Jump to content

`திரையரங்குகளில் மீண்டும் திருக்குறள்!'– என்ன சொல்கிறார் அமைச்சர்?


Recommended Posts

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவின் இறுதியில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களுடன்‌ அமைச்சர் கடம்பூர் ராஜூ கேக் வெட்டி கொண்டாடினார்.

வரும் புத்தாண்டுக்குள், நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். திரையரங்குகளில், படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல், திரையில் படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்பட்டு ஒலிபரப்பப்படும்” என்றார்.

 

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியிட விரும்புபவர்களிடம் முதலில் விருப்ப மனுக்களைப் பெற்றது அ.தி.மு.கதான். அதன் பின்னர்தான், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்றுவருகின்றன. வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சியில் உள்ள வார்டுகளில், சுழற்சி முறையில் யார் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைவிட வெளிப்படைத்தன்மை என்ன வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்கள்தான் நிறைவுசெய்ய முடியும். அவர்களுக்குப் பின்னர் கட்சியில் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால்தான் ஆட்சி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், வெற்றிடம் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திவருகின்றனர்.

வெற்றிடம் என்று நினைப்பவர்களுக்கு, அதை நினைக்க மட்டுமே உரிமை உண்டு. யாருக்கு வெற்றிடம், எங்கு வெற்றிடம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே இல்லை. பத்திரிகையாளர்கள் நலவாரியத்திற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவருகின்றன. வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/thirukkural-broadcast-before-movie-title-in-theaters-minister-kadambur-raju

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.