Jump to content

2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை


Recommended Posts

2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை

 
Sag-tamil-696x457.jpg
dimo.gif

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார்.

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது

இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைதீவுகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேநேரம், பாகிஸ்தான் அதிகாரிகளால் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும், ஆறு மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து அதற்கான ஏற்பாடுகள் குறித்த உறுதிப்படுத்தலை பாகிஸ்தான் வழங்காவிடின், இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது

தெற்காசியாவின் ஒலிம்பிக் விழா என அழைக்கப்படுகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா சுமார் 2 தசாப்தங்களுக்குப் பிறகு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 27 போட்டி நிகழ்ச்சிகளுக்காக நடைபெறவுள்ள இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 வீர வீராங்களைகள் கலந்துகொள்ளவுள்ளனர்

இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆயத்தம் குறித்து அதன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை தெளிவுபடுத்துகின்ற தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் கத்மண்டுவில் நடைபெற்றது.

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக உள்ள ரவி ராம் ஸ்ரேஸ்தாவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் சங்கத்தின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, இவ்வருட முற்பகுதியில் நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கத்மண்டுவின் தசரத் விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இந்த வாரம் அளவில் நிறைவுக்கு வரும் என அந்நாட்டு தேசிய விளையாட்டு குழுவின் செயலாளர் ரமேஷ் குமார் சில்வால் உறுதியளித்தார். அத்துடன், இதற்கான அனைத்து உதவிகளையும் நேபாள அரசாங்கம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, உறுப்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெய்வல்லுனர், சைக்கிளோட்டம் மற்றும் குத்துச்சண்டை ஆகிய போட்டிகளுக்காக மேலும் ஒரு வீரரை இணைத்துக் கொள்ளவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.  

இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஆயத்தம் குறித்து அதன் தலைவரான ரவி ராம் ஸ்ரேஸ்தா கருத்து வெளியிகையில், தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான SAG போட்டிகள் இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

இதேநேரம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெற்காசிய விளையாட்டு விழாவை கட்டாயம் நடத்த வேண்டும் என இந்தக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 2021இல் 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துகின்ற வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது

இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்வின் போது SAG கொடி பாகிஸ்தானிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ரவி ராம் ஸ்ரேஸ்தா தெரிவித்தார்

எனினும், தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியுமா என்பதை உறுதி செய்ய பாகிஸ்தானுக்கு 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு பாகிஸ்தானால் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியாது போனால், 2021இல் நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகியன இணைந்து நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது

முன்னதாக பாகிஸ்தானில் 1989 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தெற்காசிய விளையாட்டு விழா நடைபெற்றதுடன், இலங்கையில் 1991 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், மாலைதீவுகள் இதுவரை போட்டிகளை நடத்தியது கிடையாது

http://www.thepapare.com/sri-lanka-bid-to-host-south-asian-games-2021-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.