Jump to content

கோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு


Recommended Posts

a6_0.jpg?itok=KakACjsT
  • பிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்
  • சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை
  • பணம் எங்கிருந்து வந்தது - CMEV

கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) அறிவித்துள்ளது.

தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்காக ரூபா 3,108 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக CMEV மதிப்பீடு செய்துள்ளது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பு நிறுவனமான தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) தேர்தல் கண்காணிப்பு பிரசார செலவுகள் தொடர்பில் முதன் முறையாக மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இறுதி அறிக்கை இன்று (13) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

இலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்ட கட்டமைப்போ, ஒழுங்குமுறை பொறிமுறையோ இல்லை என்பதோடு, அதற்கான தேவையை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை விளம்பரம் மற்றும் கூட்டங்களுகாக, மூன்று முக்கிய வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவுகளாக மதிப்பிடப்பட்ட செலவுகளை உத்தேசமாக கணக்கீடு செய்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.

கட்சி அச்சு ஊடகம் தொலைக்காட்சி கூட்டம்/ஏனைய பிரசாரம் மதிப்பிடப்பட்ட குறைந்த செலவு
பொதுஜன பெரமுன 82 மில்லியன் 853 மில்லியன் 503 மில்லியன் 1,518 மில்லியன்
புதிய ஜனநாயக முன்னணி 175 மில்லியன் 544 மில்லியன் 703 மில்லியன் 1,422 மில்லியன்
தேசிய மக்கள் சக்தி 12 மில்லியன் 32 மில்லியன் 116 மில்லியன் 160 மில்லியன்

அந்தந்த ஊடக நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக அறவிடும் கட்டணங்களுக்கு ஏற்ப, வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக CMEV தெரிவித்துள்ளது.

இந்த செலவினங்களில் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவற்றையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்களுக்கு அமைய, தேர்தல் களமானது சமமற்றதாக காணப்படுவது தெளிவாவதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

"வரையறையற்ற பணத்தை செலவிட்டு எப்படியாவது தங்களது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இதன் மூலம் வேட்பாளர்களுக்கு முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் தேர்தல் களம் சமமற்றதாக அமைந்துள்ளதாக" அவர் தெரிவித்தார்.

"இவ்வாறு கிடைக்கும் நிதி யாருக்கு சொந்தமானது என்பதுதான் பிரச்சினை. நிதி வழங்குபவர் போதைப்பொருள் கடத்துபவரா அல்லது பாதாள உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரா என்பது ஒரு மர்மமாகும். இந்த சூழ்நிலையைத் தடுக்க இந்த ஆதாரங்களையும் மொத்த செலவையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது தொடர்பில் அவசியமான சட்டத்தையும் கொண்டு வருவது அவசியமாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் செலவு தொடர்பான சட்டங்கள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற 2017 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்மொழிந்து அதற்கு அங்கீகாரமும் பெறப்பட்டது. ஆயினும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

தேர்தலில் நிதிக் கட்டுப்பாடு இல்லாமையானது,  ஒரு பெரிய தடையாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய சட்டங்களை கொண்டுவருவது மிக அவசியமாக உள்ளதாகவும், அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் செய்த செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளனவென தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

  • 2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 54
  • 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 1,825 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ.132
  • 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 2,705 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 180
  • 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 .மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 450 என மதிப்பிடப்பட்டுள்ளது. (பி.பி.சி.)

http://www.thinakaran.lk/2019/11/14/அரசியல்/43826/கோட்டாபய-1518-மில்-சஜித்-1422-மில்லியன்-அநுர-160-மில்-செலவு

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

"வரையறையற்ற பணத்தை செலவிட்டு எப்படியாவது தங்களது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இதன் மூலம் வேட்பாளர்களுக்கு முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் தேர்தல் களம் சமமற்றதாக அமைந்துள்ளதாக" அவர் தெரிவித்தார்.

"இவ்வாறு கிடைக்கும் நிதி யாருக்கு சொந்தமானது என்பதுதான் பிரச்சினை. நிதி வழங்குபவர் போதைப்பொருள் கடத்துபவரா அல்லது பாதாள உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரா என்பது ஒரு மர்மமாகும். இந்த சூழ்நிலையைத் தடுக்க இந்த ஆதாரங்களையும் மொத்த செலவையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது தொடர்பில் அவசியமான சட்டத்தையும் கொண்டு வருவது அவசியமாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்

கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுள்ளது. தேர்தலில்ன் பின்னர் வெள்ளை மீண்டும் கருப்பாகும். 

இருந்தாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த 'செலவீனங்கள்' உதவும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.