Jump to content

பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம்

பிரஜாவுரிமையை கைவிடும் சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்னரே ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டவர் என கருதப்படுவார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

குறி;ப்பிட்ட சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

பட்டியலில் அவரது பெயர் வெளியாவது வேறு விடயம் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நன்சி வன்கொம் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமைய துறந்தவர்கள் குறித்த பட்டியலில் ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பெயர் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது குறித்த கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சட்டங்களின் அடிப்படையில் தனிநபர் குறித்து கருத்துதெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ஒருவரின் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இணையத்தில் பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமையை கைவிடும் நடவடிக்கைகளை அமெரிக்க தூதரகமே கையாள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

us_embssy_no_12.jpg

அந்த நபரின் பெயர்  பட்டியலில் வெளியாவது  வேறு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஜாவுரிமையைகைவிடுவது தொடர்பான ஆவணங்கள் தூதரகத்திற்கு சமர்ப்பிக்கப்படும், பின்னர் அந்த ஆவணங்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பபடும் என தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் குறிப்பிட்ட நபரிற்கு குடியுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்  கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/68936

Link to comment
Share on other sites

அப்போ கோதாவுக்கு நீங்கள் சான்றிதழ் கொடுத்திருக்கீறிர்களா இல்லையா? அதை சொல்லுங்கள். அலி sabri ஏதோ ஒரு லெட்டர் வைத்துக்கொண்டு  மக்களை ஏமாத்துறான்.

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

அப்போ கோதாவுக்கு நீங்கள் சான்றிதழ் கொடுத்திருக்கீறிர்களா இல்லையா? அதை சொல்லுங்கள். அலி sabri ஏதோ ஒரு லெட்டர் வைத்துக்கொண்டு  மக்களை ஏமாத்துறான்.

அமெரிக்க தூதுவர்கள் சொல்லமாட்டாங்கள்! என்னெண்டால் அவர்கள் கோத்தபய்யாவுக்கு பயங்கர ஆதரவாம் 😂

Link to comment
Share on other sites

அமெரிக்கா காரன் ஒரு நாளும்  கோத்தாவின் குடியுரிமையை நீக்க  மாடடான்। அதே நேரம் நீக்கவில்லை என்றோ நீக்கிவிட்டொம் என்றோ சொல்ல மாடடான்। இனிமேல் இலங்கையில் யார் வந்தாலும் அமெரிக்காவின் ஆட்சிதான் நடக்கும்। யு என் பீ இல் உள்ளவர்கள் எல்லாம் அநேகமாக அமெரிக்கா சார்புடையவர்கள்। கோத்தாவின் துரும்பு இப்போது அமெரிக்காவின் கையில்। அமெரிக்கன் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல। கோத்தாவால் இனிமேல் சீன சார்பு தீர்மானகளை எடுக்க முடியாது। முடிவாக இது ஒரு அமெரிக்கா சார்பு அரசு அமைவதட்கான தேர்தல்। 

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளியும், மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியுமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக ஒரு வீடியோ எனக்கு கிடைத்துள்ளது.  

குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடு நிறைவுபெற 1 வருடம் எடுக்குமெனவும் இன்னமும் அது முடியவில்லை எனவும் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அந்த வீடியோ நீள்கிறது!

ஆனால், அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வீடியோவில் அமெரிக்க அதிகாரி கதைக்கும் விதத்தைப் பார்க்கும் போது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

போர்க்குற்றவாளியும், மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியுமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக ஒரு வீடியோ எனக்கு கிடைத்துள்ளது.  

குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடு நிறைவுபெற 1 வருடம் எடுக்குமெனவும் இன்னமும் அது முடியவில்லை எனவும் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அந்த வீடியோ நீள்கிறது!

ஆனால், அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வீடியோவில் அமெரிக்க அதிகாரி கதைக்கும் விதத்தைப் பார்க்கும் போது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டு துறக்காத மாதிரியும் நடிக்கலாம். அல்லது உண்மையாகவே இன்னும் அதற்கு காலம் தேவைப்படலாம்.

ஆனால் நீங்கள் பார்த்த வீடியோ போலி.

EJay0gkUEAAVOo1?format=jpg&name=large

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.