Jump to content

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

Sivajilingam.jpg

 

மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் அவருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

ஆகவே கோத்தாபயவிடம் அனுமதியை நாம் கேட்கவில்லை.ஆனால் இதற்கு இடையூறாக அரச தரப்பு இருக்க வேண்டாம்.தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாம்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதனை மீறி அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

பின்னர் அனைத்து இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுச்டிகபடும்.எந்த இடத்திலாவது மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் தடை செய்யப்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக நான் அந்த இடத்துக்கு வந்து நான் அந்த துப்பரவு பணிகளுக்கு ஆதரவு கொடுப்பேன்.இந்த தடைகள் உடைத்தெறியப்பட்டு மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.

தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களையும் நினைவு கூறுவோம்.விடுதலைக்காக போராடிய அனைவரையும் நெஞ்சில் இருத்தி நினைவு கூறுவோம்.மக்களோடு மக்களாக அனைவரும் உணர்வு பூர்வமாக மாவீரர்  தினம் அனுஸ்டிக்கப் படும்.என்றார்.

https://www.virakesari.lk/article/69191

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்

இந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. இந்த கூத்தாடி இப்படி பலதும் செய்து தன்னை பிரபலப்படுத்த முயற்சிக்குது. தேர்தல் வெடி பலமாய் வெடிக்கேலை அடுத்த வெடிக்கு பீடிகை போடுறார்.

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் வாயை மூடிக்கொண்டிருந்தால், மாரித் தவளை  போன்று கத்தாமல் இருந்தால், நிறைய சாதிக்க முடியும்! 

“நுணலும் தன் வாயால் கெடும்” என்பது விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் நிறையவே பொருந்தும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.

உங்கள் கருத்துடன் முரண்பட முடியாது ...
ஒரு பத்துபேர் காணாமல் போய்  இன்னும் சிலர் சிறை போவதிலும் விட.
நாம் மாவீரர்களை மனதில் வணங்கிவிட்டு இருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.


ஆனால் மனதில் இன்னொரு கேள்வியும் வருகிறது 
அவன் அடிமை ஆக்குமுன்னமே ... நாம் எப்படி அடிமையாக வாழ்வதுக்கு என்பதற்கு பயிற்சி எடுப்பது....  என்பது முட்டாள்தனமாக தெரிகிறது. 

எந்த கையும் இல்லாமல் வாழலாம் 
தன் நம்பிக்கை இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது.
சாப்பிட்டுவிட்டு மூச்சுவிடுவதை சிறையிலும் செய்யலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் கடந்த காலத்தை வெகு இலகுவாக மறந்து விடுகிறார்கள். அதற்கு யாழில் உள்ளோரும் விதிவிலக்கல்ல.

இதே கோத்தாவின் அண்ணன் சனாதிபதியாக இருந்த போது மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதியில்லை. இதே சிவாஜிலிங்கம்.. அப்போதும்.. வாழைக்குத்தியோடு பந்தம் ஏற்றி மாவீரர்களை மக்களை நினைவு கூர்ந்தார்.. தன்னால் இயன்ற அளவு அதனை செய்தார்.. கடும் கெடுபிடிகள் மத்தியில்.

நாம் அதிகாரத்திமிருக்கு அடங்கிப்போவதால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. பலஸ்தீனியர்கள்.. இஸ்ரேலின் பலத்துக்கும் அதிகாரத் திமிருக்கும் அடங்கிப் போயிருந்தால்.. இன்று பலஸ்தீன மக்களுக்கு என்று ஒரு அடையாள தேசம் கூட பிறந்திருக்காது. 

சிவாஜி லிங்கம்.. சம் சும் மாவை கும்பலை விட அதிகம் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யச் செய்கிறார் என்றே நான் கருதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையற்ற வீராப்பு. இவரே இடைஞ்சல் வரணும் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது

 

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.

இவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......

மகிந்த கூட்டத்திடம் வாங்கின காசுக்கு குரைக்கிறார் இவர் இப்படி மாரித்தவக்கை போல் கத்துவது போல் கத்தினால் அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ் சனத்துக்கு தான் பாதிப்பு அதிலும் புனர்வாழ்வு எடுத்த போராளிகள் வாழ்வு இன்னும் கேள்வி குறியாகும் தெரிந்தும் தெரிந்து கொண்டு மற்றவன் வாழ்க்கையை கெடுப்பதுக்கு என்று பிறந்து இருக்கு சாவொண்டு வருகிதுல்லை இப்படியானவர்களுக்கு .

கெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா ? எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

கெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா ? எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .

உலகில் நமக்கு யாருமே இல்லை என்று நாம் சொல்லிக்கொள்ள நாமே தான் காரணம்.

ஒன்றில்.. ஹிந்தியாவை நம்புவோம். இல்லை அகதியாய் போய்க்குந்தின.. மேற்குலகை நம்புவோம். எல்லாரும் கைவிட்டால்.. அடிச்சு உதைக்கிற சிங்களவனே தஞ்சம் என்று ஆவோம். இது தான் எங்களுக்கு உலகில் யாருமில்லை என்பதற்கான காரணம்.

பலஸ்தீனர்கள் அப்படியல்ல. அவர்கள் உலகில் எல்லாப் பகுதிகளிலும் தமது நேச சக்திகளைக் கொண்டிருக்க பிரச்சாரங்களையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.

பாகிஸ்தானும் அவர்களுக்கு ஆதரவு.. இந்திரா காந்தியின் ஹிந்தியாவும் அவர்களுக்கு ஆதரவு. பிரேசிலும் ஆதரவு.. ஆர்ஜன்டீனாவும் ஆதரவு. சீனாவும் ஆதரவு ரஷ்சியாவும் ஆதரவு. இந்த அணுகுமுறையே.. பின்னர் மேற்குலகும் அவர்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

நாம் என்ன செய்கிறோம்.. ஒன்றில்.. ஹிந்தியா.. இல்லை அமெரிக்கா. இந்த இரண்டுமே எமக்கான நேச சக்தி கிடையாது. அது பிராந்திய நலன் விரும்பிகள் அவ்வளவே.

எமது விடுதலைப் போராட்டத்தை இலகுவாக பயங்கரவாதம் என்று சொல்லி நசுக்க... நாம்.. சர்வதேச மயப்படாமையும் ஒரு காரணம். நாம் மேற்குலக மயமானதை சர்வதேச மயம் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு இது.

மேலும்.. கோத்தா சிவாஜி கத்தித்தான்.. மாவீரர் தினத்தை தடுப்பார் என்றில்லை. மகிந்தவே தடுத்தவர் தான். ரணில் அனுமதித்த போதும் கடுமையாக எதிர்த்தவர்கள் மகிந்த கும்பல். எனவே சிவாஜின் எதிர்பார்ப்பு ஒன்றும் தவறல்ல.

கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேன் என்றவர் சிவாஜி. ஆனால்.. கோத்தாவை எதிர்த்தவர்களாக காட்டிக்கொண்ட.. சம் சும் கும்பல்.. ஆனந்த சங்கரி.. போன்ற காட்டிக்கொடுப்பாளர்கள்.. ஓடிப்போய் வாழ்த்தி விட்டார்கள்.

இப்ப என்ன மலையகத்தில் தமிழன் மீது அடி உதை.  இதுக்காகவா வாழ்த்தினீர்கள்.

மகிந்த கும்பலைப் பற்றிய சரியான புரிதல் இன்மையே.. சிவாஜி மீதான அவதூறு என்றே நான் கருதுகிறேன். அதற்காக சிவாஜி தூய்மையான அரசியல்வாதி என்று சொல்லவில்லை. அவர் எதை எதிர்த்தாரோ.. அது அப்படியே நிகழ் வாய்ப்பு இருக்கிறது வெளிப்படை. ஆனால்.. எம்மில் சிலர்.. கோத்தா மறந்து போய் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிப்பார் என்று கனவு காண்பது தான் சிவாஜியின் கூத்தை விட மோசமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

சிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.

இவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.

எமது  அரசியல் தலைவர்களின் 70களுக்கு பின்னரான வாய்ச்சவால்களும்,உசுப்பேத்தல்களுமே  ஈழத்தமிழின அழிவுக்கான காரணங்கள்.
 
இந்தா மாவை இப்பவும் போராட்டம் வெடிக்கும் எண்டு கத்திக்கொண்டு திரியுது. இதை கேட்ட சிங்களவன் என்ன செய்வான்?????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.