Jump to content

தேர்தலை புறக்கணிக்க மறுத்த யாழ் மக்கள்! த.தே.ம.முன்னணியின் பதில் என்ன?


Recommended Posts

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள்.

ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள்.

த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகின்றார்கள் யாழ் ஊடகவியலாளர்கள்.

யாழில் சூடுபிடித்த வாக்கு பதிவு! தமிழ் மக்களின் மனங்கள் என்ன சொல்கின்றது...?

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவானோர் வாக்களித்துள்ளனர் என இதுவரையில் கிடைத்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவற்றை எண்ணும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் யாழில் இருந்து மக்களின் மனங்கள் என்ன சொல்கின்றது? குறிப்பாக இந்த தேர்தலில் கடந்த ஜனாதிபதி தேர்தலை விட வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமிழ் பேசும் மக்கள் வாக்களித்து அசத்தியுள்ளனர் என இதுவரை கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் யாழில் இருந்து தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்துக்கள் காணொளி வடிவில்

https://www.ibctamil.com/srilanka/80/131356

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கூட்டமைப்பின்ர சொல்லுக்கும் போடேல, முன்னணியின் சொல்லையும் கேக்கேல. தங்களுக்குள் பேசி பேசியே அன்னப்பட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.
நாளை தெரிய வரும் தானே!

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைகளாக நிராகரிக்கப்பட்ட குடும்ப அரசியலை செய்து வருபவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவருடைய முக்கியமான பிரச்சினை தன்னை போன்ற இன்னும் ஒரு கொழும்பு சட்டத்தரணியான சுமேந்திரன் மீதான பொறாமை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இங்கிலாந்தில் சட்டம் படித்தவர். சுமேந்திரன் கொழும்பில் படித்தவர். சட்டத்துறையிலும், அரசியலிலும் சுமேந்தரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஓரம் கட்டிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மக்கள் கூட்டமைப்பின்ர சொல்லுக்கும் போடேல, முன்னணியின் சொல்லையும் கேக்கேல. தங்களுக்குள் பேசி பேசியே அன்னப்பட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.
நாளை தெரிய வரும் தானே!

இது தான் உண்மை.மக்கள் தமிழ் அரசியல் வாதிகளை னுறக்கனிக்க தொடங்கி வெகு நாளாச்சு.மற்றும்பn வெற்றி தோல்வி வேறு விடையம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி உரிமை தமிழ் வடக்குக் கிழக்கு இணைப்பு போர்க்குற்றம் எனச் சொல்லி அரசியல் செய்வதைவிட அரசாங்கத்துடன் சேர்ந்து ஏதாவது பதவியப்பெற்று காசு சம்பாதிக்கலாம். அல்லது இருக்கிற காசு போதும் என நினைத்து சேர் பொன் அருனாசலம் அவர்களது மைத்துணர் வீடு (இது முன்பு இப்போ கஜேந்திரகுமார் விலைக்கு வாங்கிவிட்டினம்ந நினைக்கிறன்)  குயீன் வீதி வீட்டில் காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு ஜாலியாய் வாழ்நாளைப்போக்கலாம்.

குதிரைக்கஜன் அரசாங்கத்தில ஆரையாவது பிடித்து மத்திய வங்கியில் வேலை வாங்கி, இனிவரும் காலத்தைக் கொழும்பில கழிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களே முக்கினது போதும் அவையவை சோலிகளைப்பாருங்கோ. தாயகத் தமிழர்களுக்கு எங்களைவிட நிறையவே அரசியல் தெரியும். 

விருப்பமெண்டால் கார்த்திகை மாதத்தில் வரும் மாவீரர்தினம் திலீபன் நினைவுதினம் அன்னைபூபதி தினம் இவைகளை எதுவித எதிர்பார்ப்பும் இல்லாது கொண்டாடிவிட்டு உங்கட கடமை முடிந்தது என அடுத்த அலுவலைப்பார்க்கவும்.

அப்படியிருந்தாலும் புலம்பெயர் தேசங்களில் நாம் சும்மா எல்லாம் விட முடியாது எனக்கூறி சிலர் கிச்சுக் கிச்சு மூட்டுவினம் நல்லா பகிடி விடுகினம் எனச்சொல்லிவிட்டு விலத்திப்போயிடுங்கோ.

Link to comment
Share on other sites

10 hours ago, Elugnajiru said:

குதிரைக்கஜன் அரசாங்கத்தில ஆரையாவது பிடித்து மத்திய வங்கியில் வேலை வாங்கி, இனிவரும் காலத்தைக் கொழும்பில கழிக்கலாம்.

குதிரைக் கஜனை நம்ம்பிபி யார் பொறுப்பான வேலை குடுக்கப் போகீனம்?  

குவீன்ஸ் ரோட்டுல கஜேந்திரகுமாரின் தெருப் பிள்ளையாருக்கு பூசை செய்ற வேலை குடுக்கலாம்!

Link to comment
Share on other sites

கஜேந்திரகுமார் இலண்டன் போய்த்தான் தங்களின் தேர்தல் புறக்கணிப்பு வெற்றிகள் பற்றிய அடுத்த அறிவிப்பை விடுவார் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

மொத்த வாக்காளர்கள்: 2,629,080
 
யாழ்ப்பாணம் – 475,176
கிளிநொச்சி – 89,538
மன்னார் – 89,403
வவுனியா – 117,333
முல்லைத்தீவு – 75,383
திருகோணமலை – 281,114
மட்டக்களப்பு – 398,301
அம்பாறை – 503,790
புத்தளம் - 599,042
 

புறக்கணித்த மொத்த வாக்காளர்கள்: 649,004
 
யாழ்ப்பாணம் – 161,560
கிளிநொச்சி – 24,175
மன்னார் – 25,927
வவுனியா – 29,333
முல்லைத்தீவு – 18,092
திருகோணமலை – 47,789
மட்டக்களப்பு – 91,609
அம்பாறை – 100,758
புத்தளம் - 149,761
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:
மொத்த வாக்காளர்கள்: 2,629,080
 
யாழ்ப்பாணம் – 475,176
கிளிநொச்சி – 89,538
மன்னார் – 89,403
வவுனியா – 117,333
முல்லைத்தீவு – 75,383
திருகோணமலை – 281,114
மட்டக்களப்பு – 398,301
அம்பாறை – 503,790
புத்தளம் - 599,042
 

புறக்கணித்த மொத்த வாக்காளர்கள்: 649,004
 
யாழ்ப்பாணம் – 161,560
கிளிநொச்சி – 24,175
மன்னார் – 25,927
வவுனியா – 29,333
முல்லைத்தீவு – 18,092
திருகோணமலை – 47,789
மட்டக்களப்பு – 91,609
அம்பாறை – 100,758
புத்தளம் - 149,761

ஐயா வோட்டுப் போடாதவர் எல்லாம் புறக்கணித்தவர் இல்லை ஐயா.

ஒரு போதும் 100% வாக்கு பதிவாவதில்லை. மிஞ்சி போனால் 85%. 

இதில் வெளிநாட்டில் வாழும் இரட்டை குடியுரிமையாளர், மத்திய கிழக்கில் வேலை செய்பவர், பிற மாவடங்களில் வேலை செய்வோர், சோம்பேறிகள், தேர்தல் அன்று கடும் வயிற்றுப் போக்கால் பாதிப்படைந்தோர் என பலரும் அடங்குவர்.

Link to comment
Share on other sites

On 11/17/2019 at 12:29 PM, Rajesh said:

குதிரைக் கஜனை நம்ம்பிபி யார் பொறுப்பான வேலை குடுக்கப் போகீனம்?  

குவீன்ஸ் ரோட்டுல கஜேந்திரகுமாரின் தெருப் பிள்ளையாருக்கு பூசை செய்ற வேலை குடுக்கலாம்!

கஜேந்திரன் குவீன்ஸ் ரோட்டுல கால்வைக்கவே கஜேந்திரகுமார் விடமாட்டார். 🤣😂🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.