Jump to content

மொட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகளே


Recommended Posts

NW13.jpg?itok=mN3uxizo

வாக்களிக்க செல்லும்போது மொட்டு சின்னத்தை பார்த்தால் தமிழர்கள் வெறுப்படைய வேண்டும். கடந்தகால அநியாயங்களை மறந்து மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகள் என்றே கருதப்படுவர் என டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மாபெரும் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு வருகைதந்த அவரை பெருந்திரளான மக்கள் ஒன்றினைந்து வரவேற்றனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் நினைத்தால் தென் இலங்கையின் அரசியலை மாற்றலாம் எனும் பெருமை கொண்டவர்கள் நாங்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை தோற்கடித்து மைத்திரியை ஜனாதிபதியாக மாற்றிய வரலாறு படைத்தவர்கள். இரண்டாவது தடவையும் அச்சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது.

ஆகவே வாக்களிக்க செல்லும்போது மொட்டு சின்னத்தை பார்க்கும் தமிழர்கள் வெறுப்படைய வேண்டும். எங்களது உறவுகள் அழிக்கப்பட்டதை நினைத்துப்பார்க்க வேண்டும். அதையும் தாண்டி மொட்டு மலர்ந்தால் எமக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ஒரு புறமிருக்க எங்களுக்கு அக்குடும்பம் செய்த அநியாயம் சரி என நியாயப்படுத்தப்படும் என்றார்.

ஆகவே கிழக்கு மாகாண மக்கள் சரியான விகிதாசாரத்தில் அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து நாங்கள் தன்மானம் மிக்க இனம் என்பதை கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாக வழங்க வேண்டும். 17ஆம் திகதி முடிவுகள் வெளிவருகின்றபோது கிழக்கு மாகாணத்தின் மூலமே வெற்றி கிடைத்துள்ளது எனும் செய்தி வெளிவரவேண்டும் என்றார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

http://www.thinakaran.lk/2019/11/14/அரசியல்/43864/மொட்டுச்-சின்னத்திற்கு-வாக்களிக்கும்-ஒவ்வொரு-தமிழனும்-ஈனப்பிறவிகளே

Link to comment
Share on other sites

58 minutes ago, ampanai said:

வாக்களிக்க செல்லும்போது மொட்டு சின்னத்தை பார்த்தால் தமிழர்கள் வெறுப்படைய வேண்டும். கடந்தகால அநியாயங்களை மறந்து மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகள் என்றே கருதப்படுவர் என டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வாக்களிக்க வேண்டாம் என கேட்பது வேறு தங்கள் வாக்களிக்கும் உரிமையை தங்கள் விருப்புக்கு எதிரானவர்களை ஈனப்பிறப்புக்கள் என்பது தலைமைத்துவம் இல்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

கடந்தகால அநியாயங்களை மறந்து மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகள் என்றே கருதப்படுவர் என டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அதைப் போலவே கடந்தகால அநியாயங்களை மறந்து அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கும், வாக்களிக்கக் கோரும் ஒவ்வொரு தமிழனும் ஈனப்பிறவிகள் என்றே கருதப்பட வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.