Jump to content

'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள்

ரன்ஜன் அருண் பிரசாத்கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக
வரதராஜா பெருமாள்

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது போனதாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்க இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிய போதிலும், அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் அதற்கு தடையாக செயற்பட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு தான் ஒருபோதும் இந்தியாவை குறைக்கூற போவதில்லை என தெரிவித்த வரதராஜ பெருமாள், வி.பி.சிங் மற்றும் கருணாநிதி ஆகியோரையே தான் குறைக்கூறுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையுடன் ராஜீவ் காந்தி ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு, ராஜீவ் காந்தி வைத்த கையொப்பத்தை, வி.பி.சிங் மதிக்காது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மு. கருணாநிதி,படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மற்றும் விடுதலைப் புலிகள் இணைவதற்கும் ஆதரவாக செயற்பட்டாரே தவிர, ஈழத் தமிழர்கள் விடயத்தில் அவர் அந்த சந்தர்ப்பத்தில் அக்கறையுடன் செயற்படவில்லை என அவர் கூறினார்.

சிங்களத் தலைவர்கள், இந்திய மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் இணைந்து செயற்பட்ட நிலையிலேயே, தனக்கு வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை நடத்திச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், ஒற்றை ஆட்சிக்குள் அதிகார பகிர்வு என்ற விடயம் உள்ளடங்களாக தாம் அந்த சந்தர்ப்பத்தில் 19 அம்சக் கோரிக்கைகளை சிங்களத் தலைவர்களிடம் முன்வைத்த போதிலும், அவர்கள் அதனை புறக்கணித்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாநிதி மற்றும் சிங்களத் தலைவர்கள் ஒன்றாக இணைந்து சரியாக செயற்பட்டிருக்கும் பட்சத்தில், 1990ஆம் ஆண்டு காலத்திற்கு பிறகு இடம்பெற்ற பாரிய அழிவை தடுத்து நிறுத்தியிருக்கக்கூடும் என வரதராஜா பெருமாள் கூறுகின்றார்.

1990ஆம் ஆண்டே தமிழர் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கும் பட்சத்தில், அதிகாரம் மிக்க மாகாண சபை முறைமையை பெற்றிருக்க முடியும் எனவும், பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வரதராஜ பெருமாள் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றினாரா?

வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைக்கும் நோக்குடன் வரதராஜ பெருமாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் அவரிடம் வினவியது.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தான் எதிரானவர் என்ற நிலையில், எவ்வாறு அவர்களின் கொடியை தான் ஏற்றியிருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

வடக்கு மாகாண சபையின் உத்தியோகப்பூர்வமான கொடியாக காணப்படுகின்ற கொடியே, வடக்கு, கிழக்கு மாகாண சபையின் கொடியாக அப்போது காணப்பட்டதாகவும், அந்த கொடியையே தான் ஏற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு கிடையாது.

இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த இந்தியா ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை என வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

ராஜீவ் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் இலங்கை பிரிவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்படும் கருத்தை முற்றாக நிராகரித்த வரதராஜ பெருமாள், இலங்கை தரப்பினரே இந்தியாவிடம் சென்று பயிற்சிகளை பெற்று வந்ததாகவும் நினைவுட்டினார்.

பிரபாகரன் உயிரிழந்தமையில் பெருமை கிடையாது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் உயிரிழந்து, தன்னுடன் சார்ந்தவர்களையும் பலி கொடுத்து, தமிழ் மக்களின் உயிர்களையும் பலியாக்கி, தமிழர்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்தமையில் எந்தவித பெருமையும் கிடையாது என வராராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்படத்தின் காப்புரிமைSTR

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த உங்களை மக்கள் எவ்வாறு நம்புவது என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தலைவர் என்பவன் மக்களுக்காக கடமையை பொறுப்பேற்று செய்பவனே தவிர, அதனை தவரவிடுபவன் அல்லவென அவர் கூறினார்.

தான் தமிழ் மக்களுக்காக கையில் எடுத்த பொறுப்பை நிறைவேற்றவே இந்த மண்ணில் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான முயற்சிகளையே தான் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைவதற்கு யார் உதவி வழங்க வேண்டும்?

கிழக்கு மாகாண மக்களின் பெரும்பான்மை விருப்பத்தை வெற்றிக் கொள்ளுவோமாக இருந்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சாத்தியம் காணப்படுவதாக வரதராஜ பெருமாள் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

வடக்கு, கிழக்கு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

மாகாண சபை அதிகாரங்கள் வெற்றிக் கொள்ளப்பட்டு, மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தினால் அதிகாரங்கள் பெரும்பாலும் கிடைத்து விடும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

அதைவிடுத்து, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரே தடவையில் வெற்றிக் கொள்வது என்பது சிரமமான விடயம் என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கூறுகின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50436748

இன்னும் என்னவெல்லாம் கேக்கவேண்டி இருக்குமோ?!

Link to comment
Share on other sites

இந்திய அரசின் கைக்கூலியாக மிக மிக நீண்டகாலமாக இருந்துவார வரதராசர் இப்பிடிப்பட்ட பொய்களை காலங் காலமாக அவிழ்த்துவிட்டு கொண்டிருக்கிறார். கைக்கூலி வரதராசர் புளுகும் மாகாணசபைகள் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் விளைவாகவே திணிக்கப்பட்ட ஒரு அரைகுறைத் தீர்வு என்பதை மதிமயங்கி உளறும் வரரதராசரின் களிமண் மூளைக்கு நினைவிருக்க முடியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வெத்து வேட்டு. உப்பிடி கொஞ்சத்தை வைச்சு சர்வதேசத்தை ஏமாத்தலாம் எண்டு சிங்களம் அப்பப்ப வெளியில கொண்டுவந்து ஏதாவது சொல்ல வைத்தவுடன், அவர்களுக்கு ஏற்றமாதிரி எதையாவது உளறிக்கொட்ட வேண்டியதுதான். ஆட்சி மாற மற்றவர் கூப்பிட்டவுடன் அவர்களுக்கும் வாலாட்ட வேண்டியது. கொள்கை இல்லாமல் போராட வெளிக்கிட்டு தன்மானத்தோடு வாழவும் முடியாமல் எடுபிடி வேலை. அதற்குள் அறிக்கை, பேட்டி ஒரு கேடு. அத்தோடு காணாமல்ப் போய்விடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் எதனையும் பெற்றுக் கொடுக்கக் கூடாது என்று செயற்பட்டவர்கள்.. அவரின் பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

இவர் எல்லாம் ஹிந்திய எஜமானர்களுக்காக கூவுவது வியப்பே இல்லை. பயந்தோடி... எல்லாம் தலைவரைப் பற்றிப் பேசுவது கேவலம்.. தமிழுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளாக எங்க  பார்த்தாலும்

வெறி  நாய்களின்  குலைச்சல் தாங்க  முடியல....

சந்திரன் இருந்தாலும்  குலைக்குதுகள்

மறைஞ்சாலும் குலைக்குதுகள்

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கு நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

சாத்தான் ஓதிய வேதத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போர் மவுனிக்கும் மட்டும்  தண்ணியில்லா பாலைவனத்தில் ஒளிச்சு கிடந்தவனெல்லாம் கதைக்க வெளிக்கிட்டு விட்டாங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக வாழ்பவர்கள் அனைவரும் போராளிகள். வரதராஜப்பெருமாள் சொல்லிக் கொள்வதைப் போல், அவரும் போராளியென்றால் மாற்றுக் கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் கொண்ட போராளிகளையும் மதிக்கத் தெரிய வேண்டும். போராளிகள் அனைவருக்கும் நோக்கம் ஒன்றுதானே ! வெல்வது மட்டும்தான் போராட்டம் என்றில்லை. தோற்றாலும் போராட்டம்தான். மற்றபடி மக்களைப் பலி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் போரை முன்னெடுப்பதில்லை. விளைவுகளைக் களமும் காலமும் தீர்மானிக்கின்றன. பிரபாகரன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராளி. அவரைப் போன்றோர் களத்தில் வீழ்வதில்லை ; துரோகத்திலேயே வீழ்கின்றனர்.

Link to comment
Share on other sites

1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

மக்களுக்காக வாழ்பவர்கள் அனைவரும் போராளிகள். வரதராஜப்பெருமாள் சொல்லிக் கொள்வதைப் போல், அவரும் போராளியென்றால் மாற்றுக் கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் கொண்ட போராளிகளையும் மதிக்கத் தெரிய வேண்டும். போராளிகள் அனைவருக்கும் நோக்கம் ஒன்றுதானே ! வெல்வது மட்டும்தான் போராட்டம் என்றில்லை. தோற்றாலும் போராட்டம்தான். மற்றபடி மக்களைப் பலி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் போரை முன்னெடுப்பதில்லை. விளைவுகளைக் களமும் காலமும் தீர்மானிக்கின்றன. பிரபாகரன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராளி. அவரைப் போன்றோர் களத்தில் வீழ்வதில்லை ; துரோகத்திலேயே வீழ்கின்றனர்.

துரோகம் தமிழர் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் உள்ளதோ ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் கோட்டவை ஆதரித்த வரதருக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை அவர் ஒரு செல்லாகாசு என்பதையும் இவர் சொல்வதை எல்லாம் தமிழர் வீட்டில் வளர்க்கும் நாய் கூட கேட்காது என்பதையும் குறிபுணர்த்தியுள்ளார்கள்.

11 hours ago, Paanch said:

சாத்தான் ஓதிய வேதத்திலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

இந்த சமயத்தில் கூட்டமைப்பு யாரின் நேரடி வழிநடத்தலில், கண்காணிப்பில் இருந்தது என்பதும் கவனிக்க வேண்டியதே.

Link to comment
Share on other sites

35 minutes ago, goshan_che said:

இந்த சமயத்தில் கூட்டமைப்பு யாரின் நேரடி வழிநடத்தலில், கண்காணிப்பில் இருந்தது என்பதும் கவனிக்க வேண்டியதே.

அந்த சமயத்தில் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கவில்லை!

இல்லாததை யாராலும் வழிநடத்தவும் முடியாது!

இப்படித்தான் பலர் பலரை ஏமாற்ற முனைகின்றனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, போல் said:

அந்த சமயத்தில் கூட்டமைப்பு என்று ஒன்று இருக்கவில்லை!

இல்லாததை யாராலும் வழிநடத்தவும் முடியாது!

இப்படித்தான் பலர் பலரை ஏமாற்ற முனைகின்றனர்!

இலங்கையின் உச்ச நீதி மன்றம் வடக்கு-கிழக்கு இணைப்பு செல்லாது எனக்கூறி பிரித்த நாள் 16/10/2006.

அப்போ கூட்டமைப்பு இருந்தது. 

மற்றயவர்களை ஏமாற்று பேர்வழிகள் என தூற்றும் முதல். எமக்கு போதிய விளக்கம் இருக்கிறதா என ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்தால் நல்லம்.

 

Link to comment
Share on other sites

14 minutes ago, goshan_che said:

இலங்கையின் உச்ச நீதி மன்றம் வடக்கு-கிழக்கு இணைப்பு செல்லாது எனக்கூறி பிரித்த நாள் 16/10/2006.

அப்போ கூட்டமைப்பு இருந்தது. 

மற்றயவர்களை ஏமாற்று பேர்வழிகள் என தூற்றும் முதல். எமக்கு போதிய விளக்கம் இருக்கிறதா என ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்தால் நல்லம்.

சரி ஏற்றுக் கொள்கிறேன்!

 

Link to comment
Share on other sites

சுமந்திரன் வழக்காடி தோற்ற வழக்குகளில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.