Jump to content

பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை’


Recommended Posts

-க. அகரன், செல்வநாயகம் ரவிசாந்

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு தான் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லையெனவும் கூறினார்.

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழத்துத் தெரிவித்து அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒரு சிலர், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு கொடியின் கீழ் இணைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட நடவடிக்கையானது, வகுப்புவாதப் பாதையில் பிரசாரமாக நகர்வதை உணர்ந்த தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லையெனவும், அதற்காக மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை என தான் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்தேறிய தேர்தல், தான் நினைத்தது சரியென நிரூபித்துக் காட்டியுள்ளதெனத் தெரிவித்துள்ள ஆனந்த சங்கரி, உள்ளூராட்சி, பொதுத்தேர்தல்கள் மட்டுமன்றி சகல விடயங்களிலும் இனவாதம் தலைதூக்கிய போதெல்லாம் தான் வெறுப்படைந்திருந்தது நீங்கள் அறியாததல்லவெனவும் கூறியுள்ளார்.

ஒரு குழுவினர் ஒன்றிணைந்து, தாங்கள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், தமது கோரிக்கைகள் 13ஐயும் நிறைவேற்ற வேண்டுமெனக் கூறியிருந்தனரென ஞாபகமூட்டியுள்ள அவர், அக்குழுவில் பலர் இருந்தபோதும், ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் கூட தம்முடன் இணையுமாறு தன்னிடம் கோரவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் தொடர்பு கொண்டு இணையுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தால், நிச்சயமாக தான் அவர்களுடன் இணைந்திருக்க மாட்டேனெனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் முன்வைத்த 13 கோரிக்கைகளில் முதலாவதே சர்ச்சைக்குரிய இனப் பிரச்சினை பற்றியதாகுமெனவும் கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கானத் தீர்வை, தாங்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கின்ற காலத்திலேயே நிறைவேற்றுவீர்கள் எனத் திடமாக நம்புவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பிரசாரத்தில்-கலந்துகொள்ளாமைக்கு-மன்னிப்புக்-கோரவேண்டிய-அவசியமில்லை/71-241141

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி ஐயாவுக்கு தமிழர்கள் தன்னை மதிக்கேல என்ற கவலை!
அதோட வாழ்த்தையும் சொல்லுறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

தன்னுடன் தொடர்பு கொண்டு இணையுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தால், நிச்சயமாக தான் அவர்களுடன் இணைந்திருக்க மாட்டேனெனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் முன்வைத்த 13 கோரிக்கைகளில் முதலாவதே சர்ச்சைக்குரிய இனப் பிரச்சினை பற்றியதாகுமெனவும் கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கானத் தீர்வை, தாங்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கின்ற காலத்திலேயே நிறைவேற்றுவீர்கள் எனத் திடமாக நம்புவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பி ஒரு தடவை தான் சொன்னதை வாசிப்பாராக ஆனந்த சங்கரியார். 

இணைய மாட்டாதவர் கூப்பிடேல என்று  புலம்புறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.