Jump to content

`வாழ்க்கையைப் புரியவைத்த இரவு; சொற்ப வருமானத்திலும் தாராள உதவி!' - `தன்னம்பிக்கை' மனிதர் ஜோசப்


Recommended Posts

'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார்.

ஜோசப்

சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு வாசகம், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகம் போன்றவை மாறி மாறி இடம்பிடித்திருக்கும்.

அந்த வரிசையில், '100% டெங்கு கொசுவை ஒழிப்போம்' என்ற வாசகங்களுடன் வீதி வீதியாக வலம்வருகிறார், ஜோசப். வாடகைக்கு எடுத்த கொசு மருத்து இயந்திரத்தைத் தனது சிறிய தோளில் சுமந்துகொண்டு கழிவுநீர் வாய்க்கால்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். சக்தி நகர் என்ற பகுதியில் மருந்து அடித்துவிட்டு, தனது கடையில் அமர்ந்தவரை சந்தித்தோம். “மருந்து தீர்ந்துபோயிடுச்சி சார்.

 

நாளைக்குத்தான் வாங்கணும். இன்னைக்கு வருமானம் அந்த அளவுக்கு இல்லை” என்று பேசத் தொடங்கினார். “நீங்க பேட்டி எடுக்கற அளவுக்கு நான் பெருசா எதுவும் பண்ணிடல சார். என்னால முடிஞ்ச உதவிய என்னை சுத்தியிருக்கிறவங்களுக்கு செய்யறேன். அப்பா அல்போன்ஸ், அம்மா அற்புதம் மேரி. ஏழு பேருல 5-வது பையன் நான். 9-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறல.

ரப்பர் ஸ்டாம்ப் செய்யிற கடைக்கு வேலைக்குப் போயிட்டேன். 2011 வரைக்கும் அந்த வேலைதான். அந்த வருஷம்தான் கண்ணன்னு ஒரு நல்ல மனிதர் மூலமா தனியா ஒரு கடையை நடத்துற வாய்ப்பு கெடச்சுது. மாசம் ஐயாயிரம், எட்டாயிரம்னு வருமானம் வந்துட்டு இருந்துச்சி. இப்போல்லாம் புத்தகங்களுக்கு பைண்டிங் பண்ணுறது குறைஞ்சிட்டதால வருமானமும் குறைஞ்சிடுச்சி. கவருமென்டு பள்ளிக்கூடத்துல படிக்கிற ஏழைப் புள்ளைங்க புத்தகங்களுக்கு நான் பணம் வாங்குறது இல்ல.

ஒருநாள் கடைய முடிச்சிட்டு வீட்டுக்குக் கெளம்பும்போது, கண்ணு தெரியாத பெரியவர் ஒருத்தர் கீழ விழுந்துட்டாரு. அவரைத் தூக்கிவிட்டு தண்ணீர் கொடுத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போதான் நாம வாழுற வாழ்க்கை யாருக்காவது உபயோகமா இருக்கணும்னு எனக்குப் புரிஞ்சுது. மறுநாள், கவருமென்டு ஆஸ்பிட்டல், பஸ் ஸ்டாண்டு பகுதியில இருந்த கண்ணு தெரியாத, நடக்க முடியாம இருந்தவங்களுக்கு கைலி, துண்டு, சாப்பாடுனு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.

எனக்கு வரும் கொஞ்ச வருமானத்துக்கு, எல்லா நாளும் இதைச் செய்ய முடியாது. வேலை அதிகமா வரும்போது, அவங்களுக்குத் தேவையானதை வாங்கிட்டுப் போவேன். சக மனிதர்களை நேசிக்கிறதுதான் உண்மையான வாழ்க்கைனு புரிய ஆரம்பிச்சுது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு பல் டாக்டர் உதவியால இலவச பல் மருத்துவமனை முகாம் நடத்தியிருக்கிறேன். வீடு வீடா நானே போய் நோட்டீஸ் கொடுத்து மக்களைத் திரட்டினேன்.

அதேபோல, இலவச கண்சிகிச்சை முகாம் ஒண்ணு நடத்தணும்னு ஆசை. அதுக்கான முயற்சிகளையும் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், 2018 நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வீடு வீடாகச் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தினேன். இப்போது டெங்கு காய்ச்சல் அதிகமா பரவிக்கிட்டு இருக்குன்னு பேப்பர்ல படிச்சேன்.

என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். எல்லா இடத்துக்கும் போயி மருந்து அடிக்கிறதுக்கு என் உடம்பு ஒத்துழைக்காது. அதனால, எனக்குப் பக்கத்துல இருக்கிற இடங்கள்ல கொசு மருந்து அடிக்கலாம்னு முடிவு எடுத்து வாடகைக்கு அந்த மெஷினை எடுத்தேன். அதுல மருந்து ஊத்தி நானே வாய்க்கால்ல அடிக்க ஆரம்பிச்சேன். சிலர் அவங்க வீட்டுலயும் அடிக்கச் சொல்லி உரிமையோட கேட்டப்ப சந்தோஷமா இருந்துச்சி. இதுதாங்க வாழ்க்கை.

வாழுற வரைக்கும் நம்மால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு செய்யணும்னுதான் என் ஆசை. என்னால வண்டி ஓட்ட முடியாததால, எங்க போனாலும் நடந்தே போகவேண்டியிருக்கு. எனக்குத் தகுந்த மாதிரி வண்டி செய்ய முடியும்னு ஒரு ஷோரூம்ல சொல்லி இருக்காங்க. பணம் வந்தவுடன் வாங்கிடுவேன். அதுக்கப்புறம் நடக்க முடியாதவங்களை ஏத்திக்கிட்டுப் போகலாம்” என்கிறார் உற்சாகமாக.

உடலளவில் உயரம் குறைவாக இருக்கும் ஜோசப் போன்ற உள்ளங்கள், தங்களின் மனித நேயத்தால் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள்.

?ref=external&v=533858707212545

https://www.vikatan.com/news/miscellaneous/story-about-pondicherry-confident-man-joseph

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.