்தன,ஏனென்றால் அவர் உலகின் பெரும் நாட்டின்  பிரஜையாக காணப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள உங்கள் சட்டங்கள் காரணமாக-எங்கள் நபரால்( உங்கள் நபர் அல்லது எங்கள் நபர்)அவரிற்கு பிடித்தமான வெள்ளை வானை முழுமையாக செலுத்த முடியவில்லை.

தான் பத்திரிகையாளர்கள் மற்றும் மாற்றுக்கருத்துள்ளவர்களுடன் பல வெள்ளை வான் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட்டால்- நாட்டை காப்பாற்றி களைப்படைந்த பின்னர் உங்கள் நாட்டிற்கு திரும்பமுடியாது என அவர் அச்சம் கொண்டிருந்தார்.

 அமெரிக்க நலன்களிற்கு ஆதரவளிக்கும் வரை எந்த கொலையாளியையும் அமெரிக்கா சகித்துக்கொள்ளும் என்பதை அவர் கடந்த முறை அறிந்திருக்கவில்லை.

Gota.jpg

ஆனால் அனைத்து ராஜபக்சாக்களும் அழகான கலிபோர்னியாலில் புகலிடம் பெற முடிந்ததை தொடர்ந்து அவர் அதனை உணர்ந்தார்.

உலகின் பல சர்வாதிகாரிகள், கொலைகாரர்கள்,சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தாங்கள் சோசலிஸ்ட்களாக இருக்காதவரை அமெரிக்காவில் தஞ்சம் பெறமுடியும் என்பதை உலகம் அறிந்திருக்கின்றது.

ஆகவே வெள்ளை வான்கள் மீது காதல் கொண்ட எமது நபர் -வான்கள் கோர்ப்பரேட் முதலாளித்துவத்தின் வழியில் செல்லாதவரை தன்னால் வெள்ளை வான்களை செலுத்த முடியும் என்பதை இறுதியாக உணர்ந்துகொண்டார்.

2015 இல் நாங்கள் நல்லாட்சியை ஏற்படுத்திய சில மாதங்களின் பின்னர் எங்கள் நல்ல மனிதர்களால் இலங்கைக்கு பாதுகாப்பாக வரமுடிந்தது. நல்லாட்சியின் கனவான்கள் மத்திய வங்கியை கொள்ளையடித்தது தெரியவந்ததால் அவர்கள் தங்கள் தார்மீகதன்மையை இழந்ததால் அவர்கள் பல டீல்களில் ஈடுபட்டனர்.

 

எங்கள் கதாநாயகன் ஜனாதிபதியாவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ளன.நாங்கள் அனைவரும் எங்கள் வெள்ளைவான்களை நன்கு  தயார்படுத்தி சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்வதற்காக காத்திருக்கின்றோம்.

ஆனால் எங்கள் கதாநாயகனின் இதயம் இரண்டு இடத்திலிருந்தால்( ஒன்று இலங்கையிலும் மற்றையது அமெரிக்காவிலும்) எப்படி எங்கள் எதிர்காலம் மிகச்சிறந்ததாக மாறும்.ஏனென்றால் அமெரிக்கா எங்கள் பரம எதிரி.

நாங்கள் உங்கள் நாட்டை வெறுக்கின்றோம் அதன் காரணமாகவே நாங்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் கிறீன்கார்ட் விண்ணப்பங்களை அனுப்புகின்றோம். உங்கள் நாட்டிற்கு வந்து உங்களிற்கு சிறந்த பாடத்தை கற்பிப்பதற்காகவே கிறீன்கார்ட்டிகளிற்கு விண்ணப்பிக்கின்றோம்.

ஆகவே நாங்கள் எங்கள் பாதுகாவலர் உண்மையில் அமெரிக்க பிரஜையா  என்பதை அறிய விரும்புகின்றோம். உங்களால் அவர் இந்த தம்ம தேசத்தின் உண்மையான தேசப்பற்றாளர் என்பதை தெரிவிக்கும் கடிதமொன்றை தயவு செய்து அனுப்ப முடியுமா? அது போலியானதாகயிருந்தாலும் பரவாயில்லை.

gotabaya.jpg

ஆனால் அவர் தேர்தலில் வெற்றிபெறும்வரை அது  போலியானது என தயவு செய்து சொல்லவேண்டாம்.

அவர் வெற்றிபெற்றால் அவரது சகோதரர் ஊடக அமைச்சராக நியமிக்கப்படுவார்,அவர் அனைத்து அரச ஊடகங்களிற்கும் பொறுப்பானவராக விளங்குவார்.அவர் தனது சகோதரரான ஜனாதிபதியை தேசப்பற்றாளனாக சித்தரிப்பார்- மாற்றுவார்.

அவரின் இன்னொரு சகோதாரர் நீதித்துறையை பார்த்துக்கொள்வார்- ஜனாதிபதியின் ஒவ்வொரு சிறிய குற்றத்தையும் நியாயபூர்வமானதாக மாற்றுவார்.

அவரின் இன்னொரு சகோதரர் நிதியமைச்சிற்கு பொறுப்பாக காணப்படுவார்- அவர் ஜனாதிபதியின் படத்தை ஒவ்வொரு ருபாய் நோட்டிலும் அச்சிடுவார் அதன் மூலம் தனது சகோதரனை உண்மையான தேசப்பற்றாளனாக மாற்றுவார்.

மேலும் ஜனாதிபதி தனது உறவினர்கள் அனைவரையும் ஒவ்வொரு நாட்டினதும் தூதுவர்களாகவும் நியமிப்பார்,அவர்கள் தங்கள் ஜனாதிபதி எவ்வளவு தேசப்பற்று மிக்கவர் என தெரிவிப்பார்கள்.

ஆனால் மேடம் இவர்கள் அனைவரும் சில நாட்களிற்கு காத்திருக்கவேண்டும்.தற்போதைக்கு நாங்கள் அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டாரா என்பதை அறியவேண்டும்.

ஜிஆர் தி கிரேட் ஒருபோதும் அமெரிக்க பிரஜையாகயிருக்கவில்லை , அமெரிக்கா அதனை வழங்கியபோதும் அவர் நிராகரித்துவிட்டார் என நீங்கள் தெரிவித்தால் போதும்.

ஆனால் அமெரிக்க இராஜதந்திரிகள் பொய் சொல்லமாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.

தயவு செய்து அவர் தற்போது இலங்கை பிரஜை எனவும் - இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு இன்னொரு இளம் ராஜபக்ச வரும் வரை -நாங்கள் இவரை இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யலாம் எனவும் பொய் சொல்லவேண்டாம்.

 

கிரிபண்டா சில்வா

https://www.virakesari.lk/article/68828?fbclid=IwAR0UsOcN62h68g17ty0cOQD96FHEhcyrfvKxk4-Ild-SXkvR4-CbNcs_xyI

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.