Jump to content

Recommended Posts

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம், 1000 நாட்களை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதில் கலந்துகொண்டோர் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியமை அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியது.

இவ்விடயம் தொடர்பாக  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில்  உணவு தவிர்க்கும்  1000ஆவது நாளை  இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம்.

இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி  வருகின்றனர்.

இலங்கை  இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கள அமைச்சர்களை நாங்கள் சந்தித்து கலந்துரையாடினோம். ஆனால் எந்ததொரு பயனும் கிடைக்கவில்லை.

எங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட எமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

மேலும் அவர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, உள்ளூர் விசாரணைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள், உள்ளூர் விசாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா.தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான  பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.

இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி ஜெயவனிதாவின் மகள், 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஏனைய சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.

1976- 1983க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இங்கும் தமிழ் குழந்தைகள் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும், மீனவர் வேலைக்கும், மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

2009ஆம் ஆண்டில் 25,000க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலங்கை போர்க்குற்றத்தை உலகம் செர்பியாவுக்கு செய்ததைப் போல சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதே ஒரே நடவடிக்கை. போஸ்னியா மற்றும் கொசோவோவில் உள்ள போர்க் குற்றவாளிகள் அனைவரையும் ஐ.சி.சி.யால் பிடிக்க முடிந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே போசினிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை.

இறுதியில், போஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது. இதனால் செர்பியர்கள், போஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது .

போஸ்னிய கூட்டாட்சி தீர்வு போன்ற அதே அரசியல் தீர்வு தமிழர்களுக்கும் தேவை. இதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா மட்டுமே கொண்டு வர முடியும்.

போஸ்னிய பாணியிலான கூட்டாட்சியினை இலங்கை ஏற்க மறுத்தால், ஐ.நா.கண்காணிக்கும் சர்வசன வாக்கெடுப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும்.

எங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்.

எங்கள் போராட்டத்தின் 2000ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

p1.jpg

p3.jpg

p4.jpg

 

http://athavannews.com/காணாமல்-போன-உறவுகளின்-போ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரை அடிமையாக விற்றுவிட்டனர் – இராஜ்குமார்

இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தச் செயல்பாட்டின் போது, ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் மற்றும் சிங்கள அமைச்சர்களை நாங்கள் சந்தித்தோம். எதுவும் பலனளிக்கவில்லை.

இவ்வாறு, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் இராஜ்குமார் தெரிவித்தார். அவர்களது போராட்டம் இன்று 1000 நாட்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு இடம்பெற்ற போராட்டத்திலேயே இதனை தெரிவித்தார். மேலும்,

எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை விடுவிப்பதற்கான சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்ளை கண்டுபிடிக்க கடினமாக உழைப்போம் என்று 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சம்பந்தன் தன்னிடம் சாவி இல்லை என்று சொல்வதைக் கேட்பது வெட்கக்கேடானது.

எங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, உள்ளூர் விசாரணைக்கு இலங்கையை கொண்டு வந்தனர், பின்னர் அவர்கள் உள்ளூர் விசாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். காணாமல் ஆக்கப்பட்ட எம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.

1976 – 1983க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும், மீனவ வேலைக்கும், மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 25,000க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க போசினிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை. இறுதியில், போஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது, இதனால் செர்பியர்கள், போஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது.

எங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம். எங்கள் போராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம் என்று நம்புகிறோம் – என்றார்.

https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்டோரை-அட/

Link to comment
Share on other sites

25 minutes ago, போல் said:

இவ்விடயம் தொடர்பாக  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில்  உணவு தவிர்க்கும்  1000ஆவது நாளை  இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம்.

இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி  வருகின்றனர்.

இலங்கை  இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

உண்மையான பயங்கரவாதிகள் யார் என ஆயிரம் நாளாக உலகத்திற்கு காட்டிவரும் உறவுகள் !

சனநாயகம் என்ற சேலையை கட்டி அதன் பின்னால் மறைந்திருக்கும் சிங்கள, ஐ.நா. மற்றும் சர்வதேச பயங்கரவாத அரசுகள் வெட்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

 

 

Beore reach 2000th day of our struggle, hope to find our missing people, and find a permanent protection and self rule.


2000 வது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து, பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுப்போம். 

Link to comment
Share on other sites

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டம் 1000 நாட்களை கடந்தும் எந்த ஒரு நீதியும் கிடைக்காத நிலையில் இன்றும் மழை வெயில் என்றும் பாராது வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் உலக நாடுகளும் சர்வதேச அரசும் இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது.

புலம்பெயர் மண்ணில் இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் நோக்குடனும் கைகொடுக்கும் நோக்குடனும் புலம்பெயர் மண்ணில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளால் நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து மக்களவையின் ஏற்பாட்டில் 16-11-2019 சனிக்கிழமை 12.00 மணிக்கு அம்ஸ்ரடாம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக 1000 ஆவது நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
கடும் குளிரிற்கு மத்தியிலும் தமிழ் உறவுகளிற்கு தாயகத்தில் இடம்பெற்ற இன்னல்களையும் இன்னமும் நீதி கிடைக்காது அல்லல்படும் அவலத்தையும் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் வெளிநாட்டு மக்களிற்கு விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நடக்கின்றனர், கூடைப்பந்து அரங்கம் மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்

Link to comment
Share on other sites

On 11/15/2019 at 6:47 AM, பிழம்பு said:

எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில்  விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.

இவர்கள் உண்மையிலேயே இவ்வாறு நம்பினால் இவர்கள் செய்ய வேண்டியதும் செய்திருக்க வேண்டியதும் முற்றிலும் வேறானவை.

தமது பிள்ளைகளை கண்டுபிடிக்க, இவர்கள் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை புலம்பெயர்ந்த தமிழரின் பண ஆதரவுடனும், இலங்கையில் வேலை வாய்ப்பு தேடும் முன்னாள் புலனாய்வாளர் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பணத்துக்கு பெறத்தக்க அறிவு, தொழில் செயற்பாட்டுடனும் நிறுவி இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல், ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக தங்கள் பிள்ளைகளை மேற்படி நிறுவனத்தின் ஊடக ஒவ்வொருவராக முழுமையாக கவனம் செலுத்தி கண்டுபிடித்து இருக்கலாம். இப்படித்தான் யூதர்கள் இரெண்டாம் உலகயுத்தத்தின் பின் தம் உறவுகளை தேடினார்கள். இனியும் இவர்கள் இதை செய்யலாம். தமிழ் தேசிய அரசியலும் சிவாஜிலிங்கமும் இவர்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கும் ஆற்றல் அற்றவை.

Link to comment
Share on other sites

6 minutes ago, Jude said:

இவர்கள் உண்மையிலேயே இவ்வாறு நம்பினால் இவர்கள் செய்ய வேண்டியதும் செய்திருக்க வேண்டியதும் முற்றிலும் வேறானவை.

தமது பிள்ளைகளை கண்டுபிடிக்க, இவர்கள் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை புலம்பெயர்ந்த தமிழரின் பண ஆதரவுடனும், இலங்கையில் வேலை வாய்ப்பு தேடும் முன்னாள் புலனாய்வாளர் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பணத்துக்கு பெறத்தக்க அறிவு, தொழில் செயற்பாட்டுடனும் நிறுவி இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல், ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக தங்கள் பிள்ளைகளை மேற்படி நிறுவனத்தின் ஊடக ஒவ்வொருவராக முழுமையாக கவனம் செலுத்தி கண்டுபிடித்து இருக்கலாம். இப்படித்தான் யூதர்கள் இரெண்டாம் உலகயுத்தத்தின் பின் தம் உறவுகளை தேடினார்கள். இனியும் இவர்கள் இதை செய்யலாம். தமிழ் தேசிய அரசியலும் சிவாஜிலிங்கமும் இவர்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கும் ஆற்றல் அற்றவை.

சனல் 4 இவ்வாறான ஒரு அணுகுமுறையை கொண்டே ' நோ ப்யர் சோன்' ஒளிப்பதிவை ஒரு முன்னைய சிங்கள இராணுவ வீரனுடன் இருந்து பெற்றது. அது உட்பட பல ஆவணங்களை ஆதாரபூர்வமாக ஐ.நா., மனித உரிமைகளை பேணும் குழுக்கள், அரச தலைவர்களுக்கு காட்டப்பட்டு இருந்தது.  

யூதர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று தமிழரிடம் இல்லை.  

Link to comment
Share on other sites

ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் !

 

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது.

DSC_1027.JPG

இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார்,

சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும்  1000 ஆவது நாளை  இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி  வருகின்றனர்.

இலங்கை  இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தச் செயல்பாட்டின் போது, ஜனாதிபதி சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கள அமைச்சர்களுடன் நாங்கள் சந்தித்தோம். சந்திப்பு எதுவும் பலனளிக்கவில்லை.

DSC_1060.JPG

எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக “காணாமல் ஆக்கப்பட்ட ” தமிழர்களை விடுவிப்பதற்கான சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

DSC_1062_1.JPG

காணாமல் ஆக்கப்பட்டவர்ளை கண்டுபிடிப்பதற்கு கடினமாக உழைப்போம் என்று 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சம்பந்தன் தன்னிடம் சாவி இல்லை என்று சொல்வதைக் கேட்பது வெட்கக்கேடானது.

DSC_1063_1.JPG

மேலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, உள்ளூர் விசாரணைக்கு இலங்கைக்கு கொண்டு வந்தனர், பின்னர் அவர்கள் உள்ளூர் விசாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர். இது ஒரு சிங்களவரிடம் விலை போனவர்களின்   தந்திரம்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

DSC_1068_1.JPG

காணாமல் ஆக்கப்பட்ட நம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன.

DSC_1072_1.JPG

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.

1976 – 1983 க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும் , மீனவ வேலைக்கும் , மற்றவர்கள் கூலி  தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டில் 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே போசினிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை.

இறுதியில், போஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது, இதனால் செர்பியர்கள், போஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது .

எங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்.

எங்கள் போராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம்  என்று நம்புகிறோம். என்றார்.

http://eelamurasu.com.au/?p=23075&fbclid=IwAR1ZMJLo58V-yVR5RQBpllU5IlN3bANHToa0cQkz9wVT3Cs2M-6s3wFXxRs

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.