Jump to content

யாழ். அசோகா ஹோட்டலில் நடந்த படுகொலைகள் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்


Recommended Posts

தமது பிள்ளைகளை கொண்டு சென்று விட்டு தற்போது இல்லை என கூறுகிறார் வரதராஜபெருமாள்.1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமற் போயினர்.

அசோகா ஹோட்டலில் பெருமளவில் கொலைகள் நடந்தன. அவர்களின் குழு மண்டையன் குழு எனவும் அழைக்கப்பட்டனர். உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணையை பற்றி பயப்படுகிறார். ஏனெனில் அவரும் அவரை சார்ந்தவர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச சிறைக்கு செல்ல நேரிடும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கோத்தபாயவுக்கு எந்தவித புரிந்துணர்வும் இல்லாமலேயே நாம் ஆதரவு கொடுத்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு சாத்தியமே இல்லை.தான் துப்பாக்கி சூடு பயிற்சியும் எடுக்கவில்லை. தனக்கு சுடவும் தெரியாது. என்கிறார் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்.

ஐபிசி தமிழ் ஊடறுப்பு நிகழ்விற்கு வருகை தந்து அவர் பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.அதனை நீங்களும் பாருங்கள் நேயர்களே

https://www.ibctamil.com/srilanka/80/131156?ref=rightsidebar

Link to comment
Share on other sites

இந்திய அரச பயங்கரவாதிகள் சீன சார்புடைய மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியான கோட்டாபய தேர்தலில் வென்றால் அவரை கட்டுப்படுத்த முடியும் என்ற நப்பாசையில் தமது கைக்கூலிகளிகள் ஒருவரான வஞ்சகர் வரதராஜபெருமாளை கோட்டாபய கூட்டில் இறங்கியுள்ளது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தான் முதன்முதலில்.. விச ஊசி ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.. ராஜீவின் ஹிந்திய இராணுவப் படுகொலையாளர்கள். 

இந்த விச ஊசி ஏற்றப்பட்ட பலர்.. எமக்கு தெரிந்த அண்ணாக்கள் உட்பட.. இரத்தப் புற்றுநோய்க்கு ஆளாகி.. குருதி மாற்றுச் சிகிச்சைக்கு முகம் கொடுத்தனர். 

முன்னர் இரவில்.. இந்த விடுதிப் பக்கம் போக முடியாது. ஒரே அலறல் சத்தம் கேட்கும். 

இந்த சித்திரவதை முகாமை நடத்திய ஈபிஆர் எல் எவ் ஒட்டுக்குழு கும்பலைச் சேர்ந்தோர் இப்போது சுறாமீன் புகழ் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி.. கோத்தாவுக்கு வக்காளத்து வாங்கித் திரிகின்றனர்.

இனம் இனத்தோடு சேர்கிறது. ஒன்றை இன்னொன்று முதுகு சொறிய. 

Link to comment
Share on other sites

Iஎனது நண்பரின் அனுபவம் இது. 

யாழ் நகரின்  புறநகர் பகுதி ஒன்றிலிருந்த சன சமூக விளையாட்டு மைதானத்தில் வைத்து எனது நண்பருடன் பலர் தடுத்து வைக்கப்பட்டு வாகனமொன்றில் ஏற்றி யாழ் அசோகா விடுதிக்கு முதலில் கொண்டு சென்றனர்.  பலவிதமான விசாரணைகளின் பின்னர் அல்லைப்பிட்டி (அல்லது வேலணை ) கொண்டுசெல்லப்பட்டு மிகக் கடுமையான காவலுடன்  ஆயுதப்  பயிட்சி ஆரம்பமானது.  குறிப்பிட்ட காலாத்தின் நாட்களின் பின்னர் காவல் குறைந்து போனது.  பின்னர் ஒர் நாள் அதிகாலை,  சில கட்டாயமாக பிடித்து பயிட்சி அளிக்கப்பட சிலர் தொப்பியோடி இருந்தனர்.  ஆனால் மறுநாள் தப்போயோடியவர்கள் மீண்டும் பிடித்து வரப்பட்டு மரங்களில்  கட்டிவைக்கப்பட்டு மற்றவர்களின் முன்னால் அடித்தே கொலை செய்யப்பட்டார்கள்.  (இவர்களிற்கு ஒர் எச்சரிக்கையாக )

(உண்மையில் இதனை என்னால் முழுமையாக கூறமுடியவில்லை,  மன்னிக்கவும்)

நண்பரும் வேறுசிலருடன் ஓர்நாள் அதிகாலை வேலணை  கடற்கரை ஊடாக தப்பி ஓடுகையில் மீனவர்களால் மீட்கப்பட்டு யாழ் மணியம்தோட்டம் கடற்கரையில் இறக்கிவிடப்பட்டதாக கூறினார்.  

இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்தவரை,   அண்மையில் கனடாவில் தான் நேரில் கண்டதாக கூறினார்.  

எல்லாமே எமதினத்தின் ரத்த வரலாற்றின் ஒர் அங்கம்.😭.............😡!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்... சொல்ல, வார்த்தைகள் வரவில்லை.
----- 
---
----
எம், இனத்தின்.... சாபக் கேடு.

Link to comment
Share on other sites

கோத்தாவோட கூட்டு வைச்ச வரதருக்கு ஏதாவது கிடைக்குமா?
அல்லது கோத்தா தூக்கி வீசிடுவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

கோத்தாவோட கூட்டு வைச்ச வரதருக்கு ஏதாவது கிடைக்குமா?
அல்லது கோத்தா தூக்கி வீசிடுவாரா?

தமிழ் மக்கள் டக்கி.. உவர்.. கருணா கும்மான எல்லாருக்கும் நல்ல பதில் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள்.. கோத்தாவை தமக்கான சனாதிபதியல்ல என்பதை தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

எனி டக்கி.. வரதர்... கருணா கும்மான் ஆகியோர் அம்பாந்தோட்டைக்குப் போய் சிங்களவர்களுக்கு அரசியல் செய்யட்டும். 

கோத்தா சனாதிபதியானாலும்.. நடப்பு பாராளுமன்றத்தில் அவரின் கட்சிக்குப் பெரும்பான்மை கிடையாது. இவர் எதிர்பார்க்கும் அமைச்சுப் பிச்சைகளும் உடனடியாகக் கிடைக்க வாய்ப்பில்லை.

எனி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு.. தேர்தல் வந்து.. அதில் தமிழ் மக்கள் வாக்குப்போட்டு வென்று.. அமைச்சர்கள்.. பிச்சை வாங்கனும் என்றால்.. எல்லாம் உடனடிச் சாத்தியம் இல்லை. பொறுத்திருந்து பார்ப்பம்.

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் டக்கி.. உவர்.. கருணா கும்மான எல்லாருக்கும் நல்ல பதில் சொல்லி இருக்கிறார்கள்.

டக்கிக்கு ஒரு முக்கியமான அமைச்சர் பதவி தாறன் என்டு கோத்தா முன்னமே வாக்களிச்சு இருந்தார். தேர்தலின் பின்னர் முக்கியமில்லாத இந்து விவகாரங்கள் அமைச்சு கிடைக்கலாம்.

 

Link to comment
Share on other sites

20 minutes ago, Rajesh said:

டக்கிக்கு ஒரு முக்கியமான அமைச்சர் பதவி தாறன் என்டு கோத்தா முன்னமே வாக்களிச்சு இருந்தார்.

dogs-goggles-1531907629.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

கோத்தாவோட கூட்டு வைச்ச வரதருக்கு ஏதாவது கிடைக்குமா?
அல்லது கோத்தா தூக்கி வீசிடுவாரா?

சர்வதேசத்தை ஏமாற்ற இவர்கள்தான் தமிழரின் தலைமைகள். பலர் எம்மோடு இருந்து ஒத்துழைப்பு வழங்குகிறார்கள், எங்களின் தீர்வுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பிரிவினைவாதிகள் என்று படம்  காட்ட தங்களின் காலடியில் வைத்திருப்பார்கள். அதுவே தாம் செய்த பாய்க்கியம் என்று இதுகளும் புளகாங்கிதமாய் வாலாட்டிக் கொண்டு இருக்குங்கள். வேறு என்னதான் இவர்களால் செய்ய முடியும்? சர்வதேசத்துக்கு இது விளங்காதது அல்ல. ஆனால் விளங்காத மாதிரி அதுவும் நடித்து விட்டுப்போகும்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.