Jump to content

மாத்தறை பாலட்டுவவில் இருந்து நாட்டின் ஜனாதிபதி வரை...


Recommended Posts

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

1949 ஜூன் 20ம் திகதி மாத்தறை, பாலட்டுவவில் பிறந்த கோட்டாபய ராஜபக்‌ஷ சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தண்டினா திஸாநாயக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் உள்ள 9 பேரில் இவர் ஐந்தாமவர்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்ற கோட்டாபய 1971 இல் இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். அவரது இராணுவ சேவையின் போது பாதுகாப்புக் கல்வி தொடர்பான முதுமாணி பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்றார். அத்துடன் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உயர் பயிற்சிகளைப் பெற்றார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவற்றுக்குத் தலைமை தாங்கியமைக்காக அவருக்கு 'ரணவிக்ரம' பதக்கமும் தீரம் மற்றும் போரில் திறமை காட்டியமைக்காக 'ரணசூர' பதக்கமும் இவருக்குக் கிடைத்தன.

அத்துடன் செயலில் தைரியம் காட்டிய இராணுவத் தளபதி என்ற பாராட்டு இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. 1991 இல் இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக இருந்து ஓய்வு பெற்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்று தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப் பின்படிப்பு டிப்ளோமா பெற்றார்.

அதன் பின்னர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற அவர், கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லொயோலா சட்டக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப தொழில் சார்பாளராக பணியாற்றினார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அயோமா என்ற மனைவியும் மனோஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். மனோஜ் ராஜபக்ஷ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள டீயூக் பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியல் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகிய இரு துறைகளிலும் பட்டம் பெற்றவர். அத்துடன் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முறைமைப் பொறியியல் முதுமாணி பட்டம் பெற்றுள்ளதுடன் நாசா நிறுவனத்தில் ஆய்வுகூடத்தில் பணி புரிகிறார். மனோஜின் மனைவியான செவ்வந்தி வினோனா பல்கலைக்கழகத்தில் உயிரணு மற்றும் மூலக் கூற்று உயிரி விஞ்ஞான பட்டதாரியாவார். இவர் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணிப்பாளராக பணிபுரிகிறார்.

2005 தேர்தலையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை திரும்பினார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானதையடுத்து அவரது பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய நியமிக்கப்பட்டார். இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த பயங்கரவாத யுத்தத்தை அவர் தனது நிபுணத்துவ முறையில், இராணுவ தந்திரோபாயத்துடன் திறமையாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார். யுத்தம் முடிவுற்றதும் நாட்டில் ஸ்திர நிலையை அவர் துரித கதியில் ஏற்படுத்தினார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்தினார். யுத்தத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் கண்ணி வெடியகற்றும் செயற்பாடுகளை அவர் விரைவுபடுத்தினார். அதேநேரம் வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் துரித கதியில் குடியமர்த்தினார். அத்துடன் 13 ஆயிரத்து 500 முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளை வெற்றிகரமாக புனவர்வாழ்வுக்குட்படுத்தினார். 2009 இல் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2010 ஏப்ரல் 25ம் திகதி பாதுகாப்பு செயலாளர் பதவிக்குப் புறம்பாக நாட்டின் நகர அபிவிருத்தி திட்டமும் அவரும் பொறுப்பளிக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் நகரங்களை மெருகுபடுத்தியதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர் மேம்படுத்தினார்.

அதனையடுத்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 ஜனவரி 9ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவியைத் துறந்தார். அதன் பின் ‘வியர்மக’ (சிறந்த எதிர்காலத்துக்கான தொழில் சார்பாளர்கள்) என்ற அமைப்பினை அவர் உருவாக்கினார். வியர்மக வளர்ந்து வலுப்பெற்று கோட்டாபயவை எதிர்கால தலைவராக உருவாக்க பெரிதும் உதவியது.

2019 இல் கோட்டாபய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த நவம்பர் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://www.thinakaran.lk/2019/11/18/கட்டுரைகள்/44018/மக்கள்-வழங்கிய-தீர்க்கமான-ஆணை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.