Jump to content

பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும்-டொனால்ட் டஸ்க்


ampanai

Recommended Posts

பிரெக்ஸிட் நடவடிக்கைக்குப் பிறகு, உலகில் பிரிட்டன் 2ம் தர நாடாகி விடும் என்று ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, பிரெக்ஸிட் என பரவலாக அழைக்கப்படுகிறது.  இதுகுறித்து பெல்ஜியத்தில் புருக்ஸ் நகரில்  உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் பேசினார்.

அப்போது அவர், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு பிறகு பிரிட்டன் உலகில் 2ம் தர நாடாக ஆகி விடும் என்றும், சர்வதேச விவகாரங்களில் செலுத்தும் ஆளுமையை பிரிட்டன் இழந்து விடும் என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவை ஒன்றுபட்ட ஐரோப்பாவால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்றும் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டார்.

 

https://www.polimernews.com/dnews/88768/பிரெக்ஸிட்நடவடிக்கைக்குப்-பிறகுபிரிட்டன்-2ம்-தர-நாடாகிவிடும்-டொனால்ட்-டஸ்க்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இருந்தால் பிரிட்டன் மூன்றாம் தர நாடுகளின் தரவரிசைக்கு போயிடும் என்றுதான் ஐரோப்பில் இருந்து எலக்கசன் மூலம் அறுத்து எடுத்தவங்கள் .

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

அப்படியே இருந்தால் பிரிட்டன் மூன்றாம் தர நாடுகளின் தரவரிசைக்கு போயிடும் என்றுதான் ஐரோப்பில் இருந்து எலக்கசன் மூலம் அறுத்து எடுத்தவங்கள் .

பிரித்தானியா முதலாம் தர நாடு இல்லை என்று விளம்பரம் செய்தால் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம் 🙂 

ஆனாலும், போலாந்துக்காரனும் ரூமேனியனும் விட மாட்டார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

பிரித்தானியா முதலாம் தர நாடு இல்லை என்று விளம்பரம் செய்தால் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம் 🙂 

ஆனாலும், போலாந்துக்காரனும் ரூமேனியனும் விட மாட்டார்கள்.
 

எல்லாம் டொனி பிலேயரும் லேபரும் செய்த வேலை. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு.. எல்லைகளை திறந்து விட்டது மகா தப்பு. 

இப்ப லண்டனில்.. ரயிலில் பயணிப்பதே கடினமானதாகி விட்டது. சொறீலங்காவில் பயணிப்பதை விடக் கேவலமாகி விட்டது. அவ்வளவுக்கு நெருக்குவாரம். 

இப்படியே போனால்.. கிழக்கு ஐரோப்பா பிரிட்டனை சுரண்டி சுரண்டி பணக்காரர் ஆகிடுவாங்கள்.. பிரிட்டன் பிச்சைக்கார நாடாகிடும்.

அதிலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி எல்லைகளை மூடுவது நல்லம். திறமைசாலிகளுக்கு மட்டும் எல்லையை திறக்கனும்... அவுஸி போல். 

இன்றேல்.. பிரிட்டன் இரண்டாம் தரமல்ல.. 3ம் தர நாடாவது தவிர்க்க முடியாதிருக்கும். 

ஏலவே சுவீடன்.. தோற்றுப்போன நாடாகி விட்டதாம். அவர்களும் இப்போ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோரும் வேலை செய்த நாட்டில்.. இப்போ... முதியவர்களைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு கஸ்டம். 

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

இப்ப லண்டனில்.. ரயிலில் பயணிப்பதே கடினமானதாகி விட்டது. சொறீலங்காவில் பயணிப்பதை விடக் கேவலமாகி விட்டது. அவ்வளவுக்கு நெருக்குவாரம். 

அதிலும் இந்த பழைய 'ட்யூப்பில்' கொஞ்சம் நெடியவர்கள் வளைந்து தான் பயணிக்க வேண்டும். 

 

7 minutes ago, nedukkalapoovan said:

ஏலவே சுவீடன்.. தோற்றுப்போன நாடாகி விட்டதாம். அவர்களும் இப்போ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோரும் வேலை செய்த நாட்டில்.. இப்போ... முதியவர்களைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு கஸ்டம். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியின் பொருளாதார கொள்கையும் ஒரு காரணம். அவரகளின் பூச்சியத்திற்கு கீழேயான வட்டி வீதம் உழைப்பவர்களை விட சுரண்டுபவர்களை அதிகரிக்க வைத்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

எல்லாம் டொனி பிலேயரும் லேபரும் செய்த வேலை. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு.. எல்லைகளை திறந்து விட்டது மகா தப்பு. 

இப்ப லண்டனில்.. ரயிலில் பயணிப்பதே கடினமானதாகி விட்டது. சொறீலங்காவில் பயணிப்பதை விடக் கேவலமாகி விட்டது. அவ்வளவுக்கு நெருக்குவாரம். 

இப்படியே போனால்.. கிழக்கு ஐரோப்பா பிரிட்டனை சுரண்டி சுரண்டி பணக்காரர் ஆகிடுவாங்கள்.. பிரிட்டன் பிச்சைக்கார நாடாகிடும்.

அதிலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி எல்லைகளை மூடுவது நல்லம். திறமைசாலிகளுக்கு மட்டும் எல்லையை திறக்கனும்... அவுஸி போல். 

இன்றேல்.. பிரிட்டன் இரண்டாம் தரமல்ல.. 3ம் தர நாடாவது தவிர்க்க முடியாதிருக்கும். 

ஏலவே சுவீடன்.. தோற்றுப்போன நாடாகி விட்டதாம். அவர்களும் இப்போ ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோரும் வேலை செய்த நாட்டில்.. இப்போ... முதியவர்களைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கு கஸ்டம். 

பிரிட்டன் வெளியேற மிச்சம் இருக்கிறவை துண்டை காணம் துணியை காணம் என்று விலகி விடுவினம் இல்லையோ பிரான்சு ஜெர்மன் போலிஸ் போல் அதிக அதிகாரங்களை கொண்டதாக பிரட்டிஷ் போலிஸ் இருக்கணும்  போலந்து காரனும் ருமேனியனும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியன்ரை பாதிப்பு ஜேர்மனிக்கையும் இருக்கு...வெளியிலை காட்டிக்கொள்ளுறாங்களில்லை. AfD எண்ட வெளிநாட்டுகாரர் எதிர்ப்புக்கட்சி நல்லாய் முன்னேறிக்கொண்டு வருது.

https://en.wikipedia.org/wiki/Alternative_for_Germany

Link to comment
Share on other sites

12 hours ago, பெருமாள் said:

பிரிட்டன் வெளியேற மிச்சம் இருக்கிறவை துண்டை காணம் துணியை காணம் என்று விலகி விடுவினம் இல்லையோ பிரான்சு ஜெர்மன் போலிஸ் போல் அதிக அதிகாரங்களை கொண்டதாக பிரட்டிஷ் போலிஸ் இருக்கணும்  போலந்து காரனும் ருமேனியனும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பினம் .

தமிழர்களாகிய நாம் எமது வாலை சுருட்டாமல் எல்லை மீறுவது சக தமிழரிடம் மட்டும் தான் என்பதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரம் மிக்க  பொலிஸ் வந்தாலும் கவலை இல்லை. 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

தமிழர்களாகிய நாம் எமது வாலை சுருட்டாமல் எல்லை மீறுவது சக தமிழரிடம் மட்டும் தான் என்பதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரம் மிக்க  பொலிஸ் வந்தாலும் கவலை இல்லை. 😂😂😂

இங்கு மற்ற இனத்தவர்கள் செய்யும் கிரிமினல் வேலைகளில் இரண்டு வீதம் கூட நம்மவர்கள் செய்வதில்லை அப்படி செய்தாலும் எதோ தாங்களா செய்தது போல் கூனி குறுகி கொண்டு செல்லுவினம் குண்டே வைத்து போட்டு துணிவா அல்லா அக்பர் என்று கத்தி கொண்டு திரியும் ஒரு கூட்டம்  அவங்களை விடவா நாங்கள் ?

7 minutes ago, tulpen said:

தமிழர்களாகிய நாம் எமது வாலை சுருட்டாமல் எல்லை மீறுவது சக தமிழரிடம் மட்டும் தான் என்பதால் தமிழர்களுக்கு எந்த அதிகாரம் மிக்க  பொலிஸ் வந்தாலும் கவலை இல்லை. 😂😂😂

சக தமிழரிடம் தானே எங்களின் பலம் தெரியும் (பலவீனம் 😁😁😁😁)

Link to comment
Share on other sites

44 minutes ago, பெருமாள் said:

இங்கு மற்ற இனத்தவர்கள் செய்யும் கிரிமினல் வேலைகளில் இரண்டு வீதம் கூட நம்மவர்கள் செய்வதில்லை அப்படி செய்தாலும் எதோ தாங்களா செய்தது போல் கூனி குறுகி கொண்டு செல்லுவினம் குண்டே வைத்து போட்டு துணிவா அல்லா அக்பர் என்று கத்தி கொண்டு திரியும் ஒரு கூட்டம்  அவங்களை விடவா நாங்கள் ?

 உண்மை தான் பெருமாள். அதைத் தான்  நானும் குறிப்பிட்டேன். அடுத்தவன் முன்னால் கூனி குறுகி எமது உரிமைகளை கூட விட்டுக்கொடுக்கும் நாம் எமக்குள் அப்படி அல்ல.

தொழில் கொள்வோர் முன்னால்  தமிழர்கள் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அடக்க ஒடுக்கமாக கீழ்ப்படிந்து வேலை செய்பவர்கள் என்ற பெயரை எடுத்த நாம் எமக்குள் தமிழ் சங்கங்கள் கோவில்கள்  என்று  சிறிய விடயங்களுக்கும் போலி கெளரவங்களுக்கும்  எமக்குள்  அடிபடுவதை  தவிர ஒரு சமூகமாக அடுத்தவர் முன் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு எமது  சொந்த “சமூக வர்ததக பொருளாதார கட்டமைப்புக்களை” புலத்தில் கட்டி எழுப்பவில்லை என்பதையே சுருக்கமாக நகைச்சுவையாக குறிப்பிட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பொருளாதாரம் பற்றியும் 

சனங்களின்  இடம்  பெயர்வு  சார்ந்தும் கொதித்துப்போய்  பேசுகின்றீர்கள்?

இதெல்லாம் உள்ளே  வரும் போது யோசிப்பதில்லையா?

அல்லது அந்தளவுக்கு சரக்கில்லையா??

வரவும்  உண்டு  செலவும்  உண்டு

பிரித்தானியா  எப்பொழுதுமே  முழுக்க முழுக்க சுயநலத்துடன் சிந்திக்கும் நாடு

வரவு மட்டுமே குறிக்கோள்

ஆனால் இன்றைய  உலக  ஒழுங்கில்  பலமாகுதலே தம்மையும்  காப்பாற்ற  வழி

இனி பிரித்தானியா  தனியே  நின்று.....?.??????

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.