Jump to content

இலங்கை அதிபராகும் கோட்டாபய: வைகோ, ராமதாஸ், கொளத்தூர் மணி, ஜெயக்குமார் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபராகும் கோட்டாபய: வைகோ, ராமதாஸ், கொளத்தூர் மணி, ஜெயக்குமார் கூறுவது என்ன?

இலங்கை அதிபராகும் கோட்டாபய: என்ன சொல்கிறார்கள் தமிழக தலைவர்கள்?

இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று உள்ளதால் இலங்கைத்தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுவதாகத் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, முன்னாள் அதிபர் ராஜபக்ஷவின் சகோதரர் ஆவார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாசா இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி என்பது தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.

''எந்த சிங்களவர் தேர்வாகியிருந்தாலும் தமிழர்களின் நலன் குறித்து யோசிக்கவேண்டியிருக்கும். ஆனால் கோட்டாபய தேர்வாகியுள்ளது தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தனக்கு எதிராக வாக்களித்த தமிழர்களை அவர் எப்படி நடத்துவார் என்ற அச்சம் உள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து குரல்கொடுப்பதால், அந்த அரசாங்கங்களின் எதிர்ப்பு கோட்டபாயவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

இலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது நடந்து விட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Dr. S. Ramadoss

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Dr. S. Ramadoss

''இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. தமிழினத்தின் எதிரியான கோட்டாபய ராஜபக்‌ஷ அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது,''எனத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நலன் காக்கப்படும் எனப் பிரசாரம் செய்த சஜித் பிரேமதாசாவின் தோல்வி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறிய மதிமுக தலைவர் வைகோ, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நாள் தமிழர்களுக்கு மோசமான நாள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச தமிழர் அமைப்புகள் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறையுடன் செயல்படவேண்டும் தெரிவித்துள்ளார். கடுமையான காலங்களைக் கடந்துவந்த தமிழினம் காக்கப்படவேண்டும் என்றார்.

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தமிழர்களின் பாதுகாப்புக்குத் தமிழக அரசு தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றார். ''நம் தொப்புள்கொடி உறவாக இருக்கக்கூடிய தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும்,'' எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-50452449

Link to comment
Share on other sites

அண்ணளவாக 68 மில்லியன்கள் உறவுகள் என்றும் ஈழமக்களுக்கு பலமாக உறவாக இருப்பார்கள். !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல் ராஜபக்‌ஷ அறிக்கை

நமால் ராஜபக்‌ஷபடத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமால் ரபடத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்களை பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் அவதானித்ததாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ததையும் அவர் தனது அறிக்கையில் நினைவூட்டினார்.

இந்த விஜயத்தின் போது குறித்த குழுவினர் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

நமால்படத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

இந்த விஜயத்தில் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டிருந்த அதேவேளை, தமது நிலைப்பாட்டையும் அவர் தெளிவுற அறிந்துக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தமது நிலைப்பாட்டை அறிந்து தொல்.திருமாவளவன் இன்று இவ்வாறு சந்தர்ப்பாத அறிக்கையை விடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ கூறுகின்றார்.

தமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது என நாமல் ராஜபக்ஷ அனைத்து தமிழக அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து, இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தான் தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50469958

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.