Jump to content

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம்


Recommended Posts

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுகள் பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பாகும். சிறுபான்மை தமிழ் மக்களிடம் இந்த அரசு மோசமாக தோல்யடைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கவும், அவர்களை அரசியலுக்குள் சம குடிமக்களாக இணைக்கவும் இந்த தேர்தல் முடிவு எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அவர்களின் விவகாரங்களில் சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் அவசியத்தை தீவிரமாக வலியுறுத்துகின்றன.

கோட்டாபய பதவியேற்பு. Image captionகோட்டாபய பதவியேற்பு.

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையே அவர்களைப் பாதுகாக்கும். அத்துடன், அவர்களின் நிலம், மொழி, கலாசாரத்தையும் பாதுகாக்க சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது எனவும் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவது தீவில் குற்றமிழைத்தோருக்கு தண்டனையில் இருந்து விதிவிலக்களிக்கும் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது.

தற்போதைய உலக ஒழுங்கால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விலக்கும் அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

இந்த தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றி பெற்றுள்ளபோதிலும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசு நிர்வாகத்தின் மாற்றத்தால் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க போராடியவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் துணையிருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

"கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நானும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-50457605

 

My statement on the election of former wartime defence chief Gotabaya Rajapaksa as the President of #SriLanka -Logan Kanapathy

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

?type=3&theater

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கனடாவில் பேஸ்புக்  பச்சோந்திகள்...கோட்டா  நேர்மை,இனவாதம் அற்றவர் என்றூ ஒரே கொக்கரிப்பு...சிலது கோவணத்தையும் கழட்டிபோட்டு பொடியளை கோட்டாவோடை சேர்ந்து எலக்சன் கேட்கட்டாம்.....புளிச்சல் ஏவறைவிட ஊருக்குக்குப் போட்டுவந்து அவிழ்க்கிறவை....எல்லாம் நானே ... போதாக்குறைக்ககு பென்சன் குஞ்சுகளும் ...ஆமாப் போடுகினம்...

Link to comment
Share on other sites

22 hours ago, alvayan said:

இங்கு கனடாவில் பேஸ்புக்  பச்சோந்திகள்...கோட்டா  நேர்மை,இனவாதம் அற்றவர் என்றூ ஒரே கொக்கரிப்பு...சிலது கோவணத்தையும் கழட்டிபோட்டு பொடியளை கோட்டாவோடை சேர்ந்து எலக்சன் கேட்கட்டாம்.....புளிச்சல் ஏவறைவிட ஊருக்குக்குப் போட்டுவந்து அவிழ்க்கிறவை....எல்லாம் நானே ... போதாக்குறைக்ககு பென்சன் குஞ்சுகளும் ...ஆமாப் போடுகினம்...

உங்களிடம் ஒரு கேள்வி. 

யுத்தம் முடிந்து ரத்தம் காய்வதற்க்குள் யுத்தத்தை வழி நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி நமதாட்கள் கேட்டவைள்.  நாங்களும் அதன்படி நடந்தோம்.  இப்ப மட்டும் இவனோட சேர்ந்து வேலைசெய்வதில் ஏன் பிழை கண்டுபிடிகிரியள் ???  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

உங்களிடம் ஒரு கேள்வி. 

யுத்தம் முடிந்து ரத்தம் காய்வதற்க்குள் யுத்தத்தை வழி நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி நமதாட்கள் கேட்டவைள்.  நாங்களும் அதன்படி நடந்தோம்.  இப்ப மட்டும் இவனோட சேர்ந்து வேலைசெய்வதில் ஏன் பிழை கண்டுபிடிகிரியள் ???  

அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..

Link to comment
Share on other sites

18 hours ago, alvayan said:

அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..

""எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை ""

இதுவா உங்களின் விருப்பம்  ??  

தென் தமிழீழ எல்லைப்புற கிராமங்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? 

வன்னியின் பெற்றோரற்ற குழந்தைகளின் நிலை தெரியுமா உங்களுக்கு ? 

உழைப்பாளிகழில்லாத குடும்பங்களின் நிலைதான் உங்களுக்கு தெரியுமா?  

காடுகளின் நடுவே ரெண்டு தகரமும் கிழிஞ்ச பொலித்தீன்,  தறப்பாழ் கூரையின் கீழ் வாழும் மக்களின் நிலை தேடியுமா உங்களுக்கு ? 

 

சும்மா விதண்டாவாதம் கதைக்காதீர்கள்.  முதலில் தமிழ் மக்களின் அன்றாட,  அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு ஒரு வழி காட்டுங்கள்.  மக்கள் பொருளாதார ரிதியிலும், சமூக,  உள ரீதியில் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே எங்கள் எல்லோரது விருப்பமும் சாத்தியமாகும்.  

இவற்றிட்கு ஒரு வழியை காட்டிவிட்டு அடுத்த அடியை எல்லோரும் சேர்ந்தே அடுத்து வைப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maharajah said:

""எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை ""

இதுவா உங்களின் விருப்பம்  ??  

தென் தமிழீழ எல்லைப்புற கிராமங்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? 

வன்னியின் பெற்றோரற்ற குழந்தைகளின் நிலை தெரியுமா உங்களுக்கு ? 

உழைப்பாளிகழில்லாத குடும்பங்களின் நிலைதான் உங்களுக்கு தெரியுமா?  

காடுகளின் நடுவே ரெண்டு தகரமும் கிழிஞ்ச பொலித்தீன்,  தறப்பாழ் கூரையின் கீழ் வாழும் மக்களின் நிலை தேடியுமா உங்களுக்கு ? 

 

சும்மா விதண்டாவாதம் கதைக்காதீர்கள்.  முதலில் தமிழ் மக்களின் அன்றாட,  அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு ஒரு வழி காட்டுங்கள்.  மக்கள் பொருளாதார ரிதியிலும், சமூக,  உள ரீதியில் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே எங்கள் எல்லோரது விருப்பமும் சாத்தியமாகும்.  

இவற்றிட்கு ஒரு வழியை காட்டிவிட்டு அடுத்த அடியை எல்லோரும் சேர்ந்தே அடுத்து வைப்போம். 

அப்ப கோத்தா வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுமோ...அல்லது ஆதரவாளர் சிலருக்கு நன்மை கிடைக்குமோ....சம்  சும்மிடம் நிறைய வசதி இருக்கே கொடி பிடிக்கும் உங்களால் கொமிசன் பிடித்துக் கொண்டும் உதவலாமே.../எங்களுக்கு எல்லாமே தெரியும்....உதவுகிறோம்....அதற்கு இடைஞ்சல் உங்களைப் போன்ற கொடி பிடிப்பாளர்களே..

Link to comment
Share on other sites

6 hours ago, alvayan said:

அப்ப கோத்தா வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுமோ...அல்லது ஆதரவாளர் சிலருக்கு நன்மை கிடைக்குமோ....சம்  சும்மிடம் நிறைய வசதி இருக்கே கொடி பிடிக்கும் உங்களால் கொமிசன் பிடித்துக் கொண்டும் உதவலாமே.../எங்களுக்கு எல்லாமே தெரியும்....உதவுகிறோம்....அதற்கு இடைஞ்சல் உங்களைப் போன்ற கொடி பிடிப்பாளர்களே..

அப்படியல்ல அல்வாயான், 

நான் சொல்வது மக்களின் எதிர்காலம் தொடர்பானது.  கடந்த 10 வருடங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும் என நம்பி (? ) காலம் கடத்திவிட்டோம்.  ஒன்றுமே நடக்கவில்லை.

இனி எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு மக்களின் அட்டிப்படை வசதிகளையாவது பார்ப்போம் என்கிறேன்.  ஏனென்றால் இனி ஒன்றயுமே எதிர்பார்க்க முடியாது அல்லவா.  இல்லாவிட்டால் இன்னும் 10 வருடங்கள்  கழிந்தால்,  ஏற்கனவே அழிந்துபோயுள்ள மக்களின் நிலை எப்படி இருக்கும் என  சற்று எண்ணிப்பாருங்கள்.  

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.