Jump to content

The Lamp Of Truth - பொய்யா விளக்கு - London, Montreal - Today (Nov 16) at 3 PM, Ottawa Nov 17 at 3 PM


Recommended Posts

பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம்.  அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது  இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல 
முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்..  
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

 
 
 
Ottawa_Poster1.jpg

 

UzpfSTgyOTU2NTU2MToxMDE2MjQyMTc5MTU5NTU2

பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser
பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா
Singer: Bamba Bakya
இசை : ஜிதின் ரோஷன்
Music: Jiththin Roshan
வரிகள்: சுவாமிநாதன், தனேஸ் கோபால்
Lyricists: Swaminathan, Thanesh Gopal
படம்: பொய்யா விளக்கு
Movie: The Lamp of Truth

Link to comment
Share on other sites

ஒட்டாவா திரையரங்கு பொய்யாவிளக்கு ஆதரவாளர்களால் நிறைந்ததால், வந்தவர்களை திருப்பியனுப்பாமல் இரண்டாவது திரையரங்கையும் ஒருங்கமைப்பாளர்களால் உடனடியாக ஏற்பாடு செய்தனர். இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜாவின் வாழ்வில் 2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து இயக்குனர் தனேஷ் இயக்கிய பொய்யா விளக்கு பார்த்தவர்களின் பலத்த ஆதரவை பெற்றது.

ஈழ தமிழர் இனப்படுகொலை வரலாற்றை வைத்தியர் வரதராஜாவின் கதை ஊடாக உலகத்திற்கு சொல்லும் திரைப்படமாக இது இருக்கும். யதார்த்தமான நடிப்பில், இனிய பாடல்களுடன், வழமையான தமிழ் படங்களில் வரும் வன்முறை காட்சிகள் அளவுக்கு கூட இல்லாமல் சிறப்பாக படமாக்க பட்டுள்ளதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர். குடும்பத்துடன் எதிர்கால தலைமுறை தமிழர்களும் தமிழர் வரலாற்றை அறிய இந்த திரைப்படம் வழிசெய்கிறது. வைத்தியர் வரதராஜா இந்த படத்தில் தன பாத்திரத்தை தானே ஏற்று நடித்ததை இளையோர் முதல் முதியோர் வரை நன்றியுடன் பாராட்டினர்.

மிக ஆழமான தமிழர்களின் உணர்வு ரீதியான வரலாற்றை சிறப்பாக திரைக்கதை ஊடாக திரையில் கொண்டு வந்த தனேஷ் பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டினை பெற்றார்..
பொய்யாவிளக்கு ஒட்டாவா, மொன்றியல் கனடா, லண்டன் ஐக்கிய இராச்சியம் ஆகிய நகரங்களில் வாரஇறுதியில் ஆதரவாளர்களுக்கான பிரத்தியேக காட்சிகளாக திரையிடப்பட்டது. இந்த மாத இறுதியில் டொரோண்டோவில் திரையிடப்படுகிறது, அடுத்த மாதத்தில் அமெரிக்காவிலும் பின்னர் ஏனைய உலக நாடுகளின் நகரங்களிலும் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோருக்கு திரைக்குழுவின் நன்றிகள்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், உட்புறம்
 
?__tn__=kC-R&eid=ARCfqz3L7VE2r9xKK_K_Hq5
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.