Jump to content

ஒரு தகவல் கொடுத்தால் முகநூல் தடை அமுலுக்கு வரும்- தே.ஆ. தலைவர்


Recommended Posts

 

 

ஒரு தகவல் கொடுத்தால் முகநூல் தடை அமுலுக்கு வரும்- தே.ஆ. தலைவர்

 
 
1573627739-election-commisn-2

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார சூன்ய காலத்தில முகநூல் பக்கங்களில் பதிவுகளை இடுபவர்களையும், அந்தப் பதவுகளை வேறு முகநூல்களுக்கு பரிமாறிக் கொள்பவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் பிரசாரம் சூன்ய காலப் பகுதியில் இணையத்தளமொன்றின் கீழ் செயற்படும் முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பாடல் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த முகநூல் செய்தியை ஏனைய முகநூல் உரிமையாளர்கள் பரிமாற்றம் செய்து பிரசார நடவடிக்கை ஈடுபட்டு வருவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக தேர்தல் பிரசார சூன்ய காலத்தில் முகநூல் பக்களை நடாத்தும் பெரியளவிலான குழுவொன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது முகநூல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்,

“ முகநூல் பக்கங்களைத் தடை செய்வது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லையெனவும், அதனை முடிந்தளவு செய்யாமலேயே முயற்சிப்பதாகவும் கூறினார்.

அத்துடன், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு தான் ஒரு அறிவித்தல் கொடுத்தால் போதும், அதனை உடனே தடை செய்ய அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு தடை செய்தாலும், வி.பி.என். மூலம் அதனைச் செயற்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

https://www.virakesari.lk/article/68964

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

அவ்வாறு தடை செய்தாலும், வி.பி.என். மூலம் அதனைச் செயற்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

தடை செய்தால் வி.பி.என். மூலம் தடையை எதிர்த்து செயல்படலாம் என அவரே கூறிவிட்டார். ரொம்ப நல்ல மனுசன் 🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.