Jump to content

மைத்திரிபால சிறிசேன மட்டுமே நாட்டின் முன்மாதிரிமிக்க தலைவர் மகாசங்கத்தினர் பாராட்டு


Recommended Posts

தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நாட்டின் முன்மாதிரி மிக்க ஜனாதிபதி என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோ சனை சபை, பௌத்த புலமைத்துவ சபை, அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை ஆகியவற்றை பிரதி நிதித்துவப்படுத்தும் மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்குமிடை யிலான சந்திப்பொன்று நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இச்சந்திப் பின்போதே மகாசங்கத்தினர் இதனை தெரிவித்தனர். 

திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தி அதனை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் பௌத்த சாசனத்திற்காக ஜனாதிபதி மேற்கொண்ட ஒரு முக்கியமான பணி எனத் தெரிவித்த மகாசங்கத்தினர், நாட்டின் பிரி வெனா கல்வியை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்னெப்போதும் இல்லாத வகையில் பல பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். 

மேலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றில் உள்ள பிக்குமார்களின் நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதி கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் விரிவான பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தேரர்கள் குறிப்பிட்டனர். 

அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதியினால் 100 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.                 

http://valampurii.lk/valampurii/content.php?id=19830&ctype=news

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

மேலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அவற்றில் உள்ள பிக்குமார்களின் நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதி கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் விரிவான பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தேரர்கள் குறிப்பிட்டனர். 

அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதியினால் 100 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.                 

மைத்திரியின் பௌத்த மேலாதிக்க முயற்சிகளுக்கு பாராட்டு கிடைச்சிருக்கு. அதன் மூலம் வடக்கு கிழக்கில் மைத்திரியின் மதவாத திருகுதாளங்கள் வெளிப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.