Jump to content

ஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

 In இலங்கை      November 17, 2019 2:35 pm GMT      0 Comments      1692      by : Litharsan

Gotabhaya-Rajapaksa-New-President.jpg

ஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிடம் வடகிழக்கு சிவில் சமூக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுத்து அதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் எனவும் சிவில் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒரு வரலாற்று பதிவை ஏற்படுத்தியுள்ளோம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழ் மக்கள் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தனக்கான உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

இலங்கையின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு உரித்துடைய தனியான இனக் குழுமம் என்ற அடிப்படையில் இலங்கையில் தனியான தாயகம், மொழி, பண்பாடு, கலாசார வரலாற்றைக் கொண்ட இனம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆகிய நாம் எமது தனித்துவத்தை மேலும் நிரூபித்துள்ளோம். எழுபது ஆண்டுகளைக் கடந்தும் தமிழர் தேசம் மீண்டும் தனது தனித்துவத்துடன் தனியாக நிமிர்ந்து நிற்கிறது.

அகிம்சை போராட்டக் காலத்திலும், ஆயுதப் போராட்ட காலத்திலும் தமிழ் மக்கள் எந்த நிலைப்பாட்டை எடுத்தார்களோ அதே நிலைப்பாட்டை யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கையில் எடுத்து பயணிக்கின்றனர். நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்கள் தங்களது உரிமைக்காக மீண்டும் தன்னெழுச்சியாக ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

இதன் ஊடாக தமிழர் தேசம் சிங்கள தேசத்திற்கு மீண்டும் மீண்டும் தங்களது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை பறைசாற்றியுள்ளது. தமிழர்கள் இலங்கை பூமிப்பந்தில் தங்களது வாக்குகளைக் கொண்டு ஜனநாயக ரீதியில் ஒரு வரைபடத்தை மீண்டும் உருவாக்கி காட்டியுள்ளனர்.

இதன் ஊடாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் கோரி நிற்பது அபிவிருத்தியையோ அல்லது சலுகைகளையோ அல்ல. சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வையே வேண்டி நிற்கின்றனர்.

இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் இலங்கை நாடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காது எந்தவித நிரந்தர அபிவிருத்தியையோ நல்லிணக்கத்தையோ கட்டியெழுப்ப முடியாது.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உயிர் பலிகளும் தியாகங்களும் மதிக்கப்பட்டு அவர்களது தாயக பூமியில் அவர்கள் முழு அதிகாரம் கொண்ட மக்களாக ஒரு மித்த நாட்டுக்குள் வாழ்வதற்கு பதவி ஏற்கும் அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வடகிழக்கு தமிழர் தேசத்துக்கு தனது நேசக்கரத்தை நீட்டி இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முன்வர வேண்டும்.

எனவே இந்த தேர்தலில் தமிழ் மக்களின் முடிவை முடிந்த முடிவாக எடுத்து இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் சிறுபான்மை இன மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைத்து அல்லது கடந்த அரசு ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கி ஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கையில் புதிதாக பதவி ஏற்கவுள்ள ஜனாதிபதி அவர்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜனநாயக-ரீதியில்-பிளவுபட்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.