Jump to content

அரிய பறவை


Recommended Posts

Dkn_Tamil_News_2019_Nov14__96004664897919.jpg

 

முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின.

சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள்.

அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.

ஆனால் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வசிக்கும் ‘கேரியன் காகம்’ பச்சை, ஊதா கலந்த நிறங்களில் இருக்கும். அவற்றைப் பார்த்த வுடனே கிளி என்று நினைப்போம். தவிர,  நியூசிலாந்து, அயர் லாந்து. பிரிட்டனில் வாழும் ரூக் (Rook)  என்ற இன காக்கையும் ஊதா கலந்த நிறத்தில் இருக்கும். இப்படி காகத்தையும், அதன் இனவகைகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். அதே நேரத்தில் அழிந்து வரும் காகங்களும் இருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளாக ஹவாய் காடுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் 2002-இல் அழிந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது. பிறகு சில இடங்களில் அவை தென்பட்டன. தற் போதைய கணக்கெடுப் பின்படி 114 ஹவாயன் காகங்கள் எஞ்சியிருக்கின்றன. ஓர் அரிய பறவையாக மாறிவிட்டது ஹவாயன் காகம்.  இந்தக் காகத்தை ஹவாயில் வாழும் பழங்குடி மக்கள் தெய்வமாகக் கும்பிடுகின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541760

 

 

Just now, ampanai said:

ஆயிரம் ஆண்டுகளாக ஹவாய் காடுகளில் வாழ்ந்துவந்த ஹவாயன் காகம் 2002-இல் அழிந்து விட்டதாக ஒரு செய்தி வந்தது.

Hawaiian crow

Corvus hawaiiensis FWS.jpg

 

https://en.wikipedia.org/wiki/Hawaiian_crow

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

இந்தக் காகத்தை ஹவாயில் வாழும் பழங்குடி மக்கள் தெய்வமாகக் கும்பிடுகின்றனர்.

Bildergebnis für சனி பகவானின் வாகனம்

Bildergebnis für சனி பகவானின் வாகனம்

நாங்களும் விரதம் இருக்கிற நாட்களில்... 
காகத்துக்கு சோறு வைத்த, பின் தான் சாப்பிடுகிறனாங்கள். 

சனி பகவானின் வாகனமும்  காகம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.