Jump to content

தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                     தமிழர்தம்  உடம்பொடு  உயிரிடையென்ன  வள்ளுவம்

                                                                                                   -சுப.சோமசுந்தரம்     

                                                இப்போதெல்லாம்  முன்  எப்போதும்  இல்லாத அளவிற்கு  வள்ளுவம்  தமிழர்தம்  வாசிப்பில்  கலந்ததோ  என்னவோ, சுவாசிப்பில்  கலந்தாற்  போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு  நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள்  எக்காலத்தும்  வாழ்ந்தவர்தாமே! நேற்று  பெய்த மழையில்  முளைத்த  காளான்களாய், திடீரென  உறவாடிக்  கெடுக்க  நினைக்கும்  உன்மத்தர்க்கே  நம்  நன்றி  உறித்தாகுக!

                   ‘ மழித்தலும்  நீட்டலும்  வேண்டா  உலகம்

                      பழித்தது  ஒழித்து  விடின் ’             (குறள்-280)    

என்ற  வள்ளுவனுக்கே  காவியுடுத்திப்  பட்டை  தீட்டினர்  நயவஞ்சகத்தையே  தொழிலாய்க்  கொண்ட  கூட்டத்தினர். குறுக்கு  சால்  ஓட்டித்  தமிழ்  நிலத்தில்  காலூன்ற  இவர்களுக்கு  உலகப்  பொதுமறையா  கிடைத்தது? பொய்யே  மொழியாய்க்  கொண்டோர்க்குப்  பொய்யா  மொழியா? நிற்க. இவர்களின்  எதிர்மறையை  நேர்மறையாய்க்  கொள்வோமே! கற்றார்  எனக்  காட்டிக்  கொள்ளும்  இவர்களையும்  கல்வி அற்றாரையும்  விடுத்து, ஏனைய  நம்மிடம்  வள்ளுவன்  கொண்ட  உறவும்  பரிவும்தான்  என்ன  என்பதை  இவர்கள்  முன்  அலசுவோமே! என்னைப்  போல்  உங்கள்  அனைவர்க்கும்  வாழ்வில்  குறளனுபவம்  வாய்க்கப்  பெற்றிருக்கும்  என்பதில்  ஐயமில்லை. இப்போது  இம்முனையில்  எழுத்தாணி  என்  கையில். சற்று  நேரத்திற்கு  நான்  மட்டும்தான்  உங்களிடம்  பேச  முடியும்!

                                  இலக்கிய  உலகில்  உங்களில்  பெரும்பான்மையினரைப்  போல்  நானும்  எந்தப்  பகுதியிலும்  துறை  போகியவன்  இல்லை. அஃதாவது  இலக்கியமே  வாழ்வாகக்  கொண்ட  பேறு  பெறவில்லை. ஆனால்  அன்றாட நிகழ்வுகளில்  போகிற  போக்கில் வள்ளுவனை  நினைத்தால், அது  வாழ்வே  இலக்கியமாகக்  கொள்ளும்  பேறுதானே!

                                 மதியம்  ஒரு  மணிவரை  வகுப்பென்றால், சிலசமயம்  சுமார்  ஐந்து  நிமிடங்கள்  அதிகம்  வகுப்பெடுக்கும்  சூழ்நிலை  வரலாம். அப்போது  ஆசிரியனாகிய  நான்  வேடிக்கையாய் 

                ‘ செவிக்குண  வில்லாத  போழ்து  சிறிது

                  வயிற்றுக்கும்  ஈயப்  படும் ’             (குறள்-412)

 என்று  ஆரம்பகாலத்தில்  சொல்லியிருக்கிறேன். இப்போதெல்லாம்  அம்மாதிரி  சூழ்நிலையில், “குறள்  சொல்வோமா?”  என நான்  கேட்க  மாணவர்களே  ஒருமித்த  குறலில்  அக்குறளைச்  சொல்லி  முடிப்பது  என்  செவிக்கின்பம். பசி  வயிற்றைக்  கிள்ள  அவர்கள்  உள்ளுக்குள்  என்னை  வசை  பாடுவது  இதுவரை  என்  காதில்  கேட்கவில்லை.           

                                  மேற்கூறிய  குறள்  தொடர்பாக  இன்னொரு  நிகழ்வும்  உண்டு. நிகழ்ச்சியொன்று  கால தாமதமாகி  மதியம்  இரண்டு  மணிக்கு  நன்றியுரை  சொல்ல  நான்  அழைக்கப்பட்டேன். “சிறிது  வயிற்றுக்கும்  ஈயப்படும்  எனும்  தருணத்தில்  நன்றி  சொல்ல  வந்துள்ள  பரிதாப  நிலை  எனது”  என்ற  பீடிகையோடு  ஆரம்பித்தேன். அந்நிகழ்ச்சி  கீழடி  ஆய்வும்  அரசியலும்  பற்றியது. அருமையானதொரு  சொற்பொழிவு  நிகழ்த்தி  அமர்ந்திருந்தார்  பேரா.கருணானந்தம். அவரது  பொழிவுகளை  ஏற்கெனவே  இணையத்தில்  பார்த்தும்  கேட்டும்  இருக்கிறேன். ஒவ்வொரு  பொழிவும்,  நாம்  எவ்வளவு  அறியாமையிலிருக்கிறோம்  என்பதை  அவர்  சொல்லாமலே  நமக்கு  உணர்த்தவல்லது. எனவே  எனது  நன்றியுரையில்  ‘அறிதொறும்  அறியாமை  காண  வைக்கும்  சான்றாண்மை’  என  அவரைப்  பாராட்டினேன். நிகழ்ச்சி  முடிந்ததும்  தமிழுணர்வாளரான  என்  நண்பரொருவர்  என்னைக்  கிண்டலாகப்  பாராட்டினார், “பலே  ஆளுய்யா  நீர்! காமத்துப்பாலில்  வேறு  எதற்கோ  உவமையாகச்  சொல்லப்பட்டதை  இங்கு  எடுத்து  விட்டீரே!”  காவிக்  கூட்டம்  மனம்  போனவாக்கில்  வள்ளுவனை  இழுக்கும்  போது, நானும்  என்  பங்கிற்கு  இழுக்கக்  கூடாதா, என்ன! ‘அறிதொறும்  அறியாமை’  சொல்லும்  குறள்

            ‘ அறிதோறு  அறியாமை  கண்டற்றால்  காமம்

               செறிதோறும்  சேயிழை  மாட்டு ’.          (குறள்-1110)     

                                வேறொரு  சமயம்  மேடையில்  வீற்றிருந்த  சிறப்பு  விருந்தினரை  அறிமுகம்  செய்த  நான், “அவர்  நிரம்பிய  நூலுடையார்”  என  அவர்தம்  சான்றாண்மை  பற்றிக்  கூறினேன். நிகழ்ச்சி  நிறைவில், அங்கு  வந்திருந்த  தமிழறிஞர்  ஒருவர்  என்னை  மனந்திறந்து  பாரட்டினார், “எனக்குத்  தெரிந்து  ‘நிரம்பிய  நூலறிவுடைமை’  என்பதற்கு  ‘நிரம்பிய  நூலுடைமை’  என்னும்  சொல்லாடல்  வள்ளுவத்திலேயே  அமைந்துள்ளது. குறள்  தெரியாமல்  நீங்கள்  பயன்படுத்தியிருக்க  வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள்”.  அப்பாராட்டு  இன்றும்  என்  உள்ளம்  வருடும்  தென்றல்.

            ‘அரங்கின்றி  வட்டாடி  யற்றே  நிரம்பிய

             நூலின்றிக்  கோட்டி  கொளல்’         (குறள்-401)

என்று  கல்லாமை  பற்றிய  குறளின்  தாக்கமே  என்  சொற்  பிரயோகம்  என்பது  நான்  அறிந்தது. எப்போதோ  படித்ததெல்லாம்  வடிகட்டப்பட்டு  நம்  மனதில்  தங்கி  நிற்கும்  என்பதும்  நான்  அறிந்தது. நூலறிவிற்கு  நூல்  ஆகுபெயராய்  அமைந்த  அக்குறிப்பிட்ட  சொல்லுருவாக்கம்  வள்ளுவனுக்கே  உரியது  என்பது  நான்  அறியாதது.  

                                   கணித  ஆசிரியன்  என்ற  முறையில்  கல்லூரி  மாணவர்களுக்கு  வினாடி  வினா (Quiz)  நிகழ்ச்சிகள்  நான்  நடத்துவதுண்டு. பொது  அறிவு  வினாடி  வினா  நிகழ்ச்சி  போல  வினாவுக்கு  வெறும்  விடை  மட்டும்  சொல்லிச்  செல்லும்  வழக்கமில்லை. கரும்பலகையில்  விடைக்கான  விளக்கமும்  தரப்படும். விடையைச்  சொல்வதற்கு  மட்டும்  தான்  ‘வினாடி’. ஒரு  முறை  முதற்சுற்று  முடிந்ததும்  அறிவித்தேன், “ஒரு  சுற்றில்  தோற்றவர்கள்  அரங்கத்தை  விட்டு  வெளியேற  வேண்டியதில்லை. இறுதி  வரை  பார்வையாளர்  மாடத்தில்  அமர்ந்திருந்து  கற்றுக்  கொள்ளலாம். இந்த  Quizன்  நோக்கம்  வெற்றி-தோல்வி  அல்ல; கற்றுக்  கொள்வது  மட்டுமே. எனவே  இந்த  Quiz லும்  தோற்றவர்  வென்றார்”. இந்த  Quizல்  தோற்றவரும்  வென்றார்  என்பதற்குப்  பதிலாக  உம்மையை  ஏன்  மாற்றிப்  போட்டேன்  எனச்  சற்று  யோசித்தேன். என்  நினைவில்  ‘ஊடலில்  தோற்றவர்  வென்றார்’  என்று  ஆரம்பிக்கும்  குறளின் (1327)  படிம  நிலை   என  உணர்ந்தேன். இதனை  அங்கு  விளக்கவில்லை. ஏனெனில்  பங்கேற்பாளர்  மாணாக்கர்; குறள்  காமத்துபாலில்.

                                      அறிஞர்  பெருமகனார்  தொ. பரமசிவன்  அவர்கள்  பணியாற்றிய  பல்கலைக்கழகத்திலேயே  பணியாற்றும்  பேறு  பெற்றவன்  நான். அவரது  துறை  தமிழியல்; எனது  துறை  கணிதம். எண்ணும்  எழுத்தும்  என  அவருடன்  நட்பு  பாராட்டியது  எனக்கு  வாய்த்த  சான்றோர்  கேண்மை. அவர்  உடல்  நிலை  காரணமாக  விருப்ப  ஓய்வு  பெற்றார். “விருப்ப  ஓய்வெல்லாம்  வேண்டாம். ஓய்வு  பெறும்  வரை  வந்து  செல்லுங்கள். உங்கள்  வகுப்புகளை  மற்றவர்கள்  கவனிப்பார்கள். உங்களிடம்  தினம்  பேசக்  கிடைப்பதே  எங்களுக்கான  அரும்பெறல்”  என்று  பேராசிரியர்களும்  ஏனைய  பணியாளர்களும்  வற்புறுத்தினர். அவர்  ஏற்கவில்லை. அவரது  பணிநிறைவு  வாழ்த்துக்கான  விழாவில்  அவரது  நண்பரான  ஆங்கிலப்  பேராசிரியர்  இரவீந்திநாதன்  சொன்னார், “இப்போது  கூட  தொ.ப.  விருப்ப  ஓய்வு  பெறும்  தம்  முடிவை  மாற்றிக்  கொள்ள  மாட்டாரா  எனும்  ஏக்கம்  என்னிடம்  உண்டு.”  நான்  பேசும்  போது  இதனைச்  சுட்டி ‘செல்லாமை  உண்டேல்  எனக்குரை’  என  ஆரம்பிக்கும்  குறளை (1151)  ஞாபகப்படுத்துவதாகக்  கூறினேன். தலைவன்  தலைவியை  சிறிது  காலம்  பிரிய  வேண்டிய  சூழ்நிலை  வருகிறது. உற்றார்  உறவினரிடம்  விடைபெற்று,  தலைவியிடம்  வருகிறான். அப்போது  அவள், “நீ  மனம்  மாறி  செல்லவில்லை  என்றால்  மட்டும்  என்னிடம்  சொல்”  என்கிறாள். தொ.ப.  தம்  ஏற்புரையில், குறளிலேயே  இக்குறளுக்கான  பதிலையிறுத்தார்

                        ‘வேண்டாமை  அன்ன  விழுச்செல்வம்  ஈண்டில்லை

                          யாண்டும்  அஃதொப்பது  இல்’             (குறள்-363)

                                நான்  பணி  செய்யும்  பல்கலைக்கழகத்தில்  என்  துறையல்லாத  வேறு  ஒரு  துறையில்  சில  காரணங்களுக்காக  சிலகாலம்  துறைத்தலைவர்  பொறுப்பு  எனக்கு  வழங்கப்பட்டது. அங்கிருந்த  பிரச்சனைகளுக்கு  யாரையாவது  பலிகடா  ஆக்குவதில்  நேரத்தை  வீணாக்காமல், மாணவர்களுக்கு  சுமூகமான  தீர்வை  ஏற்படுத்த  முயற்சி  மேற்கொண்டேன். என்  மீது  நிர்வாகமும்  ஆசிரியர்  சங்கமும்  வைத்த  எதிர்பார்ப்பும்  அதுவே. இப்பணியில்  சில  அதிகாரிகள்  யார்  மீதோ (என் மீதும்)  கொண்ட  வஞ்சினத்தால்  எனக்கு  இடைஞ்சல்களை  அள்ளித்தந்தனர். அதில்  ஒருவர்  ஒருநாள்  மாணவர்  சார்ந்த  கோப்புகளை  நான்  எடுத்துச்  சென்றபோது  என்னிடம், “அந்தத்  துறை  சார்ந்த  விடயங்களை  எடுத்துக்  கொண்டு  என்னிடம்  வர  வேண்டாம். கோப்புகளை  எடுத்துச்  செல்லுங்கள்” என்று  கடுமையாகப்  பேசினார். என்னிடம்  பொதுவாக  இல்லாத  அளவு  பொறுமையுடன், “நீங்கள்  பேசியது  என்  காதில்  ‘Get out’  என்று  விழுகிறது. இப்போது  போகிறேன். மீண்டும்  வருவேன். என்  தனிப்பட்ட  விஷயங்களில்  மட்டும்  தான்  என்  தன்மானம்  வேலை  செய்யும். பொதுக்  காரியங்களில்  நான்  மானம்  பார்ப்பதில்லை”  என்று  சொல்லி  வந்துவிட்டேன். நான்  பேசியது  அனைத்தும்  பெரியாரை  வாசித்ததில்  எனக்குக்  கிடைத்த  பாடம். இந்நிகழ்வை  அன்றே  என்  நண்பரும்  ஆசானுமான  தொ.ப. விடம்  கூறினேன். அவர்  பதிலாகக்  குறள்  மட்டுமே  கூறினார்

                   ‘குடிசெய்வார்க்  கில்லை  பருவம்  மடிசெய்து

                     மானங்  கருதக்  கெடும்’.                 (குறள்-1028)        

பொருள்: சமூக  வாழ்க்கையில்  ஈடுபடுவோர்  காலம், சோம்பல், மானம்  பார்த்தால்  அவர்  எடுத்த  காரியம்  கெடும்.

                                  இப்போது  நீங்களே  சொல்லலாம். வள்ளுவத்தோடு  நாம்  கொண்ட  உறவு  உடம்பொடு  உயிரிடையென்ன அன்றி வேறென்ன? அதற்கும்  வள்ளுவத்திலிருந்தே  உவமை! மீண்டும்  வேற்றுச்  சூழலில்  அமைந்த  உவமை!

                   ‘உடம்பொடு  உயிரிடை  என்னமற்  றன்ன

                    மடந்தையொடு  எம்மிடை  நட்பு’         (குறள்-1122)                                           

Link to comment
Share on other sites

வாழ்வில் கலந்த வள்ளுவம் நம்முடன் வாழ்கிறது என்பதை உணர்ந்து துய்ப்பவர் பேறு பெற்றோர். 

வள்ளுவமே மழை போன்று

'துப்பார்க்குத் துப்பாய துப்பார்க்குத் துப்பாக்கித் துப்பாயத் தூவும் வள்ளுவம்' என வள்ளுவத்தை வாழ்ந்து, வழங்கி, உண்டு, உயிர்த்து, பகிர்ந்து . . .

அருமை!

வாழ்க்கைப் பயணத்தின் இறுதி இலக்கு இறைவன் திருவடிகள் என்பதை முன்னிறுத்தி, வாழ்வே மாயம் என்று பயணத்தை நரகமாக்கும் பயனிலிகளின்  அறியாமையை  எண்ணி , அவர்களுடன் பயணிக்கும் இறைவன் நகுவான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுப.சோமசுந்தரம் said:

என்ற  வள்ளுவனுக்கே  காவியுடுத்திப்  பட்டை  தீட்டினர்  நயவஞ்சகத்தையே  தொழிலாய்க்  கொண்ட  கூட்டத்தினர். குறுக்கு  சால்  ஓட்டித்  தமிழ்  நிலத்தில்  காலூன்ற  இவர்களுக்கு  உலகப்  பொதுமறையா  கிடைத்தது? பொய்யே  மொழியாய்க்  கொண்டோர்க்குப்  பொய்யா  மொழியா?

எனக்கு மிகவும் பிடித்துப் போன வரிகள் ...இவை தான்!

அது மட்டுமல்ல.....!

பொதிய மலையில்...கமண்டலத்துடன்....அகத்தியன் மட்டும் ஏறாமல் இருந்திருந்தால்....எனது தமிழ்....இவ்வளவு கீழ் நிலையை அடைந்திருக்காது...எனது கருத்து!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.