Jump to content

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்


Recommended Posts

  • Replies 317
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –

Link to comment
Share on other sites

@DrSJaishankar 

முடிந்தால் இவரை பின்தொடருங்கள், தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

Link to comment
Share on other sites

இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. 

எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.

Ref : வலம்புரி 

Link to comment
Share on other sites

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

Ref : BBC Thamil

 

Link to comment
Share on other sites

On 11/22/2019 at 7:57 AM, ampanai said:

மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும்.

சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம்  ஆரோக்கியமானது இல்லை.   

முக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது.  

ஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்புக் கூத்துக்கள் நடந்தன.

இந்த நாடகத்துக்குள் விழுந்தடித்து குள்ளநரி ரணிலுக்கு முண்டு கொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கூட்டில் இயங்கும் கூத்தமைப்பு மூடர்கள் சிங்கள-பௌத்த கொலைகார அரசின் மீது அதிகரித்துவந்த சர்வதேச நெருக்கடியை குறைப்பதற்கு பெரும் உதவி செய்தனர். கூத்தின் முடிவில் சிங்கள-பௌத்த கொலைகாரர்களான ரணிலும் - கோட்டாபயவும் அலரிமாளிகையில் சந்தித்து சிரித்து மகிழ்ந்திருந்தனர்.

மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு அமைந்த காலத்தில் ஐ.நா. சபையில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஓடியோடி குத்திமுறிந்த சொதப்பல் சுமந்திரன் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு பயங்கரவாதிகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவே உதவினார்.

சம்மந்தனும் போர்க்குற்றவாளிக் கும்பல்களில் ஒன்றான இந்திய அரச  கொலைகாரர்கள் எதிர்நோக்கிய ஆபத்தை அகற்ற திக்கித்திக்கி உழைத்தாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை எடுக்கவில்லை.

எனவே அதே அடிமைச் சேவக மனநிலையுடன் சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை ஆரோக்கியமானது இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வந்து, ஒரு கிழமை ஆகின்றது. 
அதனை... ஊர் புதின, செய்தியில்...
"பின்" பண்ணி விட்டவருக்கு, நன்றிகள்.

விவாதங்களை... நடத்த, வேறு பகுதி  இருக்கும் போது,
ஏன்... இந்த, விளையாட்டு.

Link to comment
Share on other sites

இம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே குறைந்த செல்லுபடியற்ற வாக்குப்பதிவு

(ஆர்.யசி)

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலிலேயே ஆகக் குறைந்த செல்லுபடியற்ற வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்த காரணத்தினால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

எனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387, 951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியது. வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் நோக்குகையில் இது வெறுமனே 0.85 வீதமாகும். 

https://www.virakesari.lk/article/69614

Link to comment
Share on other sites

காலத்தை வீணடிப்பது முறையல்ல!

ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் ஒன்பது தினங்களாகின்றன. இத்தேர்தல் தொடர்பான பரபரப்புகள் அனைத்தும் இப்போது ஓய்ந்து விட்டன.

நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. இவ்வெற்றி குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு முற்றாகவே இடமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களில் 52.25 சதவீதத்தினர் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பு இது. அதாவது 13,60,026 மேலதிக வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ.

நடந்து முடிந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரணியாக நின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களே இவ்வெற்றி குறித்து மலைத்துப் போய் நிற்கிறார்கள். அவரது வெற்றியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மாத்திரமன்றி, உலக நாடுகளின் தலைவர்களும் இந்த மகத்தான வெற்றி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள். இலங்கையில் சுயாதீனமாக செயற்படக் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதியாகவும், சுதந்திரமாகவும், எதுவித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நடத்தப்பட்ட இத்தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றியை நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்றுதான் உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலை நாம் கடந்து வந்து விட்டோம். நாட்டை கடந்த சுமார் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களென்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டி விட்டது.

எனவே மக்கள் ஆதரவை இழந்த அந்த அரசு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு இயலாது. அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி விலகியதையடுத்து, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தனது பதவியைத் துறந்து அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்று பதவியேற்றுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பிரதமராகியிருக்கின்றார். பிரதமர் பதவியை இதற்கு முன்னரும் வகித்த அனுபவம் கொண்டவர் மஹிந்த.

இலங்கையின் அரசியலில் இனிமேல் அடுத்த கட்டப் பரபரப்பு பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேற்றைப் பார்க்கின்ற போது, நடைபெறவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முடிவு எவ்வாறாக அமையுமென்பதை முன்கூட்டியே எதிர்வு கூறி விட முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது. பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவே பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர் பதவியை வகிக்கப் போகின்றார்.

நாட்டின் மொத்த குடிமக்கள் தொகையில் சுமார் எழுபது சதவீதத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, ராஜபக்ஷ குடும்பத்தினரும் கொண்டுள்ள அமோகமான செல்வாக்கையும் ஆதரவையும் பார்க்கின்ற போது, பொதுத் தேர்தலின் முடிவை இப்போதே எதிர்வு கூறுவது கடினமான விடயமல்ல.

கடந்த ஐந்து வருட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் திராணியற்ற நிர்வாகத்தையும், ஆளுமையின்மையும் பார்த்து சலிப்படைந்த மக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான தீர்மானத்துக்குப் வரப் போகிறார்களென்பதை இலகுவாகவே இப்போது ஊகித்து விட முடியும்.

 
 

நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்தியை துரித கதியில் முன்கொண்டு செல்வதற்கும் கோட்டாபய ராஜபக்ஷ மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள்,எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவர் சார்ந்த கட்சியையே மீண்டும் ஆதரிப்பர் என்பதுதான் உண்மை.

தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் இனிமேல் எந்தத் திசையை நோக்கி நகரப் போகின்றது என்பதுதான் இன்றுள்ள பிரதான வினா!

தமிழ் அரசியல் கட்சிகள் தமது வழமையான பாணியில், சாத்தியமற்ற அரசியல் தீர்வை முன்வைத்து மேலும் ஐந்து வருடங்களுக்கு காலத்தை வீணடிக்கப் போகின்றனவா?

இல்லையேல், கடந்த நாற்பது வருட காலத்துக்கு மேலாக யுத்தப் பாதிப்பினால் நலிவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு இனிமேலாவது உருப்படியான செயல் திட்டங்களில் இறங்கப் போகின்றனவா?

இவ்விரண்டுமே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள பிரதான கேள்விகள்!

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளால் இன்னுமே புரிந்து கொள்ளப்படாத முக்கிய விடயமொன்றும் இங்கு உள்ளது.

வடக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும், கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை. இந்த யதார்த்தத்தை தமிழர் தலைமைகள் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் சக்திகளும்,சமூகநல அமைப்புகளும் கிழக்கில் வெகுண்டெழுந்தன என்பதை இனிமேலாவது அக்கட்சியின் புரிந்து கொள்வது அவசியம்.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை மாத்திரம் இலக்கு வைத்தபடிதான் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முன்வைக்கப்படுகின்ற தீர்வு யோசனையானது சாத்தியமாகக் கூடியதா என்பதையிட்டு அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.

வடக்கின் அரசியல் நகர்வு இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், கிழக்கிலோ தமிழ் மக்களின் இருப்பு ஆபத்தின் விளிம்பில் வந்திருப்பதை தமிழ்த் தலைமைகள் கண்டு கொள்ளத் தவறி விட்டன.

தமிழ் அரசியல் தலைமைகள் இனிமேலும் கற்பனாவாதத்தில் காலத்தை விரயப்படுத்திக் கொண்டிருப்பது முறையல்ல. புதிய ஆட்சியாளர்களுடன் நல்லிணக்கத்தை வலுப்படுத்தியபடி தமிழ் மக்களின் நீண்ட கால அவலங்களைத் தீர்த்து வைப்பதற்கு அவர்கள் முன்வருவதே புத்திசாலித்தனம்!

https://www.thinakaran.lk/2019/11/25/ஆசிரியர்-தலைப்பு/44332/காலத்தை-வீணடிப்பது-முறையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

 

ஆனாலும் ரணில்தலைவர் பதவியில் இருந்து விட்டுக் கொடுக்க இன்னும் தயாரில்லை.

Link to comment
Share on other sites

மாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் என்று குறிப்­பி­டத்­தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு, அர­சியல் விடு­த­லைக்­கான போராட்­டத்தில் தமது உயிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­களை அவர்கள் கசிந்­து­ருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாமல், இந்த வருட நிகழ்வு முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. கண்ணீர் உகத்த கவ­லைக்­கு­ரிய உணர்வு பூர்வ நிகழ்­வாக அல்­லாமல், அதற்கும் அப்பால் அர­சியல் ரீதி­யான ஓர் உணர்வை வெளிப்­ப­டுத்­திய அடை­யா­ள­மா­கவும் அது நிகழ்ந்­துள்­ளது.

 

மாவீரர் தின நிகழ்­வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்­வ­தேச நாடுகள் எங்கும் நடை­பெற்­றுள்­ளன. இருப்­பினும், தாய­கமா­கிய இலங்­கையின் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற  நினை­வு­கூரல் நிகழ்­வுகள் அவற்றில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன. அவைகள் தனித்­து­வ­மா­னவை.  தனித்­தன்மை கொண்­ட­வை­யா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன.

போர்க்­குற்­றங்கள் சுமத்­தப்­பட்டு, நீதி விசா­ரணை கோரப்­பட்ட நிலையில் ஜனா­தி­பதி தேர்­தலில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வரே மிகப் பெரும்­பான்மை பலத்­துடன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஒரு பின்­ன­ணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்­வ­மா­கவும், அர­சியல் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவும் நடந்­தே­றி­யுள்­ளது.

பி.மாணிக்­க­வா­சகம்

Link to comment
Share on other sites

மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

அழுத்­தங்கள், கெடு­பி­டிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்­வுகள், பெரும்­பாலும் தடை­யின்றி நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், கேள்­விக்­கு­றி­யாக இருந்த பல  விட­யங்­களில், மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பதும், ஒன்று.

மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ, வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம்  அமைதியான நினைவு கூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில், மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது, நிலையான அமைதியை ஏற்படுத்தும் அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

- சுபத்ரா

https://www.virakesari.lk/article/70229

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.