Jump to content

ரஜினி மீது அடுத்தடுத்து அஸ்திரங்கள்... எடப்பாடி 'எழுச்சி'யின் பின்னணி!


Recommended Posts

''ரஜினி என்றதுமே, 'அவர் பி.ஜே.பி-யின் விசுவாசி' என்றுதான் பொதுவாகவே அனைவருக்கும் தோன்றும். அதற்கு ஏற்றாற்போலவே அவருடைய அறிக்கைகளும் அமைந்திருக்கும். சமீபத்தில்கூட 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி ரஜினியைக் குஷிப்படுத்தியது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற காரணங்களால், ரஜினி விஷயத்தில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது 'காவிக்கு' எதிர் நிலையில் இருப்பதுபோல் ரஜினி பேசவும், அதையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட இது ரஜினிக்கு எதிரான அவருடைய யுத்தம் என்றே சொல்லாம்'' என்கிறார்கள் தமிழக அரசியலை கவனிப்பவர்கள்

கடந்த 8-ம் தேதியன்று கமல் அலுவலகத்தில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''தமிழகத்தில் இன்னும் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது'' என்று வழக்கம்போல்தான் சொன்னார். இந்தத் தடவை அ.தி.மு.க தரப்பு இதை வேடிக்கை பார்க்கவில்லை. 'காம்பவுண்ட் அரசியல்வாதி' என்று ஆரம்பித்து காய்ச்சித்தள்ள ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், "ரஜினியின் பேச்சுக்கு இனியும் சும்மா இருக்கக் கூடாது என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. அடுத்தடுத்த நாளில் ரஜினி, கமல் என்று எடப்பாடியார் பாய்ச்சல் காட்டுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது" என்கிறார்கள்.

எடப்பாடிக்கு நெருக்கமான சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "பா.ஜ.க தரப்பு ரஜினியை வைத்து தமிழக அரசியல் களத்தில் நிலைகொள்ள நினைத்தது. அதை அ.தி.மு.க-வும் அமைதியாக வேடிக்கை பார்த்தது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதைவிட அவரை வைத்து அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடுதல் வாக்குகள் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று எடப்பாடி தரப்பு நினைத்து வந்தது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்' என்று சொன்னதுதான், எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது.

இந்த நிலையில், வெற்றிடம் என்று ரஜினி பேசிவைக்க, எரிச்சலாகி விட்டார் எடப்பாடியார். ஏற்கெனவே தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளைக் கடக்க விருக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டார். டெல்லியும் எடப்பாடியாரின் மூவ்களை அங்கீகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆளுமையான ஒரு தலைவராகவே தன்னை உணர்கிறார் எடப்பாடியார். இதற்குப் பிறகும் வெற்றிடம் என்று ரஜினி பேசுவது, 'தன்னை ஒரு பொருட்டாகக்கூட ரஜினி மதிக்கவில்லை' என்று எடப்பாடியாரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அதனால்தான் அவர் தன் அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்துவிட்டார்.

 

'ரஜினியைத் தூண்டிவிடுவதே கமல்தான். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்கள்' என்று உளவுத்துறை ஒரு தகவலைத் தட்டிவிட்டுள்ளது. இதை வைத்து, 'கமல் தனியாக இருக்கும் வரை பெரிதாக ஆபத்து இல்லை. ரஜினியுடன் இணைந்தால் மிகப்பெரிய ஓட்டுவங்கியாக மாறுவார்கள். அது, அ.தி.மு.க-வைப் பாதிக்கக்கூடும்' என்று கட்சியினர் சிலர் கவலையாகப் பேசியதும் எடப்பாடியை மிகவும் யோசிக்கவைத்துவிட்டது. எனவேதான், ரஜினி - கமல் இணைப்பை முளையிலேயே கிள்ளியெறிய முடிவுசெய்து விட்டார்" என்றார்கள்.

ரஜினி தரப்பில் எடப்பாடியின் எதிர்த்தாக்குதலை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம், ரஜினி விமர்சித்தாலுமேகூட மனம் தளராத விக்கிரமாதித்தன்போல பா.ஜ.க தரப்பும் ரஜினியை தங்கள் பக்கம் கொண்டுவர தொழிலதிபர் ஒருவர் மூலம் மீண்டும் முயல்கிறது.

https://www.vikatan.com/spiritual/astrology/november-18-to-24-weekly-panjangam?artfrm=infinite

 

Link to comment
Share on other sites

Just now, ampanai said:

ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்' என்று சொன்னதுதான்எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது.

அந்த 'மூத்த தலைவருக்கு' பாராட்டுக்கள். பி.ஜே.பி. ( மோடி மற்றும் ஷா ) கைகளில் தமிழகம் சிக்கக்கூடாது.  ஆனால், அவரும் பி.ஜே.பி. சேர்ந்தவர் என்பது இது ஒரு ஏமாற்றும் வேலையாக கூட இருக்கலாம்.  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார், அண்ணா, காமராசர் இடையிலெழும் கருத்து வேறுபாடுகளை அலசிய தமிழகம் இன்று எடப்பாடி, ரஜினி எனும் நிலைக்கு வந்துள்ளது. மக்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே தலைவர்கள். தமிழகம் தரம் தாழ்ந்து போனதற்கு சான்று வேறு வேண்டுமா என்ன?

Link to comment
Share on other sites

9 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

மக்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே தலைவர்கள். தமிழகம் தரம் தாழ்ந்து போனதற்கு சான்று வேறு வேண்டுமா என்ன?

உண்மை. இன்று தமிழினத்திற்கு உலகளாவிய ரீதியில் ஒப்பற்ற தலைமை என்று இல்லாத துர்ப்பாக்கியம். 

விரைவில் இது மாறும், மாற்றப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.