Jump to content

பிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை!

 

ஜனாதிபதித் தேர்தல் ஏற்பட்ட தோல்வியையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது.

அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இக் கூட்டம் அவசரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

cabinet.jpg

 

https://www.virakesari.lk/article/69135

Link to comment
Share on other sites

நிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா

நிதியமைச்சர் மங்கள சமரவீர, தமது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நதயமசசர-மஙகள-சமரவர-இரஜனம/175-241102

அமைச்சர் அஜித் பீ. பெரேராவும் இராஜினாமா

தமது அமைச்சு பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்வதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாநாயகத்துக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் ஐ.தே.கவுடன் இணைந்து போராடவுள்ளதாகவும் அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அமசசர-அஜத-ப-பரரவம-இரஜனம/175-241101

Link to comment
Share on other sites

கூடியவர்கள் இன்னும் அப்பம் சாப்பிட்டு முடியவில்லையோ?

மகிந்தவுடன் ரணில் மேற்கொள்ள முயற்சித்த ஒப்பந்தம் சரிவரவில்லையோ?

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

கூடியவர்கள் இன்னும் அப்பம் சாப்பிட்டு முடியவில்லையோ?

அது பால் இல்லாத அப்பம். கட்டைச் சம்பலுடன் விழுங்குவது சற்றுக் கடினம். 😂 

Link to comment
Share on other sites

NW04.jpg?itok=3-AF2l61

 

பொதுத் தேர்தலுக்குச் செல்ல அமைச்சரவையில் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபயவுடன் பிரதமர் இன்று சந்திப்பு

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அரச அதிகாரத்தை எவ்வாறு கையளிப்பது மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுவும் கூடி அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோகணேசன்,

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, "புதிய பாராளுமன்ற தேர்தல்" ஒன்றுக்குச் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராய்ந்து முடிவு செய்யப்படவுள்ளது.

தொடர்ந்த அரசாங்கமாக இழு பறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கினர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.தே.கவின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச இராஜனாமா செய்துள்ளதுடன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, அஜித் பி பெரேரா, மங்கள சமரவீர, ஹரின் பெர்ணான்டோ, கபீர் ஹாசீம், ருவான் விஜேவர்தன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

https://www.thinakaran.lk/2019/11/18/உள்நாடு/44022/2019-ஜனாதிபதி-தேர்தல்-முடிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.