Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • Replies 317
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –

Link to comment
Share on other sites

@DrSJaishankar 

முடிந்தால் இவரை பின்தொடருங்கள், தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

Link to comment
Share on other sites

இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. 

எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.

Ref : வலம்புரி 

Link to comment
Share on other sites

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

Ref : BBC Thamil

 

Link to comment
Share on other sites

On 11/22/2019 at 7:57 AM, ampanai said:

மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும்.

சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம்  ஆரோக்கியமானது இல்லை.   

முக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது.  

ஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்புக் கூத்துக்கள் நடந்தன.

இந்த நாடகத்துக்குள் விழுந்தடித்து குள்ளநரி ரணிலுக்கு முண்டு கொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கூட்டில் இயங்கும் கூத்தமைப்பு மூடர்கள் சிங்கள-பௌத்த கொலைகார அரசின் மீது அதிகரித்துவந்த சர்வதேச நெருக்கடியை குறைப்பதற்கு பெரும் உதவி செய்தனர். கூத்தின் முடிவில் சிங்கள-பௌத்த கொலைகாரர்களான ரணிலும் - கோட்டாபயவும் அலரிமாளிகையில் சந்தித்து சிரித்து மகிழ்ந்திருந்தனர்.

மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு அமைந்த காலத்தில் ஐ.நா. சபையில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஓடியோடி குத்திமுறிந்த சொதப்பல் சுமந்திரன் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு பயங்கரவாதிகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவே உதவினார்.

சம்மந்தனும் போர்க்குற்றவாளிக் கும்பல்களில் ஒன்றான இந்திய அரச  கொலைகாரர்கள் எதிர்நோக்கிய ஆபத்தை அகற்ற திக்கித்திக்கி உழைத்தாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை எடுக்கவில்லை.

எனவே அதே அடிமைச் சேவக மனநிலையுடன் சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை ஆரோக்கியமானது இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வந்து, ஒரு கிழமை ஆகின்றது. 
அதனை... ஊர் புதின, செய்தியில்...
"பின்" பண்ணி விட்டவருக்கு, நன்றிகள்.

விவாதங்களை... நடத்த, வேறு பகுதி  இருக்கும் போது,
ஏன்... இந்த, விளையாட்டு.

Link to comment
Share on other sites

இம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே குறைந்த செல்லுபடியற்ற வாக்குப்பதிவு

(ஆர்.யசி)

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலிலேயே ஆகக் குறைந்த செல்லுபடியற்ற வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்த காரணத்தினால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

எனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387, 951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியது. வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் நோக்குகையில் இது வெறுமனே 0.85 வீதமாகும். 

https://www.virakesari.lk/article/69614

Link to comment
Share on other sites

காலத்தை வீணடிப்பது முறையல்ல!

ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் ஒன்பது தினங்களாகின்றன. இத்தேர்தல் தொடர்பான பரபரப்புகள் அனைத்தும் இப்போது ஓய்ந்து விட்டன.

நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. இவ்வெற்றி குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு முற்றாகவே இடமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களில் 52.25 சதவீதத்தினர் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பு இது. அதாவது 13,60,026 மேலதிக வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ.

நடந்து முடிந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரணியாக நின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களே இவ்வெற்றி குறித்து மலைத்துப் போய் நிற்கிறார்கள். அவரது வெற்றியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மாத்திரமன்றி, உலக நாடுகளின் தலைவர்களும் இந்த மகத்தான வெற்றி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள். இலங்கையில் சுயாதீனமாக செயற்படக் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதியாகவும், சுதந்திரமாகவும், எதுவித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நடத்தப்பட்ட இத்தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றியை நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்றுதான் உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலை நாம் கடந்து வந்து விட்டோம். நாட்டை கடந்த சுமார் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களென்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டி விட்டது.

எனவே மக்கள் ஆதரவை இழந்த அந்த அரசு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு இயலாது. அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி விலகியதையடுத்து, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தனது பதவியைத் துறந்து அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்று பதவியேற்றுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பிரதமராகியிருக்கின்றார். பிரதமர் பதவியை இதற்கு முன்னரும் வகித்த அனுபவம் கொண்டவர் மஹிந்த.

இலங்கையின் அரசியலில் இனிமேல் அடுத்த கட்டப் பரபரப்பு பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேற்றைப் பார்க்கின்ற போது, நடைபெறவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முடிவு எவ்வாறாக அமையுமென்பதை முன்கூட்டியே எதிர்வு கூறி விட முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது. பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவே பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர் பதவியை வகிக்கப் போகின்றார்.

நாட்டின் மொத்த குடிமக்கள் தொகையில் சுமார் எழுபது சதவீதத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, ராஜபக்ஷ குடும்பத்தினரும் கொண்டுள்ள அமோகமான செல்வாக்கையும் ஆதரவையும் பார்க்கின்ற போது, பொதுத் தேர்தலின் முடிவை இப்போதே எதிர்வு கூறுவது கடினமான விடயமல்ல.

கடந்த ஐந்து வருட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் திராணியற்ற நிர்வாகத்தையும், ஆளுமையின்மையும் பார்த்து சலிப்படைந்த மக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான தீர்மானத்துக்குப் வரப் போகிறார்களென்பதை இலகுவாகவே இப்போது ஊகித்து விட முடியும்.

 
 

நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்தியை துரித கதியில் முன்கொண்டு செல்வதற்கும் கோட்டாபய ராஜபக்ஷ மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள்,எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவர் சார்ந்த கட்சியையே மீண்டும் ஆதரிப்பர் என்பதுதான் உண்மை.

தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் இனிமேல் எந்தத் திசையை நோக்கி நகரப் போகின்றது என்பதுதான் இன்றுள்ள பிரதான வினா!

தமிழ் அரசியல் கட்சிகள் தமது வழமையான பாணியில், சாத்தியமற்ற அரசியல் தீர்வை முன்வைத்து மேலும் ஐந்து வருடங்களுக்கு காலத்தை வீணடிக்கப் போகின்றனவா?

இல்லையேல், கடந்த நாற்பது வருட காலத்துக்கு மேலாக யுத்தப் பாதிப்பினால் நலிவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு இனிமேலாவது உருப்படியான செயல் திட்டங்களில் இறங்கப் போகின்றனவா?

இவ்விரண்டுமே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள பிரதான கேள்விகள்!

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளால் இன்னுமே புரிந்து கொள்ளப்படாத முக்கிய விடயமொன்றும் இங்கு உள்ளது.

வடக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும், கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை. இந்த யதார்த்தத்தை தமிழர் தலைமைகள் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் சக்திகளும்,சமூகநல அமைப்புகளும் கிழக்கில் வெகுண்டெழுந்தன என்பதை இனிமேலாவது அக்கட்சியின் புரிந்து கொள்வது அவசியம்.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை மாத்திரம் இலக்கு வைத்தபடிதான் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முன்வைக்கப்படுகின்ற தீர்வு யோசனையானது சாத்தியமாகக் கூடியதா என்பதையிட்டு அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.

வடக்கின் அரசியல் நகர்வு இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், கிழக்கிலோ தமிழ் மக்களின் இருப்பு ஆபத்தின் விளிம்பில் வந்திருப்பதை தமிழ்த் தலைமைகள் கண்டு கொள்ளத் தவறி விட்டன.

தமிழ் அரசியல் தலைமைகள் இனிமேலும் கற்பனாவாதத்தில் காலத்தை விரயப்படுத்திக் கொண்டிருப்பது முறையல்ல. புதிய ஆட்சியாளர்களுடன் நல்லிணக்கத்தை வலுப்படுத்தியபடி தமிழ் மக்களின் நீண்ட கால அவலங்களைத் தீர்த்து வைப்பதற்கு அவர்கள் முன்வருவதே புத்திசாலித்தனம்!

https://www.thinakaran.lk/2019/11/25/ஆசிரியர்-தலைப்பு/44332/காலத்தை-வீணடிப்பது-முறையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

 

ஆனாலும் ரணில்தலைவர் பதவியில் இருந்து விட்டுக் கொடுக்க இன்னும் தயாரில்லை.

Link to comment
Share on other sites

மாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் என்று குறிப்­பி­டத்­தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு, அர­சியல் விடு­த­லைக்­கான போராட்­டத்தில் தமது உயிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­களை அவர்கள் கசிந்­து­ருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாமல், இந்த வருட நிகழ்வு முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. கண்ணீர் உகத்த கவ­லைக்­கு­ரிய உணர்வு பூர்வ நிகழ்­வாக அல்­லாமல், அதற்கும் அப்பால் அர­சியல் ரீதி­யான ஓர் உணர்வை வெளிப்­ப­டுத்­திய அடை­யா­ள­மா­கவும் அது நிகழ்ந்­துள்­ளது.

 

மாவீரர் தின நிகழ்­வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்­வ­தேச நாடுகள் எங்கும் நடை­பெற்­றுள்­ளன. இருப்­பினும், தாய­கமா­கிய இலங்­கையின் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற  நினை­வு­கூரல் நிகழ்­வுகள் அவற்றில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன. அவைகள் தனித்­து­வ­மா­னவை.  தனித்­தன்மை கொண்­ட­வை­யா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன.

போர்க்­குற்­றங்கள் சுமத்­தப்­பட்டு, நீதி விசா­ரணை கோரப்­பட்ட நிலையில் ஜனா­தி­பதி தேர்­தலில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வரே மிகப் பெரும்­பான்மை பலத்­துடன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஒரு பின்­ன­ணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்­வ­மா­கவும், அர­சியல் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவும் நடந்­தே­றி­யுள்­ளது.

பி.மாணிக்­க­வா­சகம்

Link to comment
Share on other sites

மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

அழுத்­தங்கள், கெடு­பி­டிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்­வுகள், பெரும்­பாலும் தடை­யின்றி நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், கேள்­விக்­கு­றி­யாக இருந்த பல  விட­யங்­களில், மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பதும், ஒன்று.

மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ, வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம்  அமைதியான நினைவு கூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில், மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது, நிலையான அமைதியை ஏற்படுத்தும் அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

- சுபத்ரா

https://www.virakesari.lk/article/70229

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.