Jump to content

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்


Recommended Posts

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக  கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.

 

gotha.jpg

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/69123

Link to comment
Share on other sites

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/69124

 

இதுவரையில் 89 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/69124

 

இதுவரையில் 89 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 மில்லியன் வாக்குகளுள் 3 மில்லியன் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. 89 என்பது சிறிய தொகை - 89% அல்ல.    தாம் வெற்றி பெற்றுள்ளதாக இப்போது அறிவித்து இருப்பதன் நோக்கம், பின்னர் உண்மையில் இவர்களின் தோல்வி அறிவிக்கப்படும் போது, அது பொய்யானது என்று சொல்லி கலவரங்களையும் இராணுவ புரட்சியையும் ஆரம்பிக்க ஏதுவாக.

Link to comment
Share on other sites

1 minute ago, Jude said:

15 மில்லியன் வாக்குகளுள் 3 மில்லியன் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. தாம் வெற்றி பெற்றுள்ளதாக இப்போது அறிவித்து இருப்பதன் நோக்கம், பின்னர் உண்மையில் இவர்களின் தோல்வி அறிவிக்கப்படும் போது, அது பொய்யானது என்று சொல்லி கலவரங்களையும் இராணுவ புரட்சியையும் ஆரம்பிக்க ஏதுவாக.

இல்லை. அமெரிக்காவில் கூட இவ்வாறு கூறுவார்கள். ( ப்ளூ ஸ்டேட் ரெட் ஸ்டேட், மற்றும் கவுண்டீஸ்) . அது போன்று இவர்களுக்கும் இவ்வளவு வித்தியாசத்தில் இந்த இந்த மாகாணங்களில் வென்றால், பின்னர் தம்மை நெருங்க முடியாது என ஒரு கணக்கு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் சொல்லி இருக்கலாம். 

Link to comment
Share on other sites

முடிவுகளின் பின்னர் தமிழர் தலைமைகள் தங்களை, தங்களின் அரசியல் ஆளுமையை மற்றும் சிங்கள ஒற்றையாட்சி விதிமுறைகளையும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். 

எவ்வாறு சஜித் உப தலைவர் பதவியில் இருந்து விலகினாரோ அவ்வாறு சில தமிழ் அரசியல் தலைமைகளும் விளக்கவேண்டும் / ஓய்வு பெற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

எவ்வாறு சஜித் உப தலைவர் பதவியில் இருந்து விலகினாரோ அவ்வாறு சில தமிழ் அரசியல் தலைமைகளும் விளக்கவேண்டும் / ஓய்வு பெற வேண்டும். 

அந்தளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் அல்ல நம்ம அரசியல் தலிவர்கள் 😜

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அந்தளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் அல்ல நம்ம அரசியல் தலிவர்கள்

சஜித்தை பொறுத்தவரையில் அவர் அவ்வாறு இரணிலிடம் உறுதி அளித்திருக்ககூடும். அதை அவர் கடைப்பிடித்தது அவரின் பண்பை  காட்டியுள்ளது. சிலவேளைகளில், மீண்டும் அரசியலில் குதிக்க இது உதவும். 
வயது போன ரணிலின் பின்னர் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே ஐ,தே.க. வின் அஸ்தமனமா தெரியவில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் இந்தியாவுக்கு ஆப்பு வைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ampanai said:

சஜித்தை பொறுத்தவரையில் அவர் அவ்வாறு இரணிலிடம் உறுதி அளித்திருக்ககூடும். அதை அவர் கடைப்பிடித்தது அவரின் பண்பை  காட்டியுள்ளது. சிலவேளைகளில், மீண்டும் அரசியலில் குதிக்க இது உதவும். 
வயது போன ரணிலின் பின்னர் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே ஐ,தே.க. வின் அஸ்தமனமா தெரியவில்லை.   

இருக்கலாம் ஆனால் சிங்கள தலைமைகள் யாருமே எமக்கு தீர்வு தந்து தமிழனை அந்த தீவில்  நிம்மதியாய் வாழ விடமாட்டார்கள் விச பாம்பை தமிழர்கள் நல்ல பாம்பென்று சொல்லி கொள்வது போல் இந்த சிங்கள கட்சிகள் . காரணம் எமக்குள் உள்ள ஒற்றுமையின்மை ஒரு ******* கொலிஜ் போன்ற கல்லூரி லெவலிலே  படித்தவர்கள் உள்ள பாடசாலை  uk யில்  மட்டும் இரண்டு மூன்று பிரிவு கொள்ளுபடுது  இப்படி பல உதராணம்கள் ஆரம்பமே அப்படிஎன்றால் ?

என் கருத்து பலரை கோபப்பட வைக்கும் ஆனால் யதார்த்தம் அதுதான் .

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை காலை 9:00 மணிக்கு பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பேரினவாதி சஜித் பிரேமதாச தனது துணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் வென்றவரை வாழ்த்தியுள்ளார்.

குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க மகிந்தவுடன் பேரம் பேசி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் மூலம் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த கூத்தமைப்பை அந்த பேரினவாதக் கட்சி கைவிட்டுள்ளது.

பூச்சாண்டிக்கும் பெரிய பேய்க்கும் பயந்து சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் மேலும் கிலிகொண்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் மோதல்களுக்குள் தலையைக் கொடுத்து சிக்கிய நிலையில் சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, போல் said:

பூச்சாண்டிக்கும் பெரிய பேய்க்கும் பயந்து சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் மேலும் கிலிகொண்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் மோதல்களுக்குள் தலையைக் கொடுத்து சிக்கிய நிலையில் சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் உள்ளனர்.

அப்போதும் சொன்னம் இப்பவும் சொன்னம் கூத்தமைப்பை நம்பி பின்னால் போகிறவர்களுக்கு ஆப்பு என்று அறப்படிச்ச செம்புகள் தான் பரத நாட்டியம் ஆடுனவை என்ன ஒன்று இவ்வளவு நாளும் இல்லாத போர்குற்றம் தடை என்று மேற்குலகு மறுபடியும் ஆனா வில் இருந்து தொடங்குவது போல் சலசலப்பு காட்டுவினம் தங்களுக்கு வேண்டிய அலுவல் முடிந்தவுடன் தமிழர்களை கையை விட்டு விடுவினம் . கொத்தாவும் லேசு பட்ட ஆள் அல்ல முதலைக்கு யார் சுறாவுக்கு யார் என்று தெரிந்து போட தெரிந்த  அரசியல் கதைக்க தெரியாத அரசியல் வியாபாரி அதுக்காக கைகளை வெள்ளையாய் காட்டிய பின் மறுபடியும் வெள்ளைவான் உள்ளே கொண்டு வருவது நிறைய  கஷ்ட்டம் உள்ளது அவருக்கு ஆனாலும்  யுத்த இறுதி நேரம்களில் ராணுவத்துக்கு மத்தியில் இருந்து தமிழ் பெண்கள் ராணுவத்துக்கு தமிழ் ஆண்களின் இரத்தம் இந்து சமுத்திர கடலுக்கு என்று ஓலமிட்டவர் மறக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மொத்த இலங்கைக்கும் சனாதிபதியாவது என்பது சனநாயகத்தின் சாபக்கேடு.

தமிழ் மக்கள் இவருக்கு வாக்களிக்காத போதும்.. அமெரிக்காவின் கேடுகெட்ட இந்த சனநாயக முறையால்... அவர்களும் இந்தப் போர்க்குற்றவாளியை சொந்த இனத்தை கொன்றொழித்தவனை.. தெரிவு செய்வதாகிறது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

எனவே சொறீலங்காவில் தமிழர் பிரதிநிதி ஒருவரும்.. தமிழர்கள் சார்பில் சனாதிபதியாக கோத்தா சிங்கள சனாதிபதியானால்.. நியமிக்கப்படுவதே நியாயம். 

கோத்தா மட்டும்.. இலங்கைக்கு சனாதிபதியாக முடியாது. அதுவல்ல.. இலங்கை மக்கள் அனைவரின் விருப்பும். குறிப்பாக பெரும்பானமை தமிழ் பேசும் மக்கள் அவருக்கு சனாதிபதியாக வாக்களிக்கவில்லை. அந்த வகையில்.. அவர் அவர்களுக்கு சனாதிபதியாவது மகா கொடுமை. சனநாயக விரோதம்.

அரளிமாளிகையை இரண்டாகப் பிரித்து.. உடனடியாக கோத்தாவுக்கு சமாந்திரமாக இன்னொரு சனாதிபதியை நியமிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் எனி ரணில்.. கோத்தா இழுபறி நடக்கும் போது.. மீண்டும் தமிழ் மக்களின் வாக்கு பலம் பேச வேண்டும்.. கோத்தாவுக்கு எதிராக. மிகவும் காத்திரமாக. 

சர்வதேச அளவில் தமிழ் மக்கள் கோத்தாவின் போர்க்குற்றம்.. இன அழிப்புக்கு நீதி கோட்டு உச்சக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள இன்றே ஆரம்பிப்பது மிக மிக மிக அவசியமாகும். 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தமிழீழமும்.. மலையகமும்.. ஒரு நாடு... மிச்சம்... சிங்கள நாடு. சர்வதேசம் இந்தப் பிரிவை புரிந்து கொண்டு அங்கீகரிப்பது மட்டுமே.. இந்தப் பிரிவின் அடித்தளம் சார்ந்து மக்கள் இருவேறு கோணங்களில் பயணிப்பதை மதிப்பதாகும்.

சும்மா நல்லிணக்கம்.. இன ஐக்கியம் என்று பேசி.. பிரிந்து போயுள்ள மனங்களை எந்த வகையில் யாரும் ஒற்றுமைப்படுத்த முடியாது. தமிழ் பேசும் மக்கள்.. சுதந்திரமாகப் பிரிந்து போக அனுமதியுங்கள். இதையே அவர்கள் ஒவ்வொரு சனநாயகத் தேர்தலிலும்.. கடந்த 30 ஆண்டுகளாக இனங்காட்டி வருகின்றனர். ஆனால்.. சனநாயகம் என்று வாய்கிழியக் கத்தும் உலகம்.. சர்வதேசம்.. அது உச்சரிக்கும் சனநாயகத்தால்.. ஒரு தொகுதி மக்கள் காட்டும் விருப்பை மதிக்காமல் விடுவது என்பது.. சனநாயகத்தின் சாபக்கேடு. 

இன்றேல்.. சனநாயகத்தின் இந்த பராபட்ச நடைமுறையை இல்லாமல் ஒழிக்க.. சனநாயகத்தை மறுசீரமைத்து.. பெரும்பான்மை இனத்துக்குள் தம் விருப்பு தலைத்து வாழும் நிலையில் இருந்து சிறுபான்மையினரைக் காக்க.. வேண்டும். தமிழ் மக்கள் பிரிந்து செல்லும் உரிமையை வழங்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களுக்குள் சிறுபான்மை இனங்கள்.. தமது விருப்பை தொலைத்து.. வாழ்வது என்றால்.. அதென்ன மண்ணாங்கட்டி.. சனநாயகம். அதை ஏன் மக்கள் அங்கீகரிக்க வேண்டும். இது குறித்து சனநாயகத்தை வலிந்து திணிக்கும் சர்வதேசம் தான் பதில் சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

5 minutes ago, nedukkalapoovan said:

கோத்தா மொத்த இலங்கைக்கும் சனாதிபதியாவது என்பது சனநாயகத்தின் சாபக்கேடு.

என்ன செய்வது?
இதான் ஜனநாயகத்தின் சுயரூபம்.

மதவெறி, இனவெறி தலைதூக்கியுள்ள சொறிலங்கா, ஹிந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஜனநாயகம் என்டுறது சிறுபான்மையினரை அடிமையாக நடத்த உதவும் ஒருகருவியே.

இதில இருந்து விடுபாடோணும் என்டால், உண்மையான ஜனநாயகத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்டால், சிறுபான்மையர் வாழும் பகுதியில முழுமையான சமஸ்டி கட்டமைப்போட கூடிய ஜனநாயகம் தான் ஓரளவு உதவும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி, மதவெறி, குண்டுவெடிப்பு என பல பயமுறுத்தல், அடாவடி மூலம் ஜனாதிபதியானாலும் முன்னைய சண்டித்தனங்களை முடக்கி வைக்காவிட்டால் தானே வலியப்போய் மாட்டிக்கொண்ட மாதிரி ஆகலாம். எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் அநேகமான சிங்களவர் வன்முறைகளிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என்பது காலங்காலமாய் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. 

Link to comment
Share on other sites

8 minutes ago, satan said:

இனவெறி, மதவெறி, குண்டுவெடிப்பு என பல பயமுறுத்தல், அடாவடி மூலம் ஜனாதிபதியானாலும் முன்னைய சண்டித்தனங்களை முடக்கி வைக்காவிட்டால் தானே வலியப்போய் மாட்டிக்கொண்ட மாதிரி ஆகலாம். எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் அநேகமான சிங்களவர் வன்முறைகளிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என்பது காலங்காலமாய் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. 

உண்மை!

பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் கடத்தல், படுகொலை, கொள்ளை, கப்பம், போன்ற மிக மோசமான சமூகவிரோத செயல்களுக்கு ஆதரவானவர்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக காட்டுகிறது. அதனால் தான் போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளியுமான கோட்டாபய ராஜபக்ச என்ற ஒரு மிலேச்ச பயங்கரவாதியை தமது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் பூர்வீக குடிகளான தமிழர்கள் இப்படியான ஒரு சமூகவிரோதக் கும்பலுடன் நிம்மதியாக வாழமுடியாது என்பதால் தங்கள் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யக்கூடிய ஒரு தீர்வை சர்வதேச சமூகத்திடம் கோரலாம்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர்கள் காலதாமதமின்றி விவேகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

Link to comment
Share on other sites

நாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் புதிய  அதிபராக  கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுர  ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தாபய ராஜபக்ச புதிய அதிபராக நாளை காலை பதவியேற்கவுள்ளார் என, முகநூல் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும், இன்று மாலையே புதிய அதிபர் பதவியேற்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41236

பதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவதில் ஹரின் பெர்னான்டோ முழு மூச்சுடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், மேலும் பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகுவர் என்றும் கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41241

நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள

சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா அதிபருக்கு  அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

அதேவேளை மங்கள சமரவீர தனது கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “ என் அன்புக்குரிய நாட்டிற்காக நான் அழுகிறேன். இரட்டை இரத்தினங்களான புத்தர் மற்றும், தர்மத்தின் ஆசீர்வாதமும் சிறிலங்காவுக்கு இருக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41244

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் முடிவுகள் தெரியவில்லை.

ஆயினும், வேறு திரியில் கோத்தவே அதிபர் ஆவர் என்று சொன்னேன்.


அதன் பின்பு தேர்தலை பற்றி ஒன்றுமே எழுதவில்லை.
 

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க மகிந்தவுடன் பேரம் பேசி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

பதவிகளை இராஜினாமா செய்கின்ற ரணில்? மற்றும் பல அமைச்சர்கள்; கூடுகின்றது முக்கிய கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி தொழில்நுட்பத்திறன், விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரீன் பெர்ணான்டோ, தேசிய பொருளாதார கொள்கை வருப்பு இராஜாங்க அமைச்சர் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் இதற்கான அறிவிப்பை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் இராஜினாமா?

பதவியை இராஜினாமா செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின் அவர் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/131425

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

 

 

1 hour ago, போல் said:

இந்த சூழ்நிலையில் பூர்வீக குடிகளான தமிழர்கள் இப்படியான ஒரு சமூகவிரோதக் கும்பலுடன் நிம்மதியாக வாழமுடியாது என்பதால் தங்கள் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யக்கூடிய ஒரு தீர்வை சர்வதேச சமூகத்திடம் கோரலாம்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர்கள் காலதாமதமின்றி விவேகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

இப்படியே மன பால் குடித்து கொண்டு திரியுங்கோ......!!!! அப்படி பெற்று தருவதானால் 4ம் கட்ட ஈழ போரே நடந்து இருக்காது .....அல்லாவிடில் 2009-2015 வரையாவது பெற்று தந்திருக்க வேணும், சீன ஆதரவு ராஜபக்‌ஷவே இருக்கும் போது வராத தீர்வு தம்க்கு ஆதரவான ராஜபக்ச இருக்கும் போது வரும் என நினைப்பது மடத்தனம்ெந்த்ஹு முதல் கவலை யாதெனில்  வடக்கின் அடாவடி மினிஸ்ட்டரிம் இருந்து எமது காணிகளை எப்படி காப்பாற்ற் போகிறோம். அராலி சிவன் கோவில் காணி கைவிட்டு போகாமல் மக்கள் போராடி கொண்டு இருந்த்தார்கள், அது முதலில் கைவிட்டு போகும் போல இருக்கு.

 

Link to comment
Share on other sites

37 minutes ago, Dash said:

இப்படியே மன பால் குடித்து கொண்டு திரியுங்கோ......!!!!

நீங்கள் மனப்பால் குடித்தபடி பிற்போக்குத்தனமா சிந்திக்கின்றது மாதிரியே எல்லாரும் சிந்திப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.

சூழ்நிலைக்கேற்ப அடுத்த நகர்வுகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

Just now, போல் said:

நீங்கள் மனப்பால் குடித்தபடி பிற்போக்குத்தனமா சிந்திக்கின்றது மாதிரியே எல்லாரும் சிந்திப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.

சூழ்நிலைக்கேற்ப அடுத்த நகர்வுகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

அந்த திட்டம் என்னவென்று நீங்கள் குறிப்பிட்டால் எமக்கு கொஞ்சம் தெரிவித்தால் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

6 minutes ago, Dash said:

அந்த திட்டம் என்னவென்று நீங்கள் குறிப்பிட்டால் எமக்கு கொஞ்சம் தெரிவித்தால் பேருதவியாக இருக்கும்.

இக்கட்டான சூழ்நிலைகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும்.
குறை சொல்வதை விட்டுவிட்டு நீங்களே உங்கள் திட்டத்தை / எண்ணங்களைச் ஏன் சொல்லக்கூடாது?

நீங்கள் தற்போதைய சூழ்நிலையில் ஆதங்கப்பட்டு குறை சொல்லிக் கருத்தெழுதியிருந்தால் அதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.  

இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுமை  முக்கியம் DASH அவர்களே!

நாம் இருக்கும் சூழ்நிலையில் எமக்கு பொறுமை அவசியமாகிறது. பொறுமையும் நம்பிக்கையும் இல்லையென்றால் என்றோ துவண்டு வீழ்ந்திருப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு😀 ....தமிழ் மக்கள் இவரை பகைக்காமல்,இவரோடு உறவாடி தமக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எதிர்த்து நிற்பதால் இழப்புகளும்,தோல்விகளும் தான் அதிகம்...முஸ்லிம்களை பாருங்கள் தேர்தலில் சஜீத்திற்கு வோட் போட்டு  விட்டு ,கோத்தா வென்றதும் அவரை வாழ்த்தி வெடி கொளுத்துகிறார்கள் ...எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்யாமல்,பணிந்து போய் எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எந்த நேரமும் நேருக்கு,நேர் மொத வேண்டும் என்றில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா தான் சொன்னபடி வெறும் சிங்கள மக்களின் வாக்குகளால் வென்றுவிட்ட நிலையில்... தமிழர்கள் பணிந்து குனிந்து எதையும் பெற முடியாது என்பதே யதார்த்தம்.

இருக்கும் தெரிவு... போர்க்குற்றவாளியான.. கோத்தாவை பிற நாடுகளில் போர்க்குற்றம் இழைத்த அரசுத் தலைவர்களை தண்டித்தது போல் சர்வதேசம் தண்டிக்க கோருவதும்.. அதற்கான அழுத்தத்தை ஏற்படுத்துவம் தான்.

ஏலவே.. போர்க்குற்றவாளிகளான.. மிலேசவிச்.. சதாம் குசைன்.. ஹடாபி உட்பட பலர் போர்க்குற்றங்களுக்கு சர்வதேசத்தால் தண்டிக்கப்பட்டிருந்தனர்.

பிபிசி இன்றைய இந்த வெற்றிச் செய்தியோடு.. இவரின் மனித உரிமை மீறல்கள்.. குறித்துக் குறிப்பிட்டுள்ளதோடு.. கடந்த கால போர்க்கால காணொளியையும் இணைத்துள்ளது.

ஆனால்.. நம்மவர்கள்.. பணிவோம்.. குனிவோம்.. ஏதாவது தூக்கிப் போடுவார்கள் என்று காத்துக்கிடக்கச் சொல்கிறார்கள்.

He is popular among Sinhalese-dominated parts of the island, but is disliked by Tamils because of his alleged links to human rights abuses carried out during the final stages of the civil war.

https://www.bbc.co.uk/news/world-asia-50449677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

கோத்தாவுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு😀 ....தமிழ் மக்கள் இவரை பகைக்காமல்,இவரோடு உறவாடி தமக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எதிர்த்து நிற்பதால் இழப்புகளும்,தோல்விகளும் தான் அதிகம்...முஸ்லிம்களை பாருங்கள் தேர்தலில் சஜீத்திற்கு வோட் போட்டு  விட்டு ,கோத்தா வென்றதும் அவரை வாழ்த்தி வெடி கொளுத்துகிறார்கள் ...எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்யாமல்,பணிந்து போய் எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எந்த நேரமும் நேருக்கு,நேர் மொத வேண்டும் என்றில்லை 
 

ரதி,

நீங்கள் எதிர்வு கூறியமாதிரி மட்டக்களப்பு, மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அம்மான், பிள்ளையான், வியாழன் பின்னால் போய் கோத்தாவுக்கு வாக்களிக்கவில்லையே!

கோத்தா வரக்கூடாது என்று வாக்களித்த மக்களை சரணாகதி அரசியல் செய்யச் சொல்வதை பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், பச்சோந்தித்தனம் என்று அரசியலாளர்கள் சொல்வார்கள்😜

இதை இன்னொரு திரியில் கவிஞர் பொயற்றுக்கும் சொல்லியுள்ளேன்.😎

தமிழ், முஸ்லிம் மக்கள்  தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமை மூலம் தெளிவாகவும், துணிச்சலாகவும் சொன்ன செய்திக்கு அவர்களுக்குதான் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கவேண்டும்.

மக்களின் உணர்வுகளை மதிக்காது அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் மக்களின் மனங்களை மாற்றமாட்டார்கள். 2010, 2015, 2019 தேர்தல்களில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மாறாமல் தமது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்கள். அதே போல் சிங்களவர்களும் தங்களது பேரினவாதத்தின் பற்றுதலை தெளிவாகவே காட்டியுள்ளனர்.

சலுகைகளுக்காக வாக்குப்போடும் அளவிற்கு மக்கள் இறங்கிவராதபோது, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க என்ன செய்யவேண்டும் என்றே கட்சிகள் சிந்திக்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.